சுயம்
கயல்விழி கார்த்திகேயன்

அழுந்தத் தாழிடுகிறேன் கதவை
வெளித்தொடர்பு முழுதாய்த் துண்டித்து..
கழற்றி மாட்டுகிறேன்
துப்பட்டாவோடு என் சுமைகளையும்..
காலணி அவிழ்க்கும் போது
என் கவலைகளையும் சேர்த்து..
முகம் கழுவும்போது என்
முகமூடிகளையும் அடியோடு..
பயம், பகடு, பாசாங்கு
பொறாமை, பெருமை எனுமனைத்தும் நீங்கி
விளக்கை அணைக்கையில்
இருள் படர்கிறது என் சுயம் மீட்கப்பட்டு…
kayalkarthik91@gmail.com