This entry is in the series 20100905_Issue

இளங்கோ


*
மறுப்பேதும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை
அசைக்கும் கை நிழலுக்கு ஏற்ப
புரியாமல் பார்க்கிறது
குழந்தை..

யாரோடும் கொள்ளும் சிநேகத்தில்
துளை விழுந்த துணியை ஊடுருவும்
லேசர் பார்வைகள் ஏதுமில்லை
ஆனால் அதையும் கடந்த ஏதோ ஒன்று..
கூர்மை..

சின்னஞ்சிறிய எதிர்பார்ப்புகளில்
நிரம்பி வழிகிறது புன்னகை குழையும்
இதழோர எச்சில்..

புரியா மொழி பேசி..
புதிர் உலகுக்குள் நம்மை இழுக்கும்
வித்தை அறிந்த பிஞ்சு விரல்கள்
சமயத்தில் இறுகப்பற்றிக் கொள்கின்றன..
நம் நம்பிக்கைகளையோ
அல்லது
பலவீனமான சந்தேகங்களையோ..

அவைகளை
நொறுக்கும் வித்தை
புரோகிராம் செய்யப்பட்டு
அனுப்பிவைக்கப்பட்ட பிஞ்சு விரல்கள்..!

******
–இளங்கோ

Series Navigation