இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இருபதாவது அத்தியாயம்

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்.


இது Alexander Solzhenitsyn எழுதிய One Day in the Life of Ivan Denisovich புத்தகத்தின் தமிழாக்கம்.


எவ்வளவு குளிர் இருந்த போதிலும் தொப்பியுடன் அவன் சாப்பிடுவதில்லை. அதை கழட்டி வைத்துவிட்டு, தன் குவளையில் இருக்கும் சாப்பாட்டை உற்று பார்த்தான்.ரொம்பச் சுமாரான சாப்பாடு. சூப்பை அடியிலிருந்தும் எடுக்காமல், மேலிருந்தும் எடுக்காமல் நீர்க்கக் கொடுத்திருக்கிறார்கள். மற்றவர்களின் சூப்பிலிருந்து உருளைக் கிழங்குகளை எடுக்கக்கூட ஆள்தான் ஃபெடிகோவ்.

சூப்பின் ஒரே நல்ல விஷயம், அது சூடாக இருப்பதுதான். ஆனால் சுகாவிற்கோ நன்றாக ஆறிப் போயிருந்தது. ஆனாலும் எப்போதும்போல நிதானமாக சாப்பிட்டு முடித்தான். அவசர அவசரமாக முடிக்குமளவிற்கு ஒன்றுமில்லை; வீடும் பற்றி எரியவில்லை. தூக்கத்தை தவிர, ஒரு கைதி நிம்மதியாக இருப்பது – காலை சிற்றுண்டி சாப்பிடும் பத்து நிமிடம், மதிய சாப்பாட்டின் போது ஒரு ஐந்து, இரவு ஒரு ஐந்து நிமிடங்களே.

குளியல் அறைப் போல காற்று கனமாயிருந்தது. அறைக்குள் இருந்த வெட்பத்தை வெளியிலிருந்து வந்த குளிர் காற்று சந்தித்தது. குழுக்கள் மேஜையில் உட்கார்ந்துகொண்டோ, கூட்டமாய் நின்றுகொண்டோ, சாப்பாட்டு மேஜை காலியாவதற்கு காத்துக் கொண்டிருந்தார்கள்.ஒருவருக்கொருவர் கத்திக் கொண்டே குழுக்களிலிருந்து இரண்டு, மூன்று கைதிகள் குவளைகளில் கூழ் மற்றும் ரொட்டியை எடுத்துக்கொண்டு காலியான் மேஜையை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.பார்த்துப் போய்யா.அவனுக்குக் கேட்கவில்லை.டமார்,டமார்! ஒரு கை காலியாகத்தானே உள்ளது, அவன் பிடரியிலே ஒன்று போடவேண்டியதுதானே? வழியில நிக்காதீங்கப்பா, எதையாவது தட்டிவிடப் பார்க்காதீங்க!

ஒரு மூலை மேஜையில் ஒரு இளைஞன் உட்கார்ந்துகொண்டு தன் சாப்பாட்டிற்கு முன் பிரார்தனை செய்து கொண்டிருந்தான். அதாவது,மேற்கு உக்ரேனியன் – முகாமிற்கு புதியவன்.

எந்தக் கையால் சிலுவை குறி செய்து பிரார்த்திப்பது என ரஷ்யர்கள் மறந்திருந்தாகள். ஆதலால் இவன் மேற்கு உக்ரேனியன்.

அந்த குளிரான சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்துகொண்டு, தொப்பிக்களோடு பலரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சின்ன மீன்களை கோஸ் இலைகளுக்குக் கீழிருந்து பொறுக்கித் தின்று கொண்டும், அதன் எலும்புகளை மேஜையின் மேல் துப்பிக் கொண்டும் இருந்தனர். அந்த எலும்புகள் சின்ன மலை போல் குவிந்ததும், அடுத்து உட்காரும் குழு அதை தரையில் பெருக்கித் தள்ளிவிடும்.ஆனால் நேராகத் தரையில் துப்புவது அநாகரிகச் செயலாகக் கருதினர்.

104ஆம் பிரிவைச் சேர்ந்த ஃபெடிகோவ் நடுவில் இருந்த இரு குழுக்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான்.சுகாவின் சிற்றுண்டியை அவன் தான் வாங்கி வைத்திருந்தான்.குழுக்கு வெளியேயிருந்து பார்க்கும்போது உறுப்பினர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பர் – எண் போட்ட அவ்ர்களின் மேல்சட்டை ஒரேபோல இருக்கும் – ஆனால் குழுக்குள்ளே வெவ்வேறுமாதிரி இருப்பர். அவர்களுக்குள்ளே பல பதவிகள் உண்டு. உதாரணத்திற்கு, புய்நோஸ்கி அடுத்த கைதிகளின் உணவை பாதுகாத்துக் கொண்டிருக்கமாட்டான். சுகாவ் எந்தவிதமான வேலையையும் செய்ய மாட்டான். அவனுக்கு கீழே பலரும் இருந்தனர்.

ஃபெடிகோவ் சுகாவைப் பார்த்து அவன் இடத்தில் ஒரு பெருமூச்சுடன் உட்கார்ந்துகொண்டான்.

‘மிகவும் குளிராக இருக்கிறது. உன் சாப்பாட்டையும் சாப்பிட்டிருப்பேன். உன்னை லாக்-அப்பில் அடைத்துவிட்டார்கள் என நினைத்தேன்’

அவன் அதிக நேரம் அவனுடன் இல்லை. சுகாவிடம் தப்பி எந்த உணவும் அவனுக்குக் கிடைக்கப் போவதில்லை.

சுகாவ் தன் காலணிக்குளிருந்து ஸ்பூனை எடுத்துக்கொண்டான். அவனின் சிறிய புதையல். இது அவன் மேற்கே இருந்ததிலிருந்து அவனுடன் இருக்கிறது. அவன் கையாலேயே காய்ச்சிய அலுமினிய கம்பிகள். ‘Ust-Izhma 1944’ எனப் பொறித்துக் கொண்டான்.

கண்காணிப்பு கோபுரத்திலிருந்து இரண்டு சக்திவாய்ந்த விளக்க ஒளி அந்த முகாம் முழுவதையும் அளந்தது.எல்லை விளக்கு முதற்கொண்டு உள்விளக்குகள் கூட அந்த முகாமில் எறிந்துகொண்டிருந்தது.நட்சத்திரங்களுக்கே சவால் விடக்கூடிய அளவிற்கு அங்கு விளக்குகள் எறிந்துகொண்டிருந்தது.

காலுக்கடியில் பனி சரசரக்க கைதிகள் தங்கள் வேலையில் மும்முரமாக விரைந்துக் கொண்டிருந்தார்கள்.சிலர் தபால் அறைக்கும், வேறுசிலர் சிற்றுண்டியை கையில் எடுத்துக்கொண்டு சூடுசெய்ய விரைந்துகொண்டிருந்தனர்.எல்லோரும் தங்கள் தலையை மேல்சட்டைக்குள் குனிந்து புதைத்திருந்தனர். அப்போதைய குளிரை விட, நாள் முழுதும் அந்த குளிரில் இருக்கவேண்டியதை நினைத்ததால் ,அக்குளிர் எலும்பை உறைய வைப்பதுபோல் இருந்தது.தன் பழைய ராணுவ உடையணிந்த டார்டர் குளிரை பொருட்படுத்தாதது போல,மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.

அந்த முகாமிலிருந்த ஒரே செங்கள் கட்டிடமான உயரமான லாக் அப்பை சுற்றி நடந்தனர்.அம்முகாமின் சமையலறையை சுற்றியிருந்த கம்பிகளைத் தாண்டி சென்றுகொண்டிருந்தனர்.கண்காணிப்பு விடுதியைத் தாண்டி,அங்கு கம்பத்தின் மேல் தொங்கிக் கொண்டிருந்த வெப்பநிலைமானியைச் சுற்றி (இந்த வெப்பநிலைமானி குளிர் குறிப்பிட்ட அளவிற்கும் கீழே செல்வதை கண்காணிக்க) சென்றார்கள்.

சுகாவ் நம்பிக்கையுடன் அந்த பால் வெள்ளை குழாயைப் பார்த்தான். -41 வெப்ப அளவு இருந்தால் அவர்கள் வேலைக்கு போக வேண்டியதில்லை. ஆனால் இன்றோ -41 என்ற அளவிற்கு கொஞ்சம் கூட அருகில் இல்லை.

பணியாளர் அறைக்குள் சென்றார்கள். டார்டார் நேராக காவலாளி அறைக்கு சுகாவை கூட்டிச் சென்றான். அப்போதுதான் சுகாவ் ஒன்றை உணர்ந்தான். அவனை லாக் அப் அறைக்கு கூட்டிச் செல்லவில்லை.அந்த காவலாளியில் அறையின் தரையை சுத்தம் செய்யவே அவனை கூப்பிட்டிருந்தார்கள்.அந்த தரையை அழுத்தித் தேய்க்கச் சொல்லிவிட்டு டார்டார் அவனை அங்கே விட்டுவிடப்போகிறான்.

அந்தத் தரையைத் தேய்ப்பது ஒரு முக்கியமான கைதியின் கடமையாகும். அந்த கைதி முகாமில் வெளிவேலைக்கு செல்லாமல், அந்த பணியாளர் அறையில் வேலை செய்பவன். பணியாளர் அறையை எப்போதோ தன் வீட்டைப் போல பாவிக்கத்தொடங்கிவிட்டிருந்தான்.ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு தலைவரான தளபதியின் அலவலகத்திற்குள் அவனுக்கு அனுமதி இருந்தது. காவலாளிக்குத் தெரியாததுகூட வேலை செய்யும்போது அவனுக்கு கேட்கும். சில காலத்திற்குள் அவனுக்கு தலை கனம் ஏறிப்போனது. கீழ் மட்டத்தில் இருக்கும் மற்ற காவல் அறைகளின் தரையை சுத்தம் செய்வோரை தன்னைவிடத் தாழ்ந்தவராக கருதத் தொடங்கினான்.

வேலைக்கு அவனை பல சமயங்கள் கூப்பிட்டு அலுத்துப்போன காவலாளிகளுக்கு நடப்பவை புரிந்தது. அதற்குப் பிறகு மற்ற கைதிகளை தரை தேய்க்க கூப்பிட ஆரம்பித்தனர்.

காவலாளி அறையிலிருந்த அடுப்பு அனலை கக்கிக் கொண்டிருந்தது.கிழிந்த உடை அணிந்த இரு காவலாளிகள் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தனர். தன் மேல் சட்டை, காலணியை அணிந்து கொண்டிருந்த மூன்றாவது காவலாளி குறுகலான கட்டையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்.அந்த அறையின் மூலையில் காலியான வாளி அதனுள் கந்தல் துணியும் கிடந்தது.

சுகாவிற்கு மிக சந்தோசமாக இருந்தது. தன்னை விடுவித்ததற்காக டார்டரிடம் நன்றி சொன்னபோது – ‘இன்றிலிருந்து தாமதமாக எழ மாட்டேன்’ என்றும் சொன்னான்.

இந்த அறையின் விதி மிக சுலபம்; முடித்தவுடன் சென்றுவிடலாம். வேலை கொடுத்தவுடன் சுகாவிற்கு தன் மூட்டு வலி போனதுபோல இருந்தது.தன் கையுறையைக் கூட தன் தலையணைக்கு அடியிலிருந்து எடுக்க மறந்ததால், வாளியைத் வெறும்கைகளில் தூக்கிக்கொண்டு கிணறை நோக்கி ஓடினான்.

பல குழுத்தலைவர்கள் PPD அறைக்குச் செல்லுமுன் வெப்பநிலைமானி அருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்களில் சிறுவனான , சோவியத் யூனியனின் பழைய நட்சத்திரம் பிரகாசத்துடன் அந்தக் கருவியைத் துடைத்துக்கொண்டிருந்தான்.

சிலர் கீழிருந்து அலோசனையைக் கத்திக்கொண்டிருந்தனர்.

சுகாவ் காய்ந்த துணியால் நன்றாக தரையைச் சுத்தம் செய்தான்.பின்னர் அதை பிழியாமலேயே அடுப்பிற்கு பின்னால் தூக்கி எறிந்தான்.தன் வாலன்கி காலணிக்குள் நுழைந்து, மீதமுள்ள தண்ணீரை அதிகாரிகளின் பாதைவழியே இரைத்துவிட்டு,குளிக்கும் அறை வழியே குளிரான கிளப்பைத் தாண்டி சாப்பாட்டு அறைக்குள் சென்றான்.

இன்னமும் மருத்துவரிடம் சென்று விடுப்பு வாங்குமளவு உடம்பு சரியாகவில்லை. அவன் உடம்பு முழுவதும் ஒரே வலி. அந்த சாப்பாட்டு அறைக்கு வெளியே இருந்த காவலாளியை வேறு ஏமாற்றவேண்டும். அந்த முகாமின் தளபதி விடுத்த கட்டளை படி – சுதந்திரமாக முகாமில் சுற்றும் கைதிகளை பிடித்து லாக்-அப்பிலுள் அடைக்க வேண்டும்.

அவன் நல்ல நேரம் – அந்த காலை வேளையில், சாப்பாட்டு அறைக்கு முன் கூட்டமில்லை, வரிசையுமில்லை. நடந்து நுழைந்தான்.

குளியல் அறைப் போல காற்று கனமாயிருந்தது. அறைக்குள் இருந்த வெட்பத்தை வெளியிலிருந்து வந்த குளிர் காற்று சந்தித்தது. குழுக்கள் மேஜையில் உட்கார்ந்துகொண்டோ, கூட்டமாய் நின்றுகொண்டோ, சாப்பாட்டு மேஜை காலியாவதற்கு காத்துக் கொண்டிருந்தார்கள்.ஒருவருக்கொருவர் கத்திக் கொண்டே குழுக்களிலிருந்து இரண்டு, மூன்று கைதிகள் குவளைகளில் கூழ் மற்றும் ரொட்டியை எடுத்துக்கொண்டு காலியான் மேஜையை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.பார்த்துப் போய்யா.அவனுக்குக் கேட்கவில்லை.டமார்,டமார்! ஒரு கை காலியாகத்தானே உள்ளது, அவன் பிடரியிலே ஒன்று போடவேண்டியதுதானே? வழியில நிக்காதீங்கப்பா, எதையாவது தட்டிவிடப் பார்க்காதீங்க!

ஒரு மூலை மேஜையில் ஒரு இளைஞன் உட்கார்ந்துகொண்டு தன் சாப்பாட்டிற்கு முன் பிரார்தனை செய்து கொண்டிருந்தான். அதாவது,மேற்கு உக்ரேனியன் – முகாமிற்கு புதியவன்.

எந்தக் கையால் சிலுவை குறி செய்து பிரார்த்திப்பது என ரஷ்யர்கள் மறந்திருந்தாகள். ஆதலால் இவன் மேற்கு உக்ரேனியன்.

அந்த குளிரான சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்துகொண்டு, தொப்பிக்களோடு பலரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சின்ன மீன்களை கோஸ் இலைகளுக்குக் கீழிருந்து பொறுக்கித் தின்று கொண்டும், அதன் எலும்புகளை மேஜையின் மேல் துப்பிக் கொண்டும் இருந்தனர். அந்த எலும்புகள் சின்ன மலை போல் குவிந்ததும், அடுத்து உட்காரும் குழு அதை தரையில் பெருக்கித் தள்ளிவிடும்.ஆனால் நேராகத் தரையில் துப்புவது அநாகரிகச் செயலாகக் கருதினர்.

104ஆம் பிரிவைச் சேர்ந்த ஃபெடிகோவ் நடுவில் இருந்த இரு குழுக்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான்.சுகாவின் சிற்றுண்டியை அவன் தான் வாங்கி வைத்திருந்தான்.குழுக்கு வெளியேயிருந்து பார்க்கும்போது உறுப்பினர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பர் – எண் போட்ட அவ்ர்களின் மேல்சட்டை ஒரேபோல இருக்கும் – ஆனால் குழுக்குள்ளே வெவ்வேறுமாதிரி இருப்பர். அவர்களுக்குள்ளே பல பதவிகள் உண்டு. உதாரணத்திற்கு, புய்நோஸ்கி அடுத்த கைதிகளின் உணவை பாதுகாத்துக் கொண்டிருக்கமாட்டான். சுகாவ் எந்தவிதமான வேலையையும் செய்ய மாட்டான். அவனுக்கு கீழே பலரும் இருந்தனர்.

