வழியோரமாய் நிற்கிறது ஒரு பயணம்
கலாசுரன்

—————————————————————
எதிர்பார்ப்புகள் எதுவும்
மிச்சமாகாது
முகம் கவிழ்கிறது
ஒரு பார்வை
வந்த பாதைகளின் ஓரமாய்
அவர்கள் நின்றிருந்தார்கள்
இவ்வகைப் பயணங்கள்
அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்றவாறு..
தொலை தூரத் தொடர்புகள்
இன்னும் தெளிவாக்கப்படவில்லை
நன்றாகத் தெரிவது
கண்ணெட்டும் தூரம் வரையிலும்
பாதைகளின் வலைப் பின்னல்கள்
அவர்கள் பயணிக்காததின்
காரணம் புரிகிறது…
அப்பயணங்கள் வழியோரமாய் நின்றுவிடுகிறது
வரும் இன்னொருவரிடம் அதற்க்கான
காரணத்தை சொல்லமறுத்தவாறு ….!
—————————————————————-
கலாசுரன்