This entry is in the series 20100822_Issue

ஷம்மி முத்துவேல்


பகர்தலும் புசித்தலும்
இரு வேறன்ன உணர்தலால்
இழுத்தும் பின்பு விடுத்தும்
பிணைக்கப் படுகின்றது

கடிகாரத்தின்
நிசப்த நொடிகள்
ஒரு யுகத்தின் ஆயுள் கொண்டு
நிகழ்வுகள் நீள்கின்றன

நிச்சலனத்தின் அசுர ஒளியில்
தாக்கம் கொண்டு
சுவரோர மேலிடுக்கில்
இருட்டு விழிகள் கொண்ட
வாலறுந்த பல்லியொன்றின்
நாக்கு நீட்டலில் ஒட்டியிருந்தது
இரையின் பரிதவிப்பு

வலைக்கயிறு இறுக்கி முடித்து
இறுமாந்த சிலந்தியின் அலட்சிய நோக்கு
பிரிந்த ஓர் நூலிழையின்
துணை கொண்டு ஊஞ்சலாய்
மரணப் பயணம்

அமானுஷ்ய அமைதி பரவ
மௌனம் காக்கிறது
சிலந்திவலை

ஷம்மி முத்துவேல்
சின்ன தாராபுரம்

Series Navigation