ஃபெடிகோவ் சுகாவைப் பார்த்து அவன் இடத்தில் ஒரு பெருமூச்சுடன் உட்கார்ந்துகொண்டான்.

‘மிகவும் குளிராக இருக்கிறது. உன் சாப்பாட்டையும் சாப்பிட்டிருப்பேன். உன்னை லாக்-அப்பில் அடைத்துவிட்டார்கள் என நினைத்தேன்’

அவன் அதிக நேரம் அவனுடன் இல்லை. சுகாவிடம் தப்பி எந்த உணவும் அவனுக்குக் கிடைக்கப் போவதில்லை.

சுகாவ் தன் காலணிக்குளிருந்து ஸ்பூனை எடுத்துக்கொண்டான். அவனின் சிறிய புதையல். இது அவன் மேற்கே இருந்ததிலிருந்து அவனுடன் இருக்கிறது. அவன் கையாலேயே காய்ச்சிய அலுமினிய கம்பிகள். ‘Ust-Izhma 1944’ எனப் பொறித்துக் கொண்டான்.

எவ்வளவு குளிர் இருந்த போதிலும் தொப்பியுடன் அவன் சாப்பிடுவதில்லை. அதை கழட்டி வைத்துவிட்டு, தன் குவளையில் இருக்கும் சாப்பாட்டை உற்று பார்த்தான்.ரொம்பச் சுமாரான சாப்பாடு. சூப்பை அடியிலிருந்தும் எடுக்காமல், மேலிருந்தும் எடுக்காமல் நீர்க்கக் கொடுத்திருக்கிறார்கள். மற்றவர்களின் சூப்பிலிருந்து உருளைக் கிழங்குகளை எடுக்கக்கூட ஆள்தான் ஃபெடிகோவ்.

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

தமிழில்: ரா.கிரிதரன்


நிரந்தர வருமானம் வரும் வேலையில்லை. ஆனாலும் ஒரு மாதத்திற்கு ஒரு கோல்கோஸாவது வருமானம் வரும். இதன் மூலம் அந்த நாடு முழுவதும் சுற்றி வேலைப் பார்க்கத் தொடங்கினார்கள். நேரத்தை மிச்சப்படுத்த விமானத்தில் நாடு முழுவதும் பயணம் செய்யத் தொடங்கினார்கள். வருடமுழுவதும் இப்படி வேலைப் பார்த்து பல்லாயிரம் ரூபிள்களை ஈட்டத் தொடங்கினர். பழைய விரிப்பிலிருந்து ஒரு தரைவிரிப்பை செய்து வண்ணம் தீட்டினால், ஐம்பது ரூபிள் கிடைக்கும். ஒரு மணிநேரத்தில் இந்த வேலையை முடித்து விடுவார்கள்.

சுகாவ் ஊருக்குத் திரும்பியவுடன் இந்த வேலையை எடுத்து நடத்துவானென அவன் மனைவி திடமாக நம்பினாள். தற்போதிருக்கும் ஏழ்மை நிலையிலிருந்து விலகி, பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவார்கள். பழைய வீட்டை இடித்து நல்ல புதிய வீட்டைக் கட்டவும் காத்திருந்தாள். எல்லா தரைவிரிப்பு வண்ணம் பூசும் குடும்பமும் புது வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்தன. ரயில் நிலையத்தருகே இருக்கும் வீடுகள் ஐந்தாயிரம் ரூபிளிலிருந்து இருபத்தைந்து ஆயிரம் ரூபிள் ஏறிவிட்டது.

இதுவரை வாழ்வில் ஒரு முறைக் கூட வண்ணம் தீட்டத் தெரியாத தன்னால் எப்படி திடீரென வண்ணம் தீட்ட முடியுமென சுகாவ் தன் மனைவியிடம் கேட்டான். அந்த அழகிய தரைவிரிப்புகள் எங்கிருந்து வந்தன? அதன் கலவையை எப்படி உருவாக்குவது? சுத்த முட்டாளால் மட்டுமே அந்த வடிவங்களான வண்ணத்தை அடிக்க முடியாதென அவன் மனைவி பதிலலித்தாள். சின்ன சின்ன ஓட்டைவழியே வரைந்து, அதில் வண்ணத்தை நிரப்ப வேண்டியது மட்டுமே அந்த வேலை என அவள் குறிப்பிட்டாள். அவள் எழுதிய கடிதத்தில், மொத்தம் மூன்று விதமான தரை விரிப்புகள் இருப்பதாய் விவரித்தாள்.

1. `ட்ரோய்க்கா` – சில மேலதிகாரிகள் குதிரை ஓட்டுவது போல் இருக்கும் படங்கள்

2. `ரியிண்டீர்` – சில மிருகங்கள், குறிப்பாக நான்கு கால் உடையவை

3. பெர்ஷியன் கம்பளங்கள் போன்ற வண்ணங்கள்.

வேறுவிதமான வடிவங்கள் இல்லை. இந்த நாட்டில் உள்ள அனைவரும் மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சந்தோஷமாக இருப்பதாய் அவள் தெரிவித்தாள். ஏனென்றால், நல்ல தரமான தரைவிரிப்புகள் பல ஆயிரம் ரூபிள்கள் இருக்கும்; இவை ஐம்பது ரூபிள் மட்டுமே.

அப்படிப்பட்ட தரை விரிப்புகளை எப்போது காண்போம் என் சுகாவ் இருப்பில்லாமல் தவித்தான்!!

சிறையிலும், முகாமிலும் அடுத்த நாட்களை திட்டமிடுவதைக் கூட கைவிட்டிருந்தான். அவன் குடும்ப திட்டங்களையும், அடுத்த வருட திட்டங்களையும் கூட அவன் சிந்திப்பதில்லை. அந்த முகாமின் அதிகாரிகள் அவனுக்காக அதைச் செய்கின்றனரே – மிகச் சுலபமான வழியில்லையா?

இன்னும் இரு வெயில் காலங்களும், இரு குளிர் காலங்களும் அவனுக்கு தண்டனை மிச்சமிருந்தது. ஆனாலும் அந்த தரைவிரிப்புகளே அவன் மூளையை அரித்துக்கொண்டிருந்தது….

பாருங்கள், சுலபமாகவும், வேகமாகவும் பணம் செய்ய வழியிருக்கிறதே. அவன் கிராமத்து மக்களை விட பின் தங்கிப் போய்விட்டதில் அவன் மேலேயே அவனுக்கு இரக்கம் வந்தது.. ஆனாலும், சத்தியமாக அவன் ஒரு தரைவிரிப்புகள் தயாரிப்பவனாக மாற விருப்பமில்லை. மக்களுடன் நல்லபடியாகப் பழக வேண்டும், கொஞ்சம் சோப்பு போடவேண்டும்.ஜால்ரா தட்டி வாழ வேண்டுமே.

இந்த உலகத்தில் நாற்பது ஆண்டுகள் உழண்டாலும், பாதி பற்கள் காணாமல் போயிருந்தாலும், முன் வழுக்கை விழுந்திருந்தாலும், இதுவரை லஞ்சம் வாங்கியது கிடையாது- கொடுத்ததும் கிடையாது. முகாமில் கூட இந்த நல்ல விஷயங்களை அவன் கற்றுக் கொள்ளவில்லை.

சுலபமாக சம்பாதித்த பணம் கைகளில் இருப்பதே தெரியாது; நாம் சம்பாதித்தது போல வராது. பழைய பஞ்சாங்க பழமொழி ஞாபகத்திற்கு வந்தது – குறைவு பணம் , குறைவான தேவை. நல்ல திடகாத்தமான உடலும், ஆரோக்கியமான இரு கைகளும் இருக்கிறது. வெளியே போனவுடன் தச்சு வேலையோ, பாத்திரங்களை சரி செய்யும் வேலையோ கண்டிப்பாகக் கிடைக்கும்.

அவன் ஜீவாதார உரிமையை பறித்து எங்குமே வேலை செய்ய முடியாதபடி போனாலோ அல்லது இங்கிருந்து வெளியே போக முடியாவிட்டால் மட்டுமே தரைவிரிப்புகள் வேலையை எடுத்துக் கொள்வான்.

இதற்கிடையே மின்னிலையத்திலிருந்து சுவர் ஒன்று தரையோடு பிளந்துவிட்டதாக செய்தி வந்தது. அந்த சுவர் பாதி இருக்கும்போது அதில் வேலைப் பார்த்த இருவர் அங்கிருந்து கண்காணிப்பு கோபுரத்திற்கு சென்று விட்டனர். அந்த கோபுரத்தை கண்காணிக்காமல் விட்டால், மின்னிலையம் யாருக்கும் தேவைப்படாமல் இருக்கும்.

தலைமைக் காவலாளி, ஒரு பெரிய துப்பாக்கியைத் தன் தோளில் சாய்த்தபடி, கண்காணிப்பு கோட்டையை நெருங்கினான். அதன் புகைக் கூண்டிலிருந்து புகை அளவுக்கதிகமாக வந்துகொண்டிருந்தது. சுகாவைப் போன்ற ஒரு கைதி கண்காணிப்பாளன் போல் இரவு முழுவதும் சிமெண்டி திருட்டைத் த்டுக்க அங்கே காவலுக்கு இருப்பான்.

தூரத்தில், பெரிய சிகப்புச் சூரியன் வேகவேகமாக மேலே எழும்பிக்கொண்டிருந்தது. அதன் கதிர்கள் முகாமின் பல அடுக்குகளையும், கட்டிடங்களிலும் பட்டு தகதகத்துக்கொண்டிருந்தன. சுகாவுக்கு பக்கத்தில் நின்றிருந்த அய்லோஷா சூரியனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.

கண்காணிப்பு வீட்டிற்குப் பிறகே அலுவலகம் இருந்தது. அதற்கு அருகே வேலைச் செயலர் அலுவலகம். குழுத் தலைவர்களை உள்ளே வரச் சொன்னார்கள். டெர் கூட அங்கிருந்தான். அவன் பழைய குற்றவாளி. ஆனால் இப்போது கண்காணிப்பாளன் வேலை. அரக்கன். கைதிகளை நாயை விட கீழ்த்தரமாக நடத்துவான்.

எட்டு மணி. ஐந்து நிமிடம் கழிந்திருந்தது.கைதிகள் அங்குமிங்கும் அலைந்து பிரிந்து போய்விடுவார்களென காவலாளிகளுக்கு பயமாயிருந்தது. கைதிகளுக்கோ நிறைய சமயம் இருந்தது. கட்டடங்கள் இருக்கும் இடத்தில் நுழையும் அனைவரும் சுள்ளிகளைப் பொறுக்கத் தொடங்கினர் – நெருப்புக்கு பயன்படும்.

டியூரின் பாவ்லோவையும் தன் கூட அழைத்து அலுவலகத்தினுள் நுழைந்தான்.ட்சேசாரும் உள்ளே நுழைந்தான்.ட்சேசார் வசதி படைத்தவன். ஒரு மாதத்தில் இரண்டு பொட்டலங்கள். யார்யாரை காக்காய் பிடிக்க வேண்டுமே பிடிப்பான். இந்த அலுவலகத்திலே நல்ல நிலைமையில் வேலை செய்து வருகிறான்.

குழுவில் மற்றவர்கள் ஒதுக்குப்புரமான ஒரு இடத்தில் உட்கார்ந்தனர்.

யாருமற்ற அந்த பாலைவனத்தில் சூரியன் சிகப்பாய் எழும்பியது. ஓரிடத்தில் கத்தையான கதிர்கள் பனியை உருக்கத்தொடங்க, மற்றொரு இடத்தில் மரத்துண்டுகளைப் போட்டு நெருப்பு கொளுத்திக்கொண்டிருந்தனர். இங்கு ஒரு இரும்பு கம்பி, அங்கு தேவையில்லாத இரும்புகள் சிதறி இருந்தன. அந்த இடத்தில் பலதரப்பட்ட குழிகளும், மேடுகளும் அங்கிமிங்கும் இருந்தன. வண்டிகளை பழுது பார்க்கும் கட்டிடத்தில் கூரையை போட தயாராக இருந்தது. ஒரு மேடான இடத்தில் நின்றிருந்த மின்நிலையத்தில் இரண்டாவது மாடியை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

இப்போது ஒருவரும் அருகில் இல்லை. ஆறு கண்காணிப்பாளர்கள் கோபுரங்களிலும், சிலர் அலுவலகத்தினுள் அலைந்து கொண்டும் இருந்தனர். அந்த நொடி கைதிகளுக்குறியது.

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினெட்டாவது அத்தியாயம்

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

அலெக்ஸாந்தர் சோல்செனிட்ஸன் தமிழில்: ரா.கிரிதரன்


சுகாவ் சுற்றிப் பார்த்து, தன் குழுத்தலைவரைக் கண்டுபிடித்தான். டியூரின், கடைசி ஐந்து கைதிகளில் ஒருவராய் நடந்து கொண்டிருந்தார். அகலமான தோள்களும்,அதற்கிணையான முக வடிவையும் கொண்டவர். இறுக்கமான முகத்துடன் நின்றுகொண்டிருந்தார். ஒரு சிரிப்பில்லை, களிப்பில்லை. ஆனாலும், தன் குழுவுக்கு போதுமான அளவில் சாப்பாடு கிடைக்க பாடுபடுவார். இரண்டாவது முறை முகாமில் வேலை செய்து கொண்டிருக்கிறார். குலாக்(முகாம் முறைமை அலுவல்) என்ற அமைப்பின் உண்மையான ஊழியன். அதனாலேயே முகாமைப் பற்றி எல்லாமே தெரியும்.

முகாம்களில் குழுத் தலைவர்களே கைதிகளுக்கு முதன்மையானவர்கள்; நல்லவன் இரண்டாவது வாழ்வு கொடுத்து வெளியே அனுப்புவான், கெட்டவனோ சவக்குழியில் போட்டடைப்பான். ஆண்ட்ரீ டியூரினை சுகாவுக்கு உஸ்டிஸ்மாவின் காலகட்டத்திலேயே தெரியும். ஆனால், டியூரின் குழுவில் அப்போது அவன் இல்லை.ஆனால், அரசியல் காரணங்களுக்காக கைதி செய்தவர்களை வேறொரு முகாமிற்கு மாற்றும் போது, டியூரின் சுகாவை தன் குழுவில் சேர்த்துக் கொண்டான்.குழு அமைப்பிற்கோ, பிபிடி என்ற குழு நிற்வாக அமைப்புடனோ சுகாவிற்கு எந்த தொடர்பும் இல்லை.அதெல்லாம் குழுத் தலைவனின் வேலை. இரும்பு கவசம் போல அவர்களை காப்பாற்ற குழுத் தலைவனால் முடியும். இதற்கு கைமாறாக, டியூரின் புருவத்தை உயர்த்தினாலோ, விரலை அசைத்தாலோ – உடனே நீங்கள் அவனுக்காக ஓடி வேலை செய்வீர்கள்.

முகாமில் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். ஆனால், குழுத் தலைவனை மட்டும் ஏமாற்றக் கூடாது. அப்போதுதான் வாழ முடியும்.

டியூரினிடம் அதற்கு முன் தினம் வேலை செய்த எடத்திலே வேலை செய்ய வேண்டுமா அல்லது புதிய இடத்திற்கு செல்ல வேண்டுமா என சுகாவ் கேட்க நினைத்தான். ஆனால், அவன் எண்ணங்களைத் தடையாக இருக்குமோ எனக் கேட்கவில்லை.சோஸியலிஸ்ட் வாழ்வுமுறை குடியிருப்பில் வேலை செய்வதை இப்போது தான் தவிர்த்திருந்தான். தன் குழுவின் ஐந்து நாள் சாப்பாட்டி டேஷனை நிர்ணையிக்கும் வழிமுறையில் சிக்கிக்கொள்வோமோ என்ற பயம் ஏற்பட்டது.

