This entry is in the series 20100926_Issue

இளங்கோ


*
நகரத்தின் புதிர் நிறைந்த
பகலை
வெயில் நிரப்புகிறது
நிழலை இழுத்து வந்து..

மரங்கள் உதிர்க்கின்றன
மௌனத்தின் பழுப்பு நிறத்தை
அதைக் கடப்பவரின் நிழல் மீது..

இரவுக்கு முன்
ஒளிர்ந்து விடும் தெருவிளக்கு
காத்திருக்கிறது
தன்னை மொயப்பதற்கு ஈசல் கூட்டத்தை
எதிர்நோக்கி..

முளைக்கும் இறக்கைகள் மீது பிரியம் கொண்டு
சில நிமிடப் பறத்தலுக்கு
விளக்கின் நிழலுக்கு சிறகுகளைக்
காணிக்கையாக்குகின்றன

நகரத்தின் புதிர் நிறைந்த பகல்களைப் பற்றி
கவலைப்படாத ஈசல் கூட்டம்..

*****

Series Navigation