இரவில் உதயமாகும் சூரியன்கள்…
கலாசுரன்
——————————————————————
நிதானம் நிதானம்
என்ற அதட்டலிலேயே
அவசரம் பழகி
பொறுமையின் கடிதங்கள்
கைமாற்றப்படுகின்றது
எதற்க்காக இது
என்பதறியாமல்
எழுதப்படும்
ஒவ்வொரு எழுத்தின்
வளைவுகளிலும்
புது வார்த்தைகள்
உதயமாகி
முன் நிற்கும் மற்றொன்றை
கருணை இல்லாது
கொன்றழித்து
சிரித்தபடி சிறந்ததென
கர்வம் வருட
இன்னொரு வளைவின்
உடைக்கப்பட்ட
விரிசலில் மறைந்து
தொடரும் புது உதயங்கள்
எல்லை அறியாது
அகாலத்தின் தூக்கத்திலான
இருளின் துளிர் கிள்ளி
கனவுகளை மலரச் செய்கிறது…
———————————————————-