டியூரின் முகத்தில் பல கவலை ரேகைகள் தெரிந்தன. காற்றை எதிர்நோக்கி நின்றுகொண்டிருந்தாலும், எந்த தசைகளும் அசையவில்லை. மரப்பட்டைகளைப் போல் அவன் தோல் தடிமனாயிருந்தது.

திடலில், கைதிகள் கைகளைத் தட்டிக்கொண்டும், கால்களால் மிதித்துக்கொண்டும் இருந்தனர். காற்றும் பலமாக இருந்தது. `கிளிகள்` எனக் கைதிகளால் அழைக்கப்படும் கோபுர காவலாளிகள் ஆறு கோபுரங்களிலும் நின்று கொண்டிருந்தனர். ஆனாலும் கைதிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. கண்காணிப்பின் மூலம் உயிரை எடுத்து விடுவார்கள்.

இதோ வந்து விட்டனர். தலைமைக் காவலாளி வேலை-சோதனைக்காக ஒரு கோபுரத்திலிருந்து வெளியே வந்தான்.கதவின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டனர். கதவு அகலமாகத் திறந்து கொண்டது.

`ஐந்தைந்தாய் நில்லுங்கள். ஒன்று, இரண்டு, மூன்று…`

வரிசைப் படி, அணிவகுப்புபோல் , கைதிகள் நடந்து சென்றனர். உள்ளே சென்றுவிடவேண்டும் – அது மட்டுமே அவர்களுக்கு வேண்டும். அதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டுமென யாரும் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை.

கண்காணிப்பு வீட்டிற்குப் பிறகே அலுவலகம் இருந்தது. அதற்கு அருகே வேலைச் செயலர் அலுவலகம். குழுத் தலைவர்களை உள்ளே வரச் சொன்னார்கள். டெர் கூட அங்கிருந்தான். அவன் பழைய குற்றவாளி. ஆனால் இப்போது கண்காணிப்பாளன் வேலை. அரக்கன். கைதிகளை நாயை விட கீழ்த்தரமாக நடத்துவான்.

எட்டு மணி. ஐந்து நிமிடம் கழிந்திருந்தது.கைதிகள் அங்குமிங்கும் அலைந்து பிரிந்து போய்விடுவார்களென காவலாளிகளுக்கு பயமாயிருந்தது. கைதிகளுக்கோ நிறைய சமயம் இருந்தது. கட்டடங்கள் இருக்கும் இடத்தில் நுழையும் அனைவரும் சுள்ளிகளைப் பொறுக்கத் தொடங்கினர் – நெருப்புக்கு பயன்படும்.

டியூரின் பாவ்லோவையும் தன் கூட அழைத்து அலுவலகத்தினுள் நுழைந்தான்.ட்சேசாரும் உள்ளே நுழைந்தான்.ட்சேசார் வசதி படைத்தவன். ஒரு மாதத்தில் இரண்டு பொட்டலங்கள். யார்யாரை காக்காய் பிடிக்க வேண்டுமே பிடிப்பான். இந்த அலுவலகத்திலே நல்ல நிலைமையில் வேலை செய்து வருகிறான்.

குழுவில் மற்றவர்கள் ஒதுக்குப்புரமான ஒரு இடத்தில் உட்கார்ந்தனர்.

யாருமற்ற அந்த பாலைவனத்தில் சூரியன் சிகப்பாய் எழும்பியது. ஓரிடத்தில் கத்தையான கதிர்கள் பனியை உருக்கத்தொடங்க, மற்றொரு இடத்தில் மரத்துண்டுகளைப் போட்டு நெருப்பு கொளுத்திக்கொண்டிருந்தனர். இங்கு ஒரு இரும்பு கம்பி, அங்கு தேவையில்லாத இரும்புகள் சிதறி இருந்தன. அந்த இடத்தில் பலதரப்பட்ட குழிகளும், மேடுகளும் அங்கிமிங்கும் இருந்தன. வண்டிகளை பழுது பார்க்கும் கட்டிடத்தில் கூரையை போட தயாராக இருந்தது. ஒரு மேடான இடத்தில் நின்றிருந்த மின்நிலையத்தில் இரண்டாவது மாடியை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

இப்போது ஒருவரும் அருகில் இல்லை. ஆறு கண்காணிப்பாளர்கள் கோபுரங்களிலும், சிலர் அலுவலகத்தினுள் அலைந்து கொண்டும் இருந்தனர். அந்த நொடி கைதிகளுக்குறியது.
girigopalan@gmail.com

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

அலெக்ஸாந்தர் சோல்சனிட்சன் – தமிழில்: ரா.கிரிதரன்


சுகாவுக்கு இந்த விஷயம் சரியாகப் புரியவில்லை. ‘கிராமத்தில் வாழ்ந்துகொண்டே, நகரத்தில் வேலை செய்ய முடியுமா?’ அவன் கிராமத்தில் பல தலைமுறைகளாய் விவசாயம் செய்து வந்துள்ளனர் – ஆனாலும் தங்களுக்காக அவர்கள் வேலை செய்யவில்லை. வருடா வருடன் அறுவடை செய்வதை விட்டுவிட்டனர் என அவன் மனைவி கூறியிருந்தாள்.

தச்சு வேலைகளும் செய்வதை நிறுத்தியிருந்தனர். அவர்கள் ஊரிலேயே மிகவும் செல்வாக்கானவர்கள் செய்யும் வேலை தச்சுத் தொழில். கூடைகள் பிண்ணுவதும் நல்ல வருமானமுள்ள தொழில் தான். அதையும் அவர்கள் செய்வதில்லை. இதையெல்லாம் மீறி தரைவிரிப்புகளுக்கு வண்ணம் பூசும் வேலையை ஒத்துக்கொண்டனர். யுத்தத்திலிருந்து கரித்துண்டுகளையும், வண்ண குப்பிக்களையும் கொண்டுவந்திருந்தனர்.சீக்கிரமாக அந்த வேலை மிகப் பிரபலமானது. தரைவிரிப்புகளுக்கு வண்ணம் பூசுவோர் அதிகமானார்கள்.

நிரந்தர வருமானம் வரும் வேலையில்லை. ஆனாலும் ஒரு மாதத்திற்கு ஒரு கோல்கோஸாவது வருமானம் வரும். இதன் மூலம் அந்த நாடு முழுவதும் சுற்றி வேலைப் பார்க்கத் தொடங்கினார்கள். நேரத்தை மிச்சப்படுத்த விமானத்தில் நாடு முழுவதும் பயணம் செய்யத் தொடங்கினார்கள். வருடமுழுவதும் இப்படி வேலைப் பார்த்து பல்லாயிரம் ரூபிள்களை ஈட்டத் தொடங்கினர். பழைய விரிப்பிலிருந்து ஒரு தரைவிரிப்பை செய்து வண்ணம் தீட்டினால், ஐம்பது ரூபிள் கிடைக்கும். ஒரு மணிநேரத்தில் இந்த வேலையை முடித்து விடுவார்கள்.

சுகாவ் ஊருக்குத் திரும்பியவுடன் இந்த வேலையை எடுத்து நடத்துவானென அவன் மனைவி திடமாக நம்பினாள். தற்போதிருக்கும் ஏழ்மை நிலையிலிருந்து விலகி, பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவார்கள். பழைய வீட்டை இடித்து நல்ல புதிய வீட்டைக் கட்டவும் காத்திருந்தாள். எல்லா தரைவிரிப்பு வண்ணம் பூசும் குடும்பமும் புது வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்தன. ரயில் நிலையத்தருகே இருக்கும் வீடுகள் ஐந்தாயிரம் ரூபிளிலிருந்து இருபத்தைந்து ஆயிரம் ரூபிள் ஏறிவிட்டது.

இதுவரை வாழ்வில் ஒரு முறைக் கூட வண்ணம் தீட்டத் தெரியாத தன்னால் எப்படி திடீரென வண்ணம் தீட்ட முடியுமென சுகாவ் தன் மனைவியிடம் கேட்டான். அந்த அழகிய தரைவிரிப்புகள் எங்கிருந்து வந்தன? அதன் கலவையை எப்படி உருவாக்குவது? சுத்த முட்டாளால் மட்டுமே அந்த வடிவங்களான வண்ணத்தை அடிக்க முடியாதென அவன் மனைவி பதிலலித்தாள். சின்ன சின்ன ஓட்டைவழியே வரைந்து, அதில் வண்ணத்தை நிரப்ப வேண்டியது மட்டுமே அந்த வேலை என அவள் குறிப்பிட்டாள். அவள் எழுதிய கடிதத்தில், மொத்தம் மூன்று விதமான தரை விரிப்புகள் இருப்பதாய் விவரித்தாள்.

1. `ட்ரோய்க்கா` – சில மேலதிகாரிகள் குதிரை ஓட்டுவது போல் இருக்கும் படங்கள்

2. `ரியிண்டீர்` – சில மிருகங்கள், குறிப்பாக நான்கு கால் உடையவை

3. பெர்ஷியன் கம்பளங்கள் போன்ற வண்ணங்கள்.

வேறுவிதமான வடிவங்கள் இல்லை. இந்த நாட்டில் உள்ள அனைவரும் மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சந்தோஷமாக இருப்பதாய் அவள் தெரிவித்தாள். ஏனென்றால், நல்ல தரமான தரைவிரிப்புகள் பல ஆயிரம் ரூபிள்கள் இருக்கும்; இவை ஐம்பது ரூபிள் மட்டுமே.

அப்படிப்பட்ட தரை விரிப்புகளை எப்போது காண்போம் என் சுகாவ் இருப்பில்லாமல் தவித்தான்!!

சிறையிலும், முகாமிலும் அடுத்த நாட்களை திட்டமிடுவதைக் கூட கைவிட்டிருந்தான். அவன் குடும்ப திட்டங்களையும், அடுத்த வருட திட்டங்களையும் கூட அவன் சிந்திப்பதில்லை. அந்த முகாமின் அதிகாரிகள் அவனுக்காக அதைச் செய்கின்றனரே – மிகச் சுலபமான வழியில்லையா?

இன்னும் இரு வெயில் காலங்களும், இரு குளிர் காலங்களும் அவனுக்கு தண்டனை மிச்சமிருந்தது. ஆனாலும் அந்த தரைவிரிப்புகளே அவன் மூளையை அரித்துக்கொண்டிருந்தது….

பாருங்கள், சுலபமாகவும், வேகமாகவும் பணம் செய்ய வழியிருக்கிறதே. அவன் கிராமத்து மக்களை விட பின் தங்கிப் போய்விட்டதில் அவன் மேலேயே அவனுக்கு இரக்கம் வந்தது.. ஆனாலும், சத்தியமாக அவன் ஒரு தரைவிரிப்புகள் தயாரிப்பவனாக மாற விருப்பமில்லை. மக்களுடன் நல்லபடியாகப் பழக வேண்டும், கொஞ்சம் சோப்பு போடவேண்டும்.ஜால்ரா தட்டி வாழ வேண்டுமே.

இந்த உலகத்தில் நாற்பது ஆண்டுகள் உழண்டாலும், பாதி பற்கள் காணாமல் போயிருந்தாலும், முன் வழுக்கை விழுந்திருந்தாலும், இதுவரை லஞ்சம் வாங்கியது கிடையாது- கொடுத்ததும் கிடையாது. முகாமில் கூட இந்த நல்ல விஷயங்களை அவன் கற்றுக் கொள்ளவில்லை.

சுலபமாக சம்பாதித்த பணம் கைகளில் இருப்பதே தெரியாது; நாம் சம்பாதித்தது போல வராது. பழைய பஞ்சாங்க பழமொழி ஞாபகத்திற்கு வந்தது – குறைவு பணம் , குறைவான தேவை. நல்ல திடகாத்தமான உடலும், ஆரோக்கியமான இரு கைகளும் இருக்கிறது. வெளியே போனவுடன் தச்சு வேலையோ, பாத்திரங்களை சரி செய்யும் வேலையோ கண்டிப்பாகக் கிடைக்கும்.

அவன் ஜீவாதார உரிமையை பறித்து எங்குமே வேலை செய்ய முடியாதபடி போனாலோ அல்லது இங்கிருந்து வெளியே போக முடியாவிட்டால் மட்டுமே தரைவிரிப்புகள் வேலையை எடுத்துக் கொள்வான்.

இதற்கிடையே மின்னிலையத்திலிருந்து சுவர் ஒன்று தரையோடு பிளந்துவிட்டதாக செய்தி வந்தது. அந்த சுவர் பாதி இருக்கும்போது அதில் வேலைப் பார்த்த இருவர் அங்கிருந்து கண்காணிப்பு கோபுரத்திற்கு சென்று விட்டனர். அந்த கோபுரத்தை கண்காணிக்காமல் விட்டால், மின்னிலையம் யாருக்கும் தேவைப்படாமல் இருக்கும்.

தலைமைக் காவலாளி, ஒரு பெரிய துப்பாக்கியைத் தன் தோளில் சாய்த்தபடி, கண்காணிப்பு கோட்டையை நெருங்கினான். அதன் புகைக் கூண்டிலிருந்து புகை அளவுக்கதிகமாக வந்துகொண்டிருந்தது. சுகாவைப் போன்ற ஒரு கைதி கண்காணிப்பாளன் போல் இரவு முழுவதும் சிமெண்டி திருட்டைத் த்டுக்க அங்கே காவலுக்கு இருப்பான்.

தூரத்தில், பெரிய சிகப்புச் சூரியன் வேகவேகமாக மேலே எழும்பிக்கொண்டிருந்தது. அதன் கதிர்கள் முகாமின் பல அடுக்குகளையும், கட்டிடங்களிலும் பட்டு தகதகத்துக்கொண்டிருந்தன. சுகாவுக்கு பக்கத்தில் நின்றிருந்த அய்லோஷா சூரியனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.

இப்போது சிரித்து மகிழ்வோடிருக்க என்ன நடந்தது?

அவன் கன்னங்கள் உள்வாங்கியிருந்தது, வேலை ஏதும் செய்து சம்பாதிக்காமல் முகாமின் ரேஷனையே நம்பி வாழ்பவன்.

மற்ற பாப்டிஸ்களுடன் பகல் முழுவதும் செலவு செய்வான்.ஒரு பறவையின் முதுகில் இருக்கும் தண்ணீரைத் தள்ளுவதுபோல், முகாமின் கொடுமைகளைக் கையால் தள்ளிவிடுவார்கள்.

அணிவகுப்பின் போது, சுகாவின் முகத் துணி நன்றாக ஈரமாகியிருந்தது.சில இடங்களில் பனி படர்ந்து போயிருந்தன.அதை முகத்திலிருந்து கழுத்துக்கு கீழிறக்கி காற்றிற்கு எதிர் திசையில் முதுகைக் காட்டி நின்றான்.குளிர் தெரியாமல் பல இடங்களை மறைத்து விட்டாலும், அவன் கைகள் மரத்துப் போயிருந்தன.

இடது கால் விரல்களும் மரத்து விட்டன; சரியாக காலுறை அணியாத அதே இடது கால் தான் அது.ஏற்கனவே இரு முறை காலணியின் கீழ்பகுதியைத் தைத்துவிட்டான்.

தலையின் பின்பக்கமும், உடம்பு முழுவதும் தோள்பட்டை வரை அவனுக்கு வலித்தது. இன்று அவன் எப்படி வேலை செய்வான்?
girigopalan@gmail.com

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினாறாவது அத்தியாயம்

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

அலெக்ஸாந்தர் சோல்சனிட்ஸன் – தமிழாக்கம் – ரா.கிரிதரன்.


