This entry is in the series 20110306_Issue

கலாசுரன்


சொல்லவந்த
மௌனங்களுக்கு
தங்களைப் பற்றி
சொல்வதற்கு
ஏராளம் இருந்தது

இருந்தும்
அவைகள்
தங்களின்
மௌனத்தன்மையை
விட்டுக்கொடுக்காதிருக்க

அவை
மௌனங்களாகவே இருந்தன

அவைகளை
மொழிபெயர்க்கும்
கனவுகளிலும்
ஓயாமல்
ஒலித்துக்கொண்டிருந்தது
நச்சரிக்கும் சிந்தனைகள்

இதயத்தை
நெடுகப் பிளந்தது..
மலர்ந்துகொண்டிருக்கும்
ஒரு பூவின்
வெடிப்புச் சப்தம்

மௌனங்கள்
மௌனங்களாகவே
இருக்கட்டும்
என்பதை

எவரிடமும் சொல்லாமல்
மௌனம்
நிலவுகிறது
*
***

Series Navigation