சொல்லவந்த மௌனங்கள்
கலாசுரன்
சொல்லவந்த
மௌனங்களுக்கு
தங்களைப் பற்றி
சொல்வதற்கு
ஏராளம் இருந்தது
இருந்தும்
அவைகள்
தங்களின்
மௌனத்தன்மையை
விட்டுக்கொடுக்காதிருக்க
அவை
மௌனங்களாகவே இருந்தன
அவைகளை
மொழிபெயர்க்கும்
கனவுகளிலும்
ஓயாமல்
ஒலித்துக்கொண்டிருந்தது
நச்சரிக்கும் சிந்தனைகள்
இதயத்தை
நெடுகப் பிளந்தது..
மலர்ந்துகொண்டிருக்கும்
ஒரு பூவின்
வெடிப்புச் சப்தம்
மௌனங்கள்
மௌனங்களாகவே
இருக்கட்டும்
என்பதை
எவரிடமும் சொல்லாமல்
மௌனம்
நிலவுகிறது
*
***