சுதந்திரமாக இருப்பது கைதிகளுக்கு விருப்பமான ஒன்றுதான். அதை விட்டுப் பிரித்தாலும் மீண்டும் சுதந்திரத்தைத் தேடிச் செல்வார்கள். ஆனால் சில சமயம் ஒரே விஷயத்தை நோண்டிக்கொண்டிருப்பர். படுக்கையில் ஒழித்து வைத்த ரொட்டித் துண்டுகளை யாராவது கண்டு பிடித்துவிடுவார்களோ? டாக்டரிடம் செல்லும் போது ஏதாவது சாக்குச் சொல்லி வேலையிலிருந்து தப்பிக்க முடியுமா? புவோஸ்கியை மறுபடி லாக் அப்பில் அடைத்து விடுவார்களோ? எப்படி ட்ஸாருக்கு அவ்வளவு கதகதப்பான ஆடை கிடைத்தது?

சுகோவ் காலையிலிருந்தே நிம்மதியில்லாமல் இருந்தது. சிற்றுண்டியில் ரொட்டியில்லாமல், குளிர்ந்து போன உணவை முடித்திருந்தான். அதைப் பற்றிக் கவலைப்படக்கூடாதென இருந்தும், முகாமைப் பற்றி நினைப்பதையே நிறுத்த முயன்றான். அதனாலேயே வீட்டிற்கு எழுதப்போகும் கடிதத்தைப் பற்றி நினைக்கத் தொடங்கினான்.

கைதிகள் கட்டிய மரப் பலகைகளையும், புது மரச் சட்டங்களையும் தாண்டி காலை வெளிச்சத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். தரையில் வெள்ளை நிறப் பனி சூழ்ந்திருந்தது. அந்த இறக்கம் முழுவதிலும் ஒரு மரம் கூட இல்லை.

1951. புது வருடம் ஆரம்பமாகிவிட்டது. அந்த வருடத்திற்கான இரு கடிதங்களை எழுத சுகாவுக்கு உரிமை உண்டு. கடந்த ஜூலை மாதம் ஒரு கடிதம் அனுப்பியிருந்தான். அதற்கான பதிலை அக்டோபரில் தான் பெற்றான். உஸ்ட்-இஸ்மா முகாமில் மாதத்துக்கு ஒரு முறை கடிதம் எழுத முடியும்.ஆனால் எழுதுவதற்கு என்னதான் இருக்கிறது? இப்போதைவிட அப்போது நிறைய எழுதியிருந்தான்.

இவான் சுகாவ் 23 ஜூன் 1941 ஆம் ஆண்டு வீட்டை விட்டு கிளம்பினான். அதற்கு முந்தைய ஞாயிறு போலோம்னியா தேவாலயத்திற்கு சென்றபோது; யுத்தம்!! போலோம்னியாவிலாவது தபால் நிலையத்தில் விஷயத்தைக் கேள்விபட்டிருந்தார்கள். ஆனால் டெம்னெனோவாவில் ஒரு தந்தியில்லா தபால் நிலையங்கள் இல்லாததால், யாருக்குமே தெரியவில்லை. அப்போது எழுத்து வழியே எல்லோருக்கும் விஷயத்தைச் சொன்னார்கள். இப்போது எழுதுவதில் ஒரு அர்த்தமும் இல்லை. கல்லில் எழுதி கடலில் போடுவது போலத்தான் முடியும். முழுகுவதைத் தவிர எதுவுமே நடக்காது. கடைசியாக நடப்பதும் அதுவாகத் தான் இருக்கும். உங்கள் குழுவைப் பற்றியோ, அதன் தலைவரான ஆண்ட்ரே ப்ரோகோஃபிவிச் பற்றியோ கண்டிப்பாக எழுத முடியாது. அவன் குடும்பத்தை விட கில்காஸுடன் பேசுவதற்கு நிறைய இருக்கிறது.

வருடத்திற்கு எழுதும் இரு கடிதங்களும் அவர்களின் வாழ்வு தரத்தைப் பற்றி எதுவும் பெரிதாகச் சொல்லாது.கோல்கோஸுக்கு புது குழுத் தலைவர் வந்துவிட்டான் – போன்ற தேவையில்லாத விஷயங்கள். அருகில் இருக்கும் நிலங்களை சேர்த்து விட்டார்கள், பிறகு? வேலைக்கான கணக்கை முடிக்காத விவசாயிகளுக்கு பழைய படி நிலங்களைக் கொடுக்க வில்லை.

குளியல் அறைப் போல காற்று கனமாயிருந்தது. அறைக்குள் இருந்த வெட்பத்தை வெளியிலிருந்து வந்த குளிர் காற்று சந்தித்தது. குழுக்கள் மேஜையில் உட்கார்ந்துகொண்டோ, கூட்டமாய் நின்றுகொண்டோ, சாப்பாட்டு மேஜை காலியாவதற்கு காத்துக் கொண்டிருந்தார்கள்.ஒருவருக்கொருவர் கத்திக் கொண்டே குழுக்களிலிருந்து இரண்டு, மூன்று கைதிகள் குவளைகளில் கூழ் மற்றும் ரொட்டியை எடுத்துக்கொண்டு காலியான் மேஜையை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.பார்த்துப் போய்யா.அவனுக்குக் கேட்கவில்லை.டமார்,டமார்! ஒரு கை காலியாகத்தானே உள்ளது, அவன் பிடரியிலே ஒன்று போடவேண்டியதுதானே? வழியில நிக்காதீங்கப்பா, எதையாவது தட்டிவிடப் பார்க்காதீங்க!

ஒரு மூலை மேஜையில் ஒரு இளைஞன் உட்கார்ந்துகொண்டு தன் சாப்பாட்டிற்கு முன் பிரார்தனை செய்து கொண்டிருந்தான். அதாவது,மேற்கு உக்ரேனியன் – முகாமிற்கு புதியவன்.

எந்தக் கையால் சிலுவை குறி செய்து பிரார்த்திப்பது என ரஷ்யர்கள் மறந்திருந்தாகள். ஆதலால் இவன் மேற்கு உக்ரேனியன்.

அந்த குளிரான சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்துகொண்டு, தொப்பிக்களோடு பலரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சின்ன மீன்களை கோஸ் இலைகளுக்குக் கீழிருந்து பொறுக்கித் தின்று கொண்டும், அதன் எலும்புகளை மேஜையின் மேல் துப்பிக் கொண்டும் இருந்தனர். அந்த எலும்புகள் சின்ன மலை போல் குவிந்ததும், அடுத்து உட்காரும் குழு அதை தரையில் பெருக்கித் தள்ளிவிடும்.ஆனால் நேராகத் தரையில் துப்புவது அநாகரிகச் செயலாகக் கருதினர்.

104ஆம் பிரிவைச் சேர்ந்த ஃபெடிகோவ் நடுவில் இருந்த இரு குழுக்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான்.சுகாவின் சிற்றுண்டியை அவன் தான் வாங்கி வைத்திருந்தான்.குழுக்கு வெளியேயிருந்து பார்க்கும்போது உறுப்பினர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பர் – எண் போட்ட அவ்ர்களின் மேல்சட்டை ஒரேபோல இருக்கும் – ஆனால் குழுக்குள்ளே வெவ்வேறுமாதிரி இருப்பர். அவர்களுக்குள்ளே பல பதவிகள் உண்டு. உதாரணத்திற்கு, புய்நோஸ்கி அடுத்த கைதிகளின் உணவை பாதுகாத்துக் கொண்டிருக்கமாட்டான். சுகாவ் எந்தவிதமான வேலையையும் செய்ய மாட்டான். அவனுக்கு கீழே பலரும் இருந்தனர்.

ஃபெடிகோவ் சுகாவைப் பார்த்து அவன் இடத்தில் ஒரு பெருமூச்சுடன் உட்கார்ந்துகொண்டான்.

‘மிகவும் குளிராக இருக்கிறது. உன் சாப்பாட்டையும் சாப்பிட்டிருப்பேன். உன்னை லாக்-அப்பில் அடைத்துவிட்டார்கள் என நினைத்தேன்’

அவன் அதிக நேரம் அவனுடன் இல்லை. சுகாவிடம் தப்பி எந்த உணவும் அவனுக்குக் கிடைக்கப் போவதில்லை.

சுகாவ் தன் காலணிக்குளிருந்து ஸ்பூனை எடுத்துக்கொண்டான். அவனின் சிறிய புதையல். இது அவன் மேற்கே இருந்ததிலிருந்து அவனுடன் இருக்கிறது. அவன் கையாலேயே காய்ச்சிய அலுமினிய கம்பிகள். ‘Ust-Izhma 1944’ எனப் பொறித்துக் கொண்டான்.

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினைந்தாவது அத்தியாயம்

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

அலெக்ஸாந்தர் சோல்செனிட்ஸன் தமிழாக்கம் – ரா.கிரிதரன்.


கண்காணிப்பு கோபுரத்திலிருந்து இரண்டு சக்திவாய்ந்த விளக்க ஒளி அந்த முகாம் முழுவதையும் அளந்தது.எல்லை விளக்கு முதற்கொண்டு உள்விளக்குகள் கூட அந்த முகாமில் எறிந்துகொண்டிருந்தது.நட்சத்திரங்களுக்கே சவால் விடக்கூடிய அளவிற்கு அங்கு விளக்குகள் எறிந்துகொண்டிருந்தது.

காலுக்கடியில் பனி சரசரக்க கைதிகள் தங்கள் வேலையில் மும்முரமாக விரைந்துக் கொண்டிருந்தார்கள்.சிலர் தபால் அறைக்கும், வேறுசிலர் சிற்றுண்டியை கையில் எடுத்துக்கொண்டு சூடுசெய்ய விரைந்துகொண்டிருந்தனர்.எல்லோரும் தங்கள் தலையை மேல்சட்டைக்குள் குனிந்து புதைத்திருந்தனர். அப்போதைய குளிரை விட, நாள் முழுதும் அந்த குளிரில் இருக்கவேண்டியதை நினைத்ததால் ,அக்குளிர் எலும்பை உறைய வைப்பதுபோல் இருந்தது.தன் பழைய ராணுவ உடையணிந்த டார்டர் குளிரை பொருட்படுத்தாதது போல,மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.

அந்த முகாமிலிருந்த ஒரே செங்கள் கட்டிடமான உயரமான லாக் அப்பை சுற்றி நடந்தனர்.அம்முகாமின் சமையலறையை சுற்றியிருந்த கம்பிகளைத் தாண்டி சென்றுகொண்டிருந்தனர்.கண்காணிப்பு விடுதியைத் தாண்டி,அங்கு கம்பத்தின் மேல் தொங்கிக் கொண்டிருந்த வெப்பநிலைமானியைச் சுற்றி (இந்த வெப்பநிலைமானி குளிர் குறிப்பிட்ட அளவிற்கும் கீழே செல்வதை கண்காணிக்க) சென்றார்கள்.

சுகாவ் நம்பிக்கையுடன் அந்த பால் வெள்ளை குழாயைப் பார்த்தான். -41 வெப்ப அளவு இருந்தால் அவர்கள் வேலைக்கு போக வேண்டியதில்லை. ஆனால் இன்றோ -41 என்ற அளவிற்கு கொஞ்சம் கூட அருகில் இல்லை.

பணியாளர் அறைக்குள் சென்றார்கள். டார்டார் நேராக காவலாளி அறைக்கு சுகாவை கூட்டிச் சென்றான். அப்போதுதான் சுகாவ் ஒன்றை உணர்ந்தான். அவனை லாக் அப் அறைக்கு கூட்டிச் செல்லவில்லை.அந்த காவலாளியில் அறையின் தரையை சுத்தம் செய்யவே அவனை கூப்பிட்டிருந்தார்கள்.அந்த தரையை அழுத்தித் தேய்க்கச் சொல்லிவிட்டு டார்டார் அவனை அங்கே விட்டுவிடப்போகிறான்.

அந்தத் தரையைத் தேய்ப்பது ஒரு முக்கியமான கைதியின் கடமையாகும். அந்த கைதி முகாமில் வெளிவேலைக்கு செல்லாமல், அந்த பணியாளர் அறையில் வேலை செய்பவன். பணியாளர் அறையை எப்போதோ தன் வீட்டைப் போல பாவிக்கத்தொடங்கிவிட்டிருந்தான்.ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு தலைவரான தளபதியின் அலவலகத்திற்குள் அவனுக்கு அனுமதி இருந்தது. காவலாளிக்குத் தெரியாததுகூட வேலை செய்யும்போது அவனுக்கு கேட்கும். சில காலத்திற்குள் அவனுக்கு தலை கனம் ஏறிப்போனது. கீழ் மட்டத்தில் இருக்கும் மற்ற காவல் அறைகளின் தரையை சுத்தம் செய்வோரை தன்னைவிடத் தாழ்ந்தவராக கருதத் தொடங்கினான்.

வேலைக்கு அவனை பல சமயங்கள் கூப்பிட்டு அலுத்துப்போன காவலாளிகளுக்கு நடப்பவை புரிந்தது. அதற்குப் பிறகு மற்ற கைதிகளை தரை தேய்க்க கூப்பிட ஆரம்பித்தனர்.

காவலாளி அறையிலிருந்த அடுப்பு அனலை கக்கிக் கொண்டிருந்தது.கிழிந்த உடை அணிந்த இரு காவலாளிகள் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தனர். தன் மேல் சட்டை, காலணியை அணிந்து கொண்டிருந்த மூன்றாவது காவலாளி குறுகலான கட்டையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்.அந்த அறையின் மூலையில் காலியான வாளி அதனுள் கந்தல் துணியும் கிடந்தது.

சுகாவிற்கு மிக சந்தோசமாக இருந்தது. தன்னை விடுவித்ததற்காக டார்டரிடம் நன்றி சொன்னபோது – ‘இன்றிலிருந்து தாமதமாக எழ மாட்டேன்’ என்றும் சொன்னான்.

இந்த அறையின் விதி மிக சுலபம்; முடித்தவுடன் சென்றுவிடலாம். வேலை கொடுத்தவுடன் சுகாவிற்கு தன் மூட்டு வலி போனதுபோல இருந்தது.தன் கையுறையைக் கூட தன் தலையணைக்கு அடியிலிருந்து எடுக்க மறந்ததால், வாளியைத் வெறும்கைகளில் தூக்கிக்கொண்டு கிணறை நோக்கி ஓடினான்.

பல குழுத்தலைவர்கள் PPD அறைக்குச் செல்லுமுன் வெப்பநிலைமானி அருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்களில் சிறுவனான , சோவியத் யூனியனின் பழைய நட்சத்திரம் பிரகாசத்துடன் அந்தக் கருவியைத் துடைத்துக்கொண்டிருந்தான்.

சிலர் கீழிருந்து அலோசனையைக் கத்திக்கொண்டிருந்தனர்.

சுகாவ் காய்ந்த துணியால் நன்றாக தரையைச் சுத்தம் செய்தான்.பின்னர் அதை பிழியாமலேயே அடுப்பிற்கு பின்னால் தூக்கி எறிந்தான்.தன் வாலன்கி காலணிக்குள் நுழைந்து, மீதமுள்ள தண்ணீரை அதிகாரிகளின் பாதைவழியே இரைத்துவிட்டு,குளிக்கும் அறை வழியே குளிரான கிளப்பைத் தாண்டி சாப்பாட்டு அறைக்குள் சென்றான்.

இன்னமும் மருத்துவரிடம் சென்று விடுப்பு வாங்குமளவு உடம்பு சரியாகவில்லை. அவன் உடம்பு முழுவதும் ஒரே வலி. அந்த சாப்பாட்டு அறைக்கு வெளியே இருந்த காவலாளியை வேறு ஏமாற்றவேண்டும். அந்த முகாமின் தளபதி விடுத்த கட்டளை படி – சுதந்திரமாக முகாமில் சுற்றும் கைதிகளை பிடித்து லாக்-அப்பிலுள் அடைக்க வேண்டும்.

அவன் நல்ல நேரம் – அந்த காலை வேளையில், சாப்பாட்டு அறைக்கு முன் கூட்டமில்லை, வரிசையுமில்லை. நடந்து நுழைந்தான்.

குளியல் அறைப் போல காற்று கனமாயிருந்தது. அறைக்குள் இருந்த வெட்பத்தை வெளியிலிருந்து வந்த குளிர் காற்று சந்தித்தது. குழுக்கள் மேஜையில் உட்கார்ந்துகொண்டோ, கூட்டமாய் நின்றுகொண்டோ, சாப்பாட்டு மேஜை காலியாவதற்கு காத்துக் கொண்டிருந்தார்கள்.ஒருவருக்கொருவர் கத்திக் கொண்டே குழுக்களிலிருந்து இரண்டு, மூன்று கைதிகள் குவளைகளில் கூழ் மற்றும் ரொட்டியை எடுத்துக்கொண்டு காலியான் மேஜையை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.பார்த்துப் போய்யா.அவனுக்குக் கேட்கவில்லை.டமார்,டமார்! ஒரு கை காலியாகத்தானே உள்ளது, அவன் பிடரியிலே ஒன்று போடவேண்டியதுதானே? வழியில நிக்காதீங்கப்பா, எதையாவது தட்டிவிடப் பார்க்காதீங்க!

ஒரு மூலை மேஜையில் ஒரு இளைஞன் உட்கார்ந்துகொண்டு தன் சாப்பாட்டிற்கு முன் பிரார்தனை செய்து கொண்டிருந்தான். அதாவது,மேற்கு உக்ரேனியன் – முகாமிற்கு புதியவன்.

எந்தக் கையால் சிலுவை குறி செய்து பிரார்த்திப்பது என ரஷ்யர்கள் மறந்திருந்தாகள். ஆதலால் இவன் மேற்கு உக்ரேனியன்.

அந்த குளிரான சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்துகொண்டு, தொப்பிக்களோடு பலரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சின்ன மீன்களை கோஸ் இலைகளுக்குக் கீழிருந்து பொறுக்கித் தின்று கொண்டும், அதன் எலும்புகளை மேஜையின் மேல் துப்பிக் கொண்டும் இருந்தனர். அந்த எலும்புகள் சின்ன மலை போல் குவிந்ததும், அடுத்து உட்காரும் குழு அதை தரையில் பெருக்கித் தள்ளிவிடும்.ஆனால் நேராகத் தரையில் துப்புவது அநாகரிகச் செயலாகக் கருதினர்.

104ஆம் பிரிவைச் சேர்ந்த ஃபெடிகோவ் நடுவில் இருந்த இரு குழுக்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான்.சுகாவின் சிற்றுண்டியை அவன் தான் வாங்கி வைத்திருந்தான்.குழுக்கு வெளியேயிருந்து பார்க்கும்போது உறுப்பினர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பர் – எண் போட்ட அவ்ர்களின் மேல்சட்டை ஒரேபோல இருக்கும் – ஆனால் குழுக்குள்ளே வெவ்வேறுமாதிரி இருப்பர். அவர்களுக்குள்ளே பல பதவிகள் உண்டு. உதாரணத்திற்கு, புய்நோஸ்கி அடுத்த கைதிகளின் உணவை பாதுகாத்துக் கொண்டிருக்கமாட்டான். சுகாவ் எந்தவிதமான வேலையையும் செய்ய மாட்டான். அவனுக்கு கீழே பலரும் இருந்தனர்.

ஃபெடிகோவ் சுகாவைப் பார்த்து அவன் இடத்தில் ஒரு பெருமூச்சுடன் உட்கார்ந்துகொண்டான்.

‘மிகவும் குளிராக இருக்கிறது. உன் சாப்பாட்டையும் சாப்பிட்டிருப்பேன். உன்னை லாக்-அப்பில் அடைத்துவிட்டார்கள் என நினைத்தேன்’

அவன் அதிக நேரம் அவனுடன் இல்லை. சுகாவிடம் தப்பி எந்த உணவும் அவனுக்குக் கிடைக்கப் போவதில்லை.

சுகாவ் தன் காலணிக்குளிருந்து ஸ்பூனை எடுத்துக்கொண்டான். அவனின் சிறிய புதையல். இது அவன் மேற்கே இருந்ததிலிருந்து அவனுடன் இருக்கிறது. அவன் கையாலேயே காய்ச்சிய அலுமினிய கம்பிகள். ‘Ust-Izhma 1944’ எனப் பொறித்துக் கொண்டான்.

எவ்வளவு குளிர் இருந்த போதிலும் தொப்பியுடன் அவன் சாப்பிடுவதில்லை. அதை கழட்டி வைத்துவிட்டு, தன் குவளையில் இருக்கும் சாப்பாட்டை உற்று பார்த்தான்.ரொம்பச் சுமாரான சாப்பாடு. சூப்பை அடியிலிருந்தும் எடுக்காமல், மேலிருந்தும் எடுக்காமல் நீர்க்கக் கொடுத்திருக்கிறார்கள். மற்றவர்களின் சூப்பிலிருந்து உருளைக் கிழங்குகளை எடுக்கக்கூட ஆள்தான் ஃபெடிகோவ்.

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்.


அந்த சிறு மீனோ சதையைவிட முள்ளாகவே இருந்தது. எலும்பைச் சுற்றிய சதையோ கரைந்துப் போய், தலை மற்றும் வால் பகுதியில் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது. ஒரு துண்டு சதையைக் கூட விட்டுவைக்காமல், சுகாவ் அந்த முட்களை கடித்து முழுவதும் உறிஞ்சிக் கொண்டும், மீந்தவற்றை மேஜையின் மேல் துப்பிக்கொண்டும் இருந்தான். முட்களில் ஒட்டிக்கொண்டிருந்த வால், கண் அனைத்தையும் மென்றுகொண்டிருந்தாலும், சூப்பில் மிதந்துகொண்டிருந்த கண்களை சாப்பிடவில்லை. என்ன ஒரு கண்கள். மீன் கண்கள். இதைப் பார்த்த அவன் குழுவினரோ தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

அன்று சுகாவ் மிகக் குறைவாகவே சாப்பிட்டான். தன் குடிசைக்குத் திரும்பாததால், அவன் சிற்றுண்டியை ரொட்டியில்லாமலேயே தின்று முடித்தான். ரொட்டியை பிறகு சாப்பிடுவான். அதுவே சரியாக இருக்கக்கூடும்.

சூப்பிற்குப் பிறகு கம்பங்கூழ் முடிக்க வேண்டும். அதுவும் ஆறிப் போய் இறுகியிருந்தது. சுகாவ் அதை சின்னச் சின்னதாய் உடைத்தான். சூடாக இருக்கும்போதும் சுவை இல்லாமல் இருக்கும் அது, வயிற்றை கொஞ்சம் கூட நிரப்பாது. மஞ்ச நிற புல் போல இருந்தது. சீனர்களிடமிருந்து கற்றுக் கொண்டது இது. சூடு செய்யும் போது கொஞ்சம் கனமாக இருந்தாலும், கூழ் அனைத்தும் வற்றிவிடும்.

ஸ்பூனை நக்கிவிட்டு தன் காலணிக்குள் நுழைத்தபடியே சுகாவ் தொப்பி அணிந்தபடி தன் மருத்துவ அறையை நோக்கி நடக்கலானான்.

வானம் இருண்டிருந்தது. முகாமின் விளக்குகள் நட்சத்திரங்களைத் துரத்தியிருந்தது. இரண்டு பெரிய தேடுவிளக்குகள் இன்னும் முகாம் முழுவதும் பெருக்கிக் கொண்டிருந்தது. சண்டைக்குப் பிறகு மீதமிருந்த பல வண்ண எரிதழல்களை இந்த விசேசமான முகாமில் மின் தடை ஏற்படும்போது யுத்தகளம் போல பற்ற வைப்பார்கள். பின்னர் அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டனர். பணத்தை மிச்சம் செய்வதற்க்காக இருக்கலாம்.

கும்மிருட்டென இருந்தாலும், இன்னும் சிறிது நேரத்தில் வேலை செய்ய கட்டளை அறிவிக்கப்படுமென அனுபவசாலிகளுக்குத் தெரியும்.குரமோயின் வேலையாள் ஆறாம் எண் குடிசைக்கு சிற்றுண்டியுடன் சென்றுவிட்டான். இந்த முகாமை விட்டு விலகாத காவலாளி் அவன். வயதான தாடிவைத்த ஓவியன். C.E.D என்ற கழகத்தில் கைதிகளின் உடையில் எண்களை வரைபவன். அங்கே மறுபடியும் டார்டார் வந்துவிட்டான். பொதுவாகவே கம்மியான ஆட்களே இருந்தனர். எல்லோரும் ஏதாவதொரு மூலைக்கு சென்றிருக்கவேண்டும் அல்லது குளிருக்கு கதகதப்பாக எங்காவது ஒதுங்கிருக்கவேண்டும்.

பொதிமூட்டை பின்னால் தந்திரமாக ஒழிந்துகொண்ட சுகாவ் டார்டாரிடம் தப்பித்துக்கொண்டான்.

என்னதான் மெதுவாக சொன்னாலும்,எங்கள் குழுவிலிருந்த அனைவருக்கும் கேட்டது. யாருக்கு அன்றிரவு ரொட்டி குறையப்போவது எனத் தெரியாமல் பயத்துடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.

மிக்க களைப்பாக இருந்ததால், சுகாவ் மரத்துகள்களான மெத்தையில் படுத்துக்கொண்டிருந்தான். ஒரு முடிவோடிருந்தான்; ஒன்று உண்மையான ஜுரம் வர வேண்டும் இல்லையேல் மூட்டுவலி நீங்க வேண்டும்.

இதற்கிடையே அய்லோஷா தன் இரவு பிரார்த்தனையை தொடங்கியிருந்தான். கழிப்பிடத்திலிருந்து வந்த புய்நோஸ்கி குறிப்பிட்டு யாரிடமும் சொல்லாமல் குசும்பு விசமத்தனத்தோடு – ‘மாலுமிகளே! பற்களை நன்றாக இருக்கிக்கொள்ளுங்கள். வெளியே கண்டிப்பாக முப்பதுக்கும் கம்மியாக இருக்கிறது.’

சுகாவ் ஜுரம் வந்ததென புகல முடிவுசெய்தான்.

அந்நேரத்தில் அவன் போர்வையும்,மேல் சட்டையும் அவனிடமிருந்து பிடிவாதத்துடன் பிடுங்கப்பட்டது. அவன் மேல் அங்கியை தன் முகத்திலிருந்து அகற்றி எழுந்து உட்கார்ந்தான்.அவன் மேல்படுக்கை உயரமிருந்த டார்டார் அவனைப் பார்த்தான்.

தன் முறையில்லாவிட்டாலும் வந்துவிட்டான்.

‘S 854’ சுகாவின் மேல் சட்டையிலிருந்த வெள்ளை கிழிசலில் இருந்ததைப் படித்தான். ‘உனக்கு மூன்று நாட்கள் வேலையுடன் கூடிய தண்டனை’.

அவன் குரலைக் கேட்ட அடுத்த நிமிடம் , அந்த குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த 200 பேர்களும் நிஜ உலகத்திற்கு வந்து வேகவேகமாக உடையணிந்தனர்.

‘எதற்காக பெரிய தலைவரே (1)’ என இளித்துக்கொண்டே சுகாவ் கேட்டான்.

வேலையோடு – அது கூடத் பரவாயில்லை. சூடான சாப்பாடு கொடுத்தவுடன், யோசிக்க நேரமிருக்காது. வேலை முடிந்தாலும் வெளியே செல்லமுடியாததே உண்மையான லாக்-அப்.

‘மணியடித்த பின்னும் எழுந்துகொள்ளாததால். என்னுடன் முகாம் தலைவர் அலுவலகத்திற்கு வா’ என சோம்பேரித்தனத்துடன் டார்டார் கூறினான்.

முகானின் மருத்துவமனையில் கூட இப்போதெல்லாம் படுத்து ஓய்வெடுக்க விடுவதில்லை என்பது இப்போதுதான் நினைவிற்கு வந்தது.ஸ்டீபன் ரிகோரிச் என்ற புது மருத்துவர் வந்துள்ளார். தன் கனத்த எருமைக் குரலை உடைய அவன் தானும் நிம்மதியில்லாமலு அங்கு வரும் நோயாளிகளின் நிம்மதியையும் பறித்து வருகின்றான். தங்கள் காலால் நிற்கக்கூடிய நோயாளிகளுக்கு மருத்துவமனையின் உள்ளும் வெளியேயும் பல புது வேலைகளை உருவாக்கினான். தோட்டத்தை நடுவது, மண் பாதைகள் வகுப்பது, மலர் செடிகளுக்கு கீழே மண் நிரப்புவது என வெய்யில் காலத்திலும், பனி தடுப்பு நடுவதை குளிர் காலத்திலும் கொடுத்தான். எவ்விதமான நோய்க்கும் உழைப்பே முதன்மையான மருந்து எனக் கூறிவந்தான்.

ஒரு குதிரையைக் கூட அதிக வேலைகொடுத்து கொல்ல முடியும். அந்த மருத்துவருக்கு அது புரிய வேண்டும். ரத்தம் சிந்தி கற்களை அடுக்கினால் நிச்சியமாக சத்தம் அடங்கிப் போவான்.

டோவுஷ்கின் எழுதிக்கொண்டேயிருந்தான். தன் வேலையை தவிர வேறேதோஒரு சொந்த வேலை தான் செய்துகொண்டிருக்கிறான். ஆனால் அது சுகாவிற்கு தேவையில்லாதது. அதற்குமுன் நாள் மாலை எழுதிய கவிதையின் திருத்தமான பிரதியை எழுதிக்கொண்டிருக்கிறான். இன்றைக்கு வேலையே மருந்து என அறிவுரை செய்த மருத்துவர் ஸ்டீபன் ரிகோரிச்சிடம் காட்டுவதாக வாக்கு அளித்திருந்தான்.

முகாமில் மட்டுமே நடக்கக்கூடியது இந்த ஏமாற்றுத்தனம். டோவுஷ்கின் துணை மருத்துவரே அல்ல. இலக்கியம் படித்துக் கொண்டிருந்த மாணவனான அவனை இரண்டாம் ஆண்டு போது கைது செய்தார்கள். ஸ்டீபன் ரிகோரிச் இவனுக்கு நரம்பினுள் போடும் ஊசி முறையைக் கற்றுத் தந்து, தன்னிடமிருந்த அப்பாவி கைதிகளின் மேல் பரிசோதித்துக்கொண்டிருக்கச் சொல்லியிருந்தார். சுதந்திரமாய் எழுதமுடியாததை இங்கு சிறையில் எழுதி வந்தான்.

இரண்டு தடுப்புகளிருந்த பனி இறுகிய ஜன்னலின் வழியே வேலை செய்வதற்காக வந்த சிமிஞை கேட்கவில்லை.ஒரு பெருமூச்சுடன் சுகாவ் எழுந்து நின்றான். இன்னும் ஜுர சிலிர்ப்பு இருந்தாலும் வேலையை தட்டிக் கழிக்க முடியாது.

டோவுஷ்கின் வெட்பமானியை எடுத்துப் பார்த்தான்.

`ஹும்..இரண்டுகெட்டான் நிலை.முப்பத்து ஏழு புள்ளி இரண்டு. முப்பத்து எட்டு இருந்தால் எல்லோருக்கும் புரிந்திருக்கும். உன்னை விட முடியாது. இங்கு நிற்பது ஆபத்து. மருத்துவர் வந்து உன்னைச் சோதிப்பார். உனக்கு ஜுரமிருக்கிறது என அவர் முடிவு செய்தால் தப்பிப்பாய். இல்லையேல் விடமாட்டார். லாக் அப் அறையில் அடைத்து விடுவார். வேலைக்கு இப்போது செல்வதே உனக்கு நல்லது`

சுகாவ் ஒன்றும் சொல்லவில்லை. தலைக் கூட ஆட்டவில்லை. தன் தலைக்குமேல் தொப்பியை கவிழ்த்துக்கொண்டு வெளியேறினான்.

குளிரில் இருப்பவனை கதகதப்பில் இருப்பவன் எப்படி புரிந்து கொள்ள முடியும்?

குளிர் ஊடுருவியது. கடுமையான பனி மூட்டம் சுகாவைச் சுற்றிக்கொண்டு அவனை கடுமையாக இரும்ப வைத்தது. வெளியில் -27 டிகிரி. சுகாவோ 37 டிகிரி இருந்தான். சண்டை வலுத்தது.

மெதுவாக ஓடிக்கொண்டே தன் குடிசையை அடைந்தான். பயிற்சி தளமும், முகாமும் காலியாக இருந்தது. இந்த நேரத்தில் தான் எல்லோரும் ஒரு போலியான நிம்மதியில் இருப்பார்கள். முகாமின் அணிவகுப்பு அன்று இருக்காது என்ற நிம்மதியே அது. காவலாளிகளோ தங்களின் வெப்பமான அறைக்குள் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களின் தூங்கும் தலை துப்பாக்கியின் மேல் சாய்ந்திருக்கும். அந்த குளிரான கண்காணிப்பு உயரமேடைகளில் அவர்களுக்கு ஒன்றும் பாலும் தேனும் போல் இனிப்பாக இருக்காது. வாசல் கதவின் முன்னேயிருக்கும் காவலாளியோ நெருப்பில் கரியை அள்ளிப் போடுகிறான். முகாமைத் தேடுவதற்குமுன், அதன் காவலாளிகள் கடைசி சிகரெட்டைப் பிடித்தார்கள்.கைதிகளோ தங்களின் வலைகளில், இடுப்பில் கயிறும், தாடைமுதல் கண்வரை மூடிய துணியுமாய் காலணி அணிந்துகொண்டு தங்கள் படுக்கையில் காத்திருப்பார்கள். அவர்கள் காத்திருப்பதோ குழுத் தலைவனிடமிருந்து – ‘வெளியே போங்கள்’ என்ற கத்தலுக்காக.

104ஆம் குழு ஏழாம் குடிசையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. பாவ்லோ என்ற துணை குழுத்தலைவர் பென்சிலை தன் உதட்டில் பொருத்தியபடியும், சுகாவின் சுத்தமான நண்பனுமான அய்லோஷா ஒரு நோட்டு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபடி முழித்துக்கொண்டிருந்தனர். அந்த நோட்டில் பைபிள் புதிய ஏற்பாட்டை தானே பிரதி எடுத்திருந்தான்.

பாவ்லோவின் படுக்கையை நோக்கி நேராகச் சத்தமேதும் போடாமல் சுகாவ் சென்றான்.

பாவ்லோ தலையைத் தூக்கிப் பார்த்தான்.

‘ஆ! இவான் டெனிசோவிச் , உன்னை லாக் அப் அறையுள் போடவில்லையா? நலமா நண்பா?’ – உக்ரேனிய வட்டார வழக்கில் கேட்டான். அப்படிக் கேட்டது மேற்கு உக்கிரேனியற்கள் சிறையில் கூட இப்படி பேசுவது ஆச்சர்யமாக இருந்தது.

சுகாவின் ரொட்டி அளவை எடுத்து அவனிடம் நீட்டினான். அந்த குவியலின் மேல் ஒரு கரண்டி சக்கரை இருந்தது. நேரமில்லாததால் சுகாவ் ஒழுங்காக பேசினான் (துணைக் குழுத்தலைவர் கூட் இந்த முகாமில் முக்கியமான அதிகாரி தான்). அவசரத்திலிருந்தாலும் சக்கரையை ரொட்டியின் மேலிருந்து நக்கியபடி, தன் படுக்கையில் ஏறி படுத்தான். ஐம்பத்து ஐந்து கிராம் இருக்கிறதாயென பார்த்தவாறு தன் ரொட்டியைச் சாப்பிடத்தொடங்கினான். பல ஆயிரம் முறை இதைப்போல பல சிறைகளிலும், முகாமிலும் எடையை தராசில்லாமல் பார்த்திருந்தாலும், இந்த ரொட்டிகளில் உண்மையான எடை வராதென அவனுக்குத் தெரியும். ஒவ்வொரு ரொட்டியிலும் குறைவாகவே இருக்கும். எவ்வளவு குறைவு என்பதுதான் முக்கியம். உங்கள் ஆதமாவை தேற்றுவாற்கள் என தினமும் நினைப்பீர்கள் – இன்றைக்கு எதுவும் செய்திருக்க மாட்டார்கள்.

ரொட்டியை இரண்டாய் உடைத்தபோதுதான் இருபது கிராம் குறைவாக இருப்பது தெரிந்தது. ஒரு பாதியை தன் காலணியின் மறைவானதொரு இடத்தில் ஒழித்து வைத்தான். சிற்றுண்டியுடன் சாப்பிடாமல் வைத்த மற்றொரு பாதியை அப்போதே சாப்பிட முடிவு செய்தான். வேகவேகமாக முழுங்கும் சாப்பாடு உணவே அல்ல. அது நிறைவைத் தராது. தன் காலணி பைக்குள் அதைத் திணிக்கலாமென நினைத்தான். அந்த நினைப்பை எதிர்த்து சாப்பிடத் தொடங்கினான். இரண்டு காவாலாளிகளை உணவைத் திருடியதற்காக உதைத்தார்கள் என நினைவிற்கு வந்தது.

girigopalan@gmail.com

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்.


சில சமயம் கைதிகளுக்கு எழுதப்படும் கடிதங்களும் தேடுதலுக்கு உட்படுத்தப்படும். ஆனால் ஒவ்வொரு கைதிக்கு வரும் கடிதத்தை படிக்க முற்பட்டால் இரவு வந்துவிடும்.

வோல்கோவாய் ஏதாவது தேடவேணுமென கூறிவிட்டான். அதனால் காவலாளிகள் தங்கள் கையுறையை விலக்கிவிட்டு, ஒவ்வொரு கைதிகளின் சட்டைக்குள்ளும் சோதனை நடத்துகிறார்கள்.

பிற்பாடு கைதிகளின் மேல் தங்கள் கைகளால் துழாவி, ஏதேனும் சட்டத்திற்கு புறம்பாட்க செய்திருக்கிறானா எனச் சோதனைவிடுவார்கள்.ஒரு சட்டையும், அதற்குள் மற்றொரு சட்டையும் உடுத்த ஒவ்வொரு கைதிக்கும் அதிகாரம் உண்டு. மற்றவை எல்லாவற்றையும் கழற்ற வேண்டும். இப்படிப்பட்ட விதிமுறையை வோல்கோவாய் இயற்றியுள்ளான்.

இதற்கு முன்னால் தேடப்பட்ட குழுக்களுக்கு நல்ல ராசி. அதில் சிலர் வாசலைத்தாண்டி சென்றுகொண்டிருந்தனர். மற்றவர்கள் தங்கள் மார்பகங்களைக் காட்டிக் கொண்டிருந்தனர். கூடுதல் உடுப்பு அணிந்தவர்களை, அந்த குளிரையும் பொருட்படுத்தாது, அங்கேயே ஆடைகளைக் கழட்டிக் கொண்டிருந்தனர்.

இப்படித் தொடங்கிய கூட்டத்தில் ஒரு இடைவெளி உருவாகத் தொடங்கியது – வாசலுக்கு மறுமுனையிலிருந்து ‘ம்ம்..வேகமாக நகருங்கள்’ என சத்தங்கள் வரத் தொடங்கின.

எங்கள் 104ஆம் குழுவைத் தேடத்தொடங்கும்போது கொஞ்சம் கரிசனம் காட்டினர்- வோல்கோவாயின் விதிமுறைப்படி ஒன்றுக்கும் அதிகமான ஆடைகள் அணிந்தவர்களின் பெயர்களைக் குறித்துக் கொண்டனர். அவர்கள் முகாமின் லாகப்பிற்கு வந்து அதிகப்படியான ஆடை உடுத்தியதற்கான காரணத்தை தெரியப்படுத்தவேண்டும்.

சுகாவ் எப்போதும் அணியும் ஆடையையே அணிந்திருந்தான். வாங்கப்பா, எவ்வளவு முடியுமோ தேடிக்கோங்க. என் மார்பகத்தில் பரிசுத்த என் ஆத்மாவைத் தவிற வேறேதும் இல்லை. ஆனால் அதிகப்படியான ஆடை உடுத்தியதற்காக பியுனோவ்ஸ்கி, ட்ஸேஸார் இருவரையும் குறித்துக் கொண்டனர். பியுனோவ்ஸ்கி மூன்று மாதங்களே இந்த முகாமில் இருப்பதால், ஒத்துழைக்க மறுத்தான். தான் ஒரு அதிகாரியாக இருந்தோம் என்ற எண்ணத்தை அவனால் விட முடியவில்லை.

‘இந்த குளிரில் மனிதர்களின் ஆடைகளை களையச் சொல்வதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை.கைதிகளின் சட்டம் எண் ஒன்பது பற்றித் தெரியுமா?’

ஆனால் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த எண் பற்றியும் அவர்களுக்குத் தெரியும். அய்யா,உங்களுக்குத் தான் அது தெரியவில்லை.

‘நீங்கள் ரஷ்யப் பிரஜைப்போல நடக்கவில்லை’- பியுனோவ்ஸ்கி கத்திக்கொண்டே -’நீங்கள் கம்யூனிஸ்ட் அல்ல’

கைதிகளின் எண் பற்றிக் கூறியதைக்கூட வோல்கோவாய் அனுமதிப்பான், ஆனால் கம்யூனிஸ்ட் அல்ல எனச் சொன்னது அவனை மேலும் ஆத்திரமடையச் செய்தது

‘இவனை பத்து நாட்கள் சிறையில் அடையுங்கள்’

தனியே காவலாளியிடம்

‘இன்று மாலையே தொடங்கட்டும்’

அவர்களுக்குக் காலையில். கைதிகளை லாகப்பில் போடப் பிடிக்காது. ஒரு நாள் முழுக்க வேலை குறைந்துவிடும். அதனால் உடம்பில் ரத்தம் வேர்வையாகச் சொட்டும் வரை வேலை வாங்கிவிட்டு,மாலையில் அவனை லாகப்பில் போடுவார்கள்.

அந்த நிலத்திலிருந்து வலதுபக்கம் திரும்பினால் லாக் அப் வரும். இரு பக்கங்களைக் கொண்ட செங்கல் இருப்பிடம். முதல் பகுதியில் இடமில்லாத்தால், கடந்த இலையுதிர் காலத்தில்தான் இரண்டாம் பகுதியைக் கட்டியிருந்தார்கள்.மொத்தம் பதினெட்டு செல்கள் இருந்தன.இந்த இடத்தைத் தவிர முகாம் முழுவதும் மரத்தாலேயே கட்டப்பட்டது.

குளிர் உடம்பினுள் ஊடுருவிக்கொண்டிருந்தது. இன்று முழுவதும் இங்கு தான் இருக்கும் போலிருக்கிறது. பலதரப்பட்ட மேல்சட்டைகளை அணிந்து வந்தும் வீணாய் போனது.

சுகாவின் முதுகு மிகவும் வலித்தது. நன்றாகப் படுத்துத் தூங்கச் தன் குடிசைக்கு செல்லவேண்டுமென மிகவும் விருப்பப்பட்டான். வேறேதும் அவனுக்குத் தேவையில்லை. நல்ல தடிமனான போர்வைக்குள் புகுந்து கொள்ள ஆசைப்பட்டான்.

கைதிகள் வாசலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தனர். தங்கள் சட்டைகளுக்கு பொத்தான்களை அணிந்துகொண்டிருந்தனர். அதற்கு வெளியிலிருந்து காவலாளி கத்தினான் –

‘சீக்கிரம் வாங்க..’

அதற்குப் பின்னால் இருந்த காவலாளியோ மேலும் பலமாக –

‘எவ்வளவு நேரம்பா..சீக்கிரம்..’

முதல் கேட்டுக்கு பின்னால் நின்றிருந்தனர். அந்த கேட் தான் முதல் எல்லைப் பகுதி. அதற்கு அடுத்தது மற்றொரு கேட். இருபுறமும் முட்கம்பிகளால் சட்டம் கட்டியிருந்தனர்.

முகாமின் முதல் கேட் காவலாளி – ‘நில்லுங்கள்’ எனக் கத்தினான்.

மந்தை ஆடுபோல் நின்றோம்.

மெதுவாக இருட்டத் தொடங்கியது. காவலாளியின் நெருப்பு அணையத் தொடங்கியது. கைதிகளை வேலைக்கு அனுப்புமுன்னர் தாங்கள் குளிர் காய நெருப்பு மூட்டிக் கொள்வர்.அது நன்றாக கைதிகளை எண்ணவும் பயன்படும்.

ஒரு கேட்டின் காவலாளி சத்தமான குரலில் எண்ணத் தொடங்கினான் –

‘ஒண்ணு, இரண்டு,மூன்று..’

*
girigopalan@gmail.com

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பனிரெண்டு

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

அலெக்ஸாந்தர் சோல்சனிட்ஸன், தமிழாக்கம் – ரா.கிரிதரன்.


மெதுவாகத் தொடங்கி, ஒரு கையால் அந்த சிகரெட்டின் ஒரு முனையைப் பிடித்து, மறு கையால் அது விழாமலிருக்க கீழே வைத்துக்கொண்டான். ட்ஸாருக்கு வருத்தம் இருப்பதைப் பற்றி கவலைப்படாமல், சிகரெட்டின் ஒரு முனையைப் பற்றி இழுத்தான். சிலருக்கு வாயில் துர்நாற்றம் அடிக்கும். அதைப் பற்றியெல்லாம் சுகாவ் கவலைப்படவில்லை. ஃபெட்டிக்கோவ்வுக்கு கிடைக்க வேண்டியதை தட்டிப் பறித்தான்; இதுவே முக்கியமான ஒன்றாகப் பட்டது. தன் உதடுகள் சுடும்வரை இதே சிகரெட்டுகளை இழுத்துக்கொண்டிருக்க முடியும். ம்ம்ம்..புகை மெதுவான அவன் தலை, கால்களில் மென் உணர்வுகளை உருவாக்கியபடி அவன் உடம்பு முழுவதும் பயணித்தது.

இந்த அற்புதமான கணத்தில் தான் அந்த கத்தலைக் கேட்டான் –

‘நம் சட்டைகளைக் களையச் சொல்கிறார்கள்..’

இதுதான் ஒரு கைதியின் வாழ்க்கை. சுகாவிற்கு இது பழக்கமாகிவிட்டது. உங்கள் குரல்வளையைப் பிடித்து அழுத்தும்வரை சத்தமில்லாமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

ஏன் சட்டைகளை கழட்டச் சொல்லவேண்டும்? முகாமின் தலைமைக் காவலாளி உத்தரவிட்டுள்ளார். ஏதோ தவறு நடந்திருக்கிறது.

இவர்களுக்கு முன் பல குழுக்கள் நின்றுகொண்டிருந்தன. அதற்குப் பிறகே தங்கள் குழுவை சோதிப்பார்கள். எங்கள் 104ஆம் குழு முழித்துக்கொண்டிருந்தது. தளபதி வோல்கோவாய் தன் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்து காவலாளிகளிடம் ஏதோ கத்திக்கொண்டிருந்தார். காவலாளிகளும் வோல்கோவாய் இல்லாதபோது மெத்தனமாக இருந்தாலும், இப்போது பதறிக்கொண்டிருந்தனர்.

‘சட்டை பொத்தான்களை கழட்டுங்கள்’ – காவலாளி கத்தினான்.

கைதிகள் மத்தியில் எவ்வளவு அவப்பேருடன் இருக்கிறானோ அதைப் போலவே காவலாளிகளிடமும் வோல்கோவாய்க்கு அவப்பேருண்டு. கடவும் சரியாகத்தான் பேர் வைத்துள்ளார் (வோல்க் என்றால் ரஷ்ய மொழியில் ஓநாய் என்று அர்த்தம்). ஓநாயைப் போலவே இருந்தான். உயரமாகவும், கனமாகவும் இருந்த அவன் வேகமாகவும் நகர்வான். சும்மா நிற்கும்போது திடீரென பின்னார் வந்து – `இங்கு என்ன நடக்கிறது` எனக் கத்துவான்.

அவனிடமிருந்து தப்பவே முடியாது. நாற்பத்து ஒன்பதுகளில் ஒரு தடியான தோலில் செய்த சவுக்குடன் அலைவான். சிறைகளில் கைதிகளை இந்த சவுக்கை வைத்தே அடித்திருக்கிறான். வேலை முடித்து சாயங்கால வேளைகளில், கைதிகள் ஓய்வாக தங்கள் குடிசைக்கு வெளியே சாய்ந்து நின்று பேசிக்கொண்டிருக்கும்போது – `ஏன் வரிசையில் நிற்கவில்லை` என பின்னாலிருந்து அடிப்பான்.

அலையைப் போல சிதறி ஓடுவோம்.

அந்த அடியில் கழுத்திலிருந்து ரத்தம் சிந்தும் கைதி, அதைத் துடைத்துக்கொண்டு சிறையைப் பற்றிய பயத்தில் தன் நாக்கை அடக்கி வைத்துக்கொள்வான்.

ஆனால் ஏனோ வோல்கோவாய் இப்போதெல்லாம் சவுக்குடன் அலைவதில்லை.
அப்போதுதான் கோய்லா அலுவலக வேலை எதுவும் செய்யவில்லை என சுகாவுக்கு புரிந்தது. ஆனால் இவனுக்கு அது தேவையில்லாதது.

‘அதாவது வந்து..எனக்கு உடம்பு சரியில்லாதது போல இருக்கு..’ அவமானகரமாக சொன்னான். ஏதோ தனக்குச் சேராத ஒன்றைப் பற்றி குறிப்பிடுவதுபோல்.

கோய்லா தன் பெரிய கரு விழிகளை காகிதத்திலிருந்து உயர்த்தினான். அவன் எண் மேல்சட்டையில் மறைந்திருந்தது.

’ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாய்? நேற்றிரவே ஏன் சொல்லவில்லை? காலையில் மருத்துவ நேரம் கிடையாது எனத் தெரியுமில்லையா? திட்டக் குழுவிடம் ஏற்கனவே உடம்பு சரியில்லாதவர்கள் பட்டியல் சென்றுவிட்டது.

சுகாவுக்கு இது நன்றாகவே தெரியும். ஆனால் அதே சமயம் மாலையில் அந்தப் பட்டியலில் இடம்பெறுவது கடினம் எனவும் தெரியும்.

‘ஆனால், பாருங்க கோய்லா, நேற்று வரும்படியாக … எனக்கு எதுவும் வலியில்லை’

‘இப்போ எந்த மாதிரி வலிக்கிறது?’.

‘இல்ல, அப்படி கேட்டீங்கனா எங்கேன்னு சொல்ல முடியவில்லை..உடம்பு முழுவதும்..’

சுகாவ் ஒன்றும் மருத்துமனையில் எப்போதும் தங்குபவன் கிடையாது. கோய்லாவுக்கு இது நன்றாக தெரியும். ஆனால் காலையில் இருவரை மட்டுமே வேலை செய்வதிலிருந்து விலக்கு கொடுக்க முடியும்; அதன்படி கொடுத்தும் விட்டான். அவர்கள் பெயரை தன் மேஜையின் கீழே பச்சையாக இருந்த பலகையில் எழுதி வைத்திருக்கிறான். அதற்கு கீழே கோடும் போட்டு விட்டிருந்தான்
’இதைப் பற்றி முன்பே யோசித்திருக்க வேண்டும். கடைசி நேரத்த்தில், வேலை கொடுக்கும்போது சொன்னால் எப்படி? இந்தா இதை வாங்கிக் கொள்’

ஒரு உடம்பு வெப்பமானியை நன்றாக காய துடைத்துவிட்டு சுகாவிடம் கொடுத்தான். அதை வாங்கி சுகாவ் தன் அக்குளில் வைத்துக்கொண்டான்.

ஒரு மேஜையின் நுனியில் உட்கார்ந்ததினால் சுகாவ் அதை கவிழ்க்கப் பார்த்தான். மிக அசெளகரியமாக உட்கார்ந்து கொண்டு, தான் புதிதாக இந்த இடத்திற்கு வந்தது போலவும், ஏதோ சின்ன விஷயமாக வந்திருப்பதைப் போன்ற தோற்றத்தை உண்டு பண்ணினான்.

டொவோஷ்கின் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தான்.

குளிர் காலங்களின் காலை வேளைகளில் காவலாளிகள் சற்று கரிசனத்துடனே நடந்துகொள்வார்கள்.ஆனால் மாலையில் கிடையாது.

கைதிகள் தங்கள் சட்டை பொத்தான்களை கழட்டத் தொடங்கினர். ஐந்து மார்பகங்கள் முன்னே செல்ல, ஐந்து காவலாளிகள் சோதனை செய்தனர்.அவர்களின் சட்டைப் பைகளில் கையைத் துழாவி இருப்பதை வெளியே போட்டனர். தேவையில்லாதது வரும்போது – ‘இது என்ன’ எனக் கேட்டனர்.

காலை வேளையில் ஒரு கைதியிடம் என்ன இருக்கும்?கத்தியா? ஆனால் கத்தியை முகாமின் வெளியேயிருந்து கொண்டு வர முடியாது. மூன்று கிலோ ரொட்டியுடன் வெளியெ ஓடினால் தான் அது செய்தியாகும்.ஒருவர் இருநூறு கிராம் ரொட்டியை கவனமாக எடுத்துச் செல்வதில் முன்னெல்லாம் சிலசிக்கல்கள் இருந்தன. அப்போதெல்லாம் குழுவாய் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக எடுத்துச் செல்வர்.

இந்த முட்டாள்தனத்தில் மிஞ்சியது ஒன்றுமில்லை. மக்களை இன்னும் பாதுகாப்பில்லாமல் கவலைப்பட வைக்க இது இன்னொரு வழி மட்டுமே. வேண்டுமானால் அந்த ரொட்டியை சிறிது கடித்துவிட்டு மீண்டும் குழுத் தலைவரிடம் கொடுக்கலாம். என்னதான் இருந்தாலும் இரு துண்டுகள் ஒரே மாதிரித்தான் இருக்கும்?

நடை பழகும்போது ஏதோஒன்று நிமிண்டிக்கொண்டேயிருக்கும்;நம் ரொட்டித் துண்டு காணாமல்போகுமா?என்ன செய்ய் முடியும்?

பல நல்ல நண்பர்கள் இதனால் சண்டைகூட போட்டிருக்கிறார்கள். ஒரு் நாள் மூன்று கைதிகள் தங்களால் முடிந்த அளவு ரொட்டியை எடுத்துக்கொண்டு முகாமை விட்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவம் காவலாளிகளை தன்னுணர்வுக்கு கொண்டு வந்தது;அன்றிலிருந்து ஒவ்வொருவரும் தங்கள்பகுதி ரொட்டியைத் தாங்களே எடுத்துச் செல்ல வேண்டுமென கூறினார்கள்.

girigopalan@gmail.com

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதினொன்று

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

அலெக்ஸாந்தர் சோல்சனிட்ஸன், தமிழாக்கம் – ரா.கிரிதரன்.


அந்த பேட்டை முழுவதும் கருப்பான மேலங்கி நிறத்தில் காணப்பட்டது. மொத்த வேலைக்கான கூட்டத்தையும் முன்னே வரச் சொன்னார்கள். தன் சட்டையிலிருந்த எண்களை சரி செய்ய வேண்டுமென விரும்பியது சுகாவுக்கு நினைவுக்கு வந்தது. கூட்டதினுள் மெதுவாக உள்ளே நுழையத்தொடங்கினான். இரண்டு மூன்று கைதிகள் எண்களைச் சரிசெய்யும் வரைபடக்கலைஞர்களின் வரிசையில் நின்றிருந்தனர். சுகாவ் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். அந்த எண்களுக்கான விஷேச குணம் பிரச்சனை மட்டுமே. தனியாத் தெரிந்தாலோ கண்காணிப்பாளர் தூரத்திலிருந்தே கண்டுபிடித்திடுவார். ஆனால் எண்களை சரிசெய்யாவிட்டால் கண்டிப்பாக லாக்-அப்பில் வைத்துவிடுவார்கள் என்பது மட்டும் உண்மை.

அந்த முகாமில் மூன்று ஓவியர்கள் இருந்தனர். அதிகாரிகளுக்கு இலவசமாக ஓவியங்கள் வரைந்து கொடுப்பார்கள்.மேலும் எண்களைச் சரிசெய்து கொடுப்பதும் அவர்கள் வேலையே. இன்று வெள்ளை தாடி வைத்த வயதான ஓவியன் இருந்தான். அவன் வைத்திருந்த பிரெஷ்ஷால் தொப்பியில் எண்களை வரைந்தால், பாதிரியார் நெற்றியில் தொடும் தூய நீரென வழியும்.

அந்த கிழவன் தன் கைகவசத்தினுள் ஊதிக்கொண்டு வரைந்து தள்ளிக்கொண்டிருந்தான். அதுஒரு மெல்லிய உறையினால் தைக்கப்பட்டிருந்த கைகவசம்.அவன் கைகள் குளிரில் விரைத்துப் போயிருந்தன. அவனால் அந்த எண்களை மட்டுமே வரைய முடிந்தது.

சுகாவின் மேலங்கியில் S854 என்ற எண்களை தொட்டு வரைந்தான்.வேகவேகமாக வரைந்து முடித்ததினால் சுகாவால் தன் குழுவுடன் இணைய முடிந்தது. அப்போது தன் குழுவிலிருந்த ட்ஸார் பைப்பில் புகை பிடிக்காமல் சிகரெட்டில் புகை பிடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அப்படியானால் தன்னாலும் ஒரு இழுவை அனுபவிக்க முடியும். ஆனால் நேரடியாகக் கேட்காமல், ட்ஸாரின் பக்கத்தில் நெருக்கமாக நின்றுகொண்டு, அவனைத் தாண்டிப் பார்ப்பதுபோல் பார்த்தான்.

அவனை தாண்டிப் பார்த்தாலும், மேற்றுமையோடு ஒருந்தாலும், ஒவ்வொரு இழுவைக்குப் பிறகும் அவனைச் சுற்றிய அடர்த்தியான புகை, மெல்ல மெல்ல அந்த சிகரெட்டின் அளவை குறைந்துக்கொண்டிருந்தது.

பெட்டிக்கோவும் ட்ஸார் அருகே நின்றுகொண்டு, அவன் வாயையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

சுகாவின் கடைசி துளி புகையிலையும் தீர்ந்துபோல நிலையில், அந்த மாலை நேரத்தில் புதிதாக ஏதும் வழி கிடைக்காமல் திணறிக்கொண்டிருந்தான்.

ட்ஸாரின் கடைசி சில இழுவைக்காக , மிக மோசமான ஏக்கத்தைக் கொண்டிருந்தான் சுகாவ். ஆனாலும், பெட்டிக்கோவைப் போல் மிகக் கீழ்த்தரமாக இறங்க மாட்டான்; எந்த ஒருவிஷயத்திற்கும் இன்னொருவனின் வாயை மட்டும் பார்க்க மாட்டான்.

ட்ஸார் ஒரு கலவை நாட்டுக்காரன்; கிரேக்கம், யூதன், காட்டுவாசி- யாரென கண்டுபிடிக்க முடியாது. இன்னும் இளமையாகவே இருந்தான். சில திரைப்படங்கள் எடுத்துள்ளான். ஆனாலும் தன் முதல் படத்திற்கு, முன்பாகவே கைது செய்யப்பட்டுவிட்டான். கரிய, அடர்த்தியான மீசை வைத்திருந்தான். அதை இன்னும் மழிக்காமல் இருக்க ஒரே காரணம் தான் உள்ளது – அவன் கோப்புகளில் அவ்வண்ணமே புகைப்படம் இருந்தது.

‘ட்ஸார் மார்கோவிச்’ , முணகினான் பெட்டிகோவ் ‘எங்களுக்கும் ஒரு இழுவை குடேன்’

அவன் முகம் எதிர்ப்பார்ப்பில் வழிந்துகொண்டிருந்தது.

தன் கருவிழியை உயர்த்தி பெட்டிக்கோவைப் பார்த்தான் ட்ஸெஸார்.தான் புகைக்கும்போது எந்தவிதமான குறிக்கீடும் அவனுக்குப் பிடிக்காது. புகையிலையைக் கொடுப்பதில் அவனுக்கு ஏதும் பிரச்சனையில்லை; ஆனால் தான் புகைக்கும்போது தொந்தரவு செய்வது பிடிக்காது. அவன் மூளையை சுறுசுறுப்பாக்கவே அவன் புகைப் பிடித்துவந்தான். தன் எண்ணங்களை ஒழுங்குபடுத்தவும் அது உதவியது.

ஆனால் தன் புகையிலையைக் கொளுத்தியவுடன் பல கண்களில் தெரிந்த கடைசி இழுவைக்கான எதிர்ப்பார்ப்பு அவனுக்கு எரிச்சலாய் இருந்தது.

ட்ஸெஸார் சுகாவிடம் திரும்பி –

`எடுத்துக்கொள்ளுங்கள், இவான் டெனிசோவிச் அவர்களே` என்றான்.

தான் வைத்திருந்த செப்பு உறையிலிருந்து சிகரெட்டை எடுத்துக் கொடுத்தான்.

என்னதான் மெதுவாக சொன்னாலும்,எங்கள் குழுவிலிருந்த அனைவருக்கும் கேட்டது. யாருக்கு அன்றிரவு ரொட்டி குறையப்போவது எனத் தெரியாமல் பயத்துடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.

மிக்க களைப்பாக இருந்ததால், சுகாவ் மரத்துகள்களான மெத்தையில் படுத்துக்கொண்டிருந்தான். ஒரு முடிவோடிருந்தான்; ஒன்று உண்மையான ஜுரம் வர வேண்டும் இல்லையேல் மூட்டுவலி நீங்க வேண்டும்.

இதற்கிடையே அய்லோஷா தன் இரவு பிரார்த்தனையை தொடங்கியிருந்தான். கழிப்பிடத்திலிருந்து வந்த புய்நோஸ்கி குறிப்பிட்டு யாரிடமும் சொல்லாமல் குசும்பு விசமத்தனத்தோடு – ‘மாலுமிகளே! பற்களை நன்றாக இருக்கிக்கொள்ளுங்கள். வெளியே கண்டிப்பாக முப்பதுக்கும் கம்மியாக இருக்கிறது.’

சுகாவ் ஜுரம் வந்ததென புகல முடிவுசெய்தான்.

அந்நேரத்தில் அவன் போர்வையும்,மேல் சட்டையும் அவனிடமிருந்து பிடிவாதத்துடன் பிடுங்கப்பட்டது. அவன் மேல் அங்கியை தன் முகத்திலிருந்து அகற்றி எழுந்து உட்கார்ந்தான்.அவன் மேல்படுக்கை உயரமிருந்த டார்டார் அவனைப் பார்த்தான்.

தன் முறையில்லாவிட்டாலும் வந்துவிட்டான்.

‘S 854’ சுகாவின் மேல் சட்டையிலிருந்த வெள்ளை கிழிசலில் இருந்ததைப் படித்தான். ‘உனக்கு மூன்று நாட்கள் வேலையுடன் கூடிய தண்டனை’.

அவன் குரலைக் கேட்ட அடுத்த நிமிடம் , அந்த குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த 200 பேர்களும் நிஜ உலகத்திற்கு வந்து வேகவேகமாக உடையணிந்தனர்.

‘எதற்காக பெரிய தலைவரே (1)’ என இளித்துக்கொண்டே சுகாவ் கேட்டான்.

வேலையோடு – அது கூடத் பரவாயில்லை. சூடான சாப்பாடு கொடுத்தவுடன், யோசிக்க நேரமிருக்காது. வேலை முடிந்தாலும் வெளியே செல்லமுடியாததே உண்மையான லாக்-அப்.

‘மணியடித்த பின்னும் எழுந்துகொள்ளாததால். என்னுடன் முகாம் தலைவர் அலுவலகத்திற்கு வா’ என சோம்பேரித்தனத்துடன் டார்டார் கூறினான்.

முடியில்லாமல் சுருங்கிப்போன அவன் முகம் சாந்தமாக அசைக்கமுடியாததுபோல இருந்தது. வேறெவனாவது கிடைப்பானா என திரும்பிப் பார்த்தான். மற்றவர்களோ இருட்டான மூலைகளில் தங்கள் கால்களை கால்சட்டையுள் திணித்துக்கொண்டோ, மேல் சட்டையை உடுத்தியபடி கதவை நோக்கி ஓடிக்கொண்டோ இருந்தனர்.

மெதுவாக டார்டார் அந்த குடிசைக்கு வெளியே சென்றான்

(தொடரும்)
http://beyondwords.typepad.com

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தாவது அத்தியாயம்

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

அலெக்ஸாந்தர் சோல்சனிட்ஸன் தமிழாக்கம் – ரா.கிரிதரன்.


சாப்பாடு என்றுமே அதேதான்.அந்த மாதத்தில் விளையும் காய்கறிதான் கிடைக்கும். போன வரும் முழுவதும் காரட் மட்டுமே கிடைத்தது. அதனால் கடந்த செப்டம்பரிலிருந்து இந்த ஜூன் மாதம் வரை காரட் மட்டுமே கிடைக்கும்.இந்த வருடம் முட்டைக்கோசும் கிடைக்கக்கூடும். மிகவும் நன்றாக விளைச்சல் மாதம் கடந்த ஜூன் தான். அதற்க்குப் பிறகு எல்லா காய்கறிகளும் தீர்ந்துப் போய், வெறும் இலை தழைகளே கிடைத்து வருகிறது. மிகவும் மோசமான மாதம் ஜூலை தான். அப்போது சில தழைகளை மட்டுமே அடுப்பில் போட்டார்கள்.

அந்த சிறு மீனோ சதையைவிட முள்ளாகவே இருந்தது. எலும்பைச் சுற்றிய சதையோ கரைந்துப் போய், தலை மற்றும் வால் பகுதியில் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது. ஒரு துண்டு சதையைக் கூட விட்டுவைக்காமல், சுகாவ் அந்த முட்களை கடித்து முழுவதும் உறிஞ்சிக் கொண்டும், மீந்தவற்றை மேஜையின் மேல் துப்பிக்கொண்டும் இருந்தான். முட்களில் ஒட்டிக்கொண்டிருந்த வால், கண் அனைத்தையும் மென்றுகொண்டிருந்தாலும், சூப்பில் மிதந்துகொண்டிருந்த கண்களை சாப்பிடவில்லை. என்ன ஒரு கண்கள். மீன் கண்கள். இதைப் பார்த்த அவன் குழுவினரோ தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

அன்று சுகாவ் மிகக் குறைவாகவே சாப்பிட்டான். தன் குடிசைக்குத் திரும்பாததால், அவன் சிற்றுண்டியை ரொட்டியில்லாமலேயே தின்று முடித்தான். ரொட்டியை பிறகு சாப்பிடுவான். அதுவே சரியாக இருக்கக்கூடும்.

சூப்பிற்குப் பிறகு கம்பங்கூழ் முடிக்க வேண்டும். அதுவும் ஆறிப் போய் இறுகியிருந்தது. சுகாவ் அதை சின்னச் சின்னதாய் உடைத்தான். சூடாக இருக்கும்போதும் சுவை இல்லாமல் இருக்கும் அது, வயிற்றை கொஞ்சம் கூட நிரப்பாது. மஞ்ச நிற புல் போல இருந்தது. சீனர்களிடமிருந்து கற்றுக் கொண்டது இது. சூடு செய்யும் போது கொஞ்சம் கனமாக இருந்தாலும், கூழ் அனைத்தும் வற்றிவிடும்.

ஸ்பூனை நக்கிவிட்டு தன் காலணிக்குள் நுழைத்தபடியே சுகாவ் தொப்பி அணிந்தபடி தன் மருத்துவ அறையை நோக்கி நடக்கலானான்.

வானம் இருண்டிருந்தது. முகாமின் விளக்குகள் நட்சத்திரங்களைத் துரத்தியிருந்தது. இரண்டு பெரிய தேடுவிளக்குகள் இன்னும் முகாம் முழுவதும் பெருக்கிக் கொண்டிருந்தது. சண்டைக்குப் பிறகு மீதமிருந்த பல வண்ண எரிதழல்களை இந்த விசேசமான முகாமில் மின் தடை ஏற்படும்போது யுத்தகளம் போல பற்ற வைப்பார்கள். பின்னர் அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டனர். பணத்தை மிச்சம் செய்வதற்க்காக இருக்கலாம்.

கும்மிருட்டென இருந்தாலும், இன்னும் சிறிது நேரத்தில் வேலை செய்ய கட்டளை அறிவிக்கப்படுமென அனுபவசாலிகளுக்குத் தெரியும்.குரமோயின் வேலையாள் ஆறாம் எண் குடிசைக்கு சிற்றுண்டியுடன் சென்றுவிட்டான். இந்த முகாமை விட்டு விலகாத காவலாளி் அவன். வயதான தாடிவைத்த ஓவியன். C.E.D என்ற கழகத்தில் கைதிகளின் உடையில் எண்களை வரைபவன். அங்கே மறுபடியும் டார்டார் வந்துவிட்டான். பொதுவாகவே கம்மியான ஆட்களே இருந்தனர். எல்லோரும் ஏதாவதொரு மூலைக்கு சென்றிருக்கவேண்டும் அல்லது குளிருக்கு கதகதப்பாக எங்காவது ஒதுங்கிருக்கவேண்டும்.

பொதிமூட்டை பின்னால் தந்திரமாக ஒழிந்துகொண்ட சுகாவ் டார்டாரிடம் தப்பித்துக்கொண்டான்.

என்னதான் மெதுவாக சொன்னாலும்,எங்கள் குழுவிலிருந்த அனைவருக்கும் கேட்டது. யாருக்கு அன்றிரவு ரொட்டி குறையப்போவது எனத் தெரியாமல் பயத்துடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.

மிக்க களைப்பாக இருந்ததால், சுகாவ் மரத்துகள்களான மெத்தையில் படுத்துக்கொண்டிருந்தான். ஒரு முடிவோடிருந்தான்; ஒன்று உண்மையான ஜுரம் வர வேண்டும் இல்லையேல் மூட்டுவலி நீங்க வேண்டும்.

இதற்கிடையே அய்லோஷா தன் இரவு பிரார்த்தனையை தொடங்கியிருந்தான். கழிப்பிடத்திலிருந்து வந்த புய்நோஸ்கி குறிப்பிட்டு யாரிடமும் சொல்லாமல் குசும்பு விசமத்தனத்தோடு – ‘மாலுமிகளே! பற்களை நன்றாக இருக்கிக்கொள்ளுங்கள். வெளியே கண்டிப்பாக முப்பதுக்கும் கம்மியாக இருக்கிறது.’

சுகாவ் ஜுரம் வந்ததென புகல முடிவுசெய்தான்.

அந்நேரத்தில் அவன் போர்வையும்,மேல் சட்டையும் அவனிடமிருந்து பிடிவாதத்துடன் பிடுங்கப்பட்டது. அவன் மேல் அங்கியை தன் முகத்திலிருந்து அகற்றி எழுந்து உட்கார்ந்தான்.அவன் மேல்படுக்கை உயரமிருந்த டார்டார் அவனைப் பார்த்தான்.

தன் முறையில்லாவிட்டாலும் வந்துவிட்டான்.

‘S 854’ சுகாவின் மேல் சட்டையிலிருந்த வெள்ளை கிழிசலில் இருந்ததைப் படித்தான். ‘உனக்கு மூன்று நாட்கள் வேலையுடன் கூடிய தண்டனை’.

அவன் குரலைக் கேட்ட அடுத்த நிமிடம் , அந்த குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த 200 பேர்களும் நிஜ உலகத்திற்கு வந்து வேகவேகமாக உடையணிந்தனர்.

‘எதற்காக பெரிய தலைவரே (1)’ என இளித்துக்கொண்டே சுகாவ் கேட்டான்.

வேலையோடு – அது கூடத் பரவாயில்லை. சூடான சாப்பாடு கொடுத்தவுடன், யோசிக்க நேரமிருக்காது. வேலை முடிந்தாலும் வெளியே செல்லமுடியாததே உண்மையான லாக்-அப்.

‘மணியடித்த பின்னும் எழுந்துகொள்ளாததால். என்னுடன் முகாம் தலைவர் அலுவலகத்திற்கு வா’ என சோம்பேரித்தனத்துடன் டார்டார் கூறினான்.

முடியில்லாமல் சுருங்கிப்போன அவன் முகம் சாந்தமாக அசைக்கமுடியாததுபோல இருந்தது. வேறெவனாவது கிடைப்பானா என திரும்பிப் பார்த்தான். மற்றவர்களோ இருட்டான மூலைகளில் தங்கள் கால்களை கால்சட்டையுள் திணித்துக்கொண்டோ, மேல் சட்டையை உடுத்தியபடி கதவை நோக்கி ஓடிக்கொண்டோ இருந்தனர்.

மெதுவாக டார்டார் அந்த குடிசைக்கு வெளியே சென்றான்

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஒன்பதாவது அத்தியாயம்

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்


சுகாவ் தன் ரொட்டியைப் பிடித்துக்கொண்டு, காலணியிலிருந்து விடுவித்துக்கொண்டான். அதனுள்ளேயே தன் கரண்டியை வைத்துவிட்டு தன் படுக்கையை நோக்கி தவழ்ந்தபடி போய்ச் சேர்ந்தான். படுக்கையிலிருந்து ஓட்டையை பெரிதாக்கி தன் ரொட்டியை அதனுள் திணித்து வைத்தான்.

தன் தொப்பியைக் கழட்டி அதனுள்ளிருந்து ஒரு ஊசி நூலை எடுத்தான். கைகளால் தை, தை, தை என அந்த ஓட்டையை தைத்து முடித்தான். அதற்குள்ளாக அவன் வாயிலிருந்த சர்க்கரை கரைந்துவிட்டிருந்தது. ஒவ்வொறு நரம்புகளும் அறந்து போவதுபோல் இருந்தது. எந்த நேரத்திலும் கண்காணிப்பாளர் அறையின் முன் வந்த கத்தத் தொடங்குவான்.

சுகாவின் கைகள் மிக வேகமாக வேலை செய்யத் தொடங்கினாலும், அவன் மூளை அதைவிட வேகமாக வேலை செய்து கொண்டிருந்தது.ு

பாதிரியான அல்யோஷா புது ஏற்பாட்டை மிக சத்தமாக படித்துக் கொண்டிருந்தான் ( சுகாவிற்காக இருக்கும் – இந்த பயல்கள் புது வரவுகளை கவர விருப்பப்படுகிறவர்கள்)

`கொலை, திருட்டு, ஏமாற்றுதல், மற்றவர் உரிமை மீறுதல் போன்றவற்றிற்காக நீங்கள் துன்பப்படக்கூடாது கிறுஸ்துவராக யாராவது துன்பப்ப்ட்டால், அதற்காக வெட்கப்படக் . கூடாது. ஆனால் கடவுளின் பேரால் மன்னிப்பு கோர வேண்டும்.`

அய்லோஷோ மிக உஷாராணவன். சுவற்றில் சிறிது ஓட்டைப்போட்டு அதில் ஒழித்து வைத்திருந்தான். ஒவ்வொரு தேடுதலிலும் தப்பி விடுகிறது.

முன்னைப் போன்ற அதே மின்னல் வேகச் சுறுசுறுப்புடன், சுகாவ் தன் மேலங்கியை குறுக்காக வெட்டப்பட்டிருந்த கம்பியில் மாட்டி, தன் படுக்கைக்கு அடியிலிருந்து தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டான் – ஒரு காலுறை, பழைய துணி இரண்டு, சிறு கயிறு, அதன் முனையில் கம்பி.கட்டிலின் மேலிருந்த மண்ணைத் தள்ளிவிட்டான், தலையணையச் சரிசெய்துகொண்டு அதை தன் காலுக்கடியில் தள்ளிவிட்டான். அப்போது டியூரின் எழுந்து நின்று குரைத்தான் –

‘தூக்கம் முடிந்துவிட்டது. நூத்தி நான்கு. வெளியே வா’

அந்த நேரத்தில் தூக்கம் வந்தாலும் சரி, மொத்த குழுவும் எழுந்துகொண்டு அறைக்கதவை நோக்கி நடந்தது. டியூரின் பத்தொன்பது வருடமாக இங்கேயே இருப்பவன். ஒரு நிமிடம் கூட அதிக நேரத்தில் தன் குழுவை வெளியே எழுப்ப மாட்டான்.அவன் ‘வெளியே வா’ என்னும்போது அடிபணிவதே சிறப்பு.

கனமாக காலடி சத்தத்தையும், கெட்டியாக வாயை மூடியபடி நடந்த மக்கள், ஒவ்வொருவராக மேடையில் ஏறினர். இருபதாம் குழுவின் தலைவன், டியூரினைப் போல் – ‘வெளியே வா’ எனத் தொடர்ச்சியாகக் கத்தினான். தன் காலை சுற்றிய துணியின் மேல் காலணியை அணிந்துகொண்டான் சுகாவ். தன் மேலங்கியை அணிந்து கொண்டு, இடுப்பில் அந்த கயிறால் இருகினான்.

இவை எல்லாவற்றையும் செய்துவிட்டு அவன் குழுவின் கடைசி ஆள் குடிசையை விட்டு மறைவதற்குள் சென்று சேர்ந்துகொண்டான். இயல்பு நிலையை விட்டு சற்றே தடிமனாக இருந்த அந்த குழு, யாரையும் முந்தாமல் தங்கள் திடலில் சென்று நின்றுகொண்டனர். பனியில் நொருங்கிய அவர்களது காலணி சத்தம் மட்டுமே கேட்டது.

கிழக்கில் பச்சை நிறத்தில் வானம் மினுக்கத் தொடங்கினாலும், இன்னும் இருட்டாகவே இருந்தது. காலைக் கதிரவனிடமிருந்து திடீர் குளிர் காற்று அடித்தது.

காலையில் நடந்து வெளியே செல்வது போன்ற கொடுமையானது எதுவும் கிடையாது. இருட்டாய், குளிரில், மிகுந்த பசியுடன் நாள் முழுவதும் வேலை செய்வது. நாக்கை இழந்து விடுவீர்கள். எவருடனும் பேசும் எண்ணமே ஏற்படாது.

அந்தத் திடலில் ஓர் இளம் காவலாளி நின்று கொண்டிருந்தான்.

‘என்ன டியூரின் ? எவ்வளவு நேரம் உனக்காக காத்திருப்பது? திரும்பவும் தாமதமாக வந்துள்ளாய்?’

சுகாவிற்கு வேண்டுமானால் பயம் ஏற்படலாம், டியூரினுக்குக் பயமே கிடையாது. இந்த குளிரிலும் அவனுக்காக ஒரு சுவாசத்தைக் கூட வீணாக்க மாட்டான். சத்தம் போடாமல் நின்றுகொண்டிருந்தான்.

அதற்குப் பிறகு அந்த குளிரிலும், பனியிலும் குழு அவனைத் தொடரத் தொடங்கியது. கர கர, ம்ருக்,ம்ருக்..

டியூரின் இந்த நூற்றி நான்காவது குழுவ நன்றாக வளர்த்துவிட்டிருக்கவேண்டும், பன்றிக் கரியெல்லாம் கொடுத்து. பழைய இடத்திற்கே இந்தக் குழுவும் சென்று விட்டது. மகா முட்டாளான குழுக்கள் மட்டுமே – சமூக மேம்பாட்டு வாழ்க்கை வழி என்ற இந்த பகுதிக்கு வரும்.

ஐய்யோ.. இன்று மகா மோசமான தினம் ! இருபத்து ஏழு பாகைப் பனி, அதிகப்படியான காற்று, ஒதுங்க இடமும் கிடையாது. நெருப்பும் கிடையாது.

ஒரு குழுத் தலைவனுக்கு நிறைய பன்றிக் கறி தேவைப்படும். திட்டங்களை வகுக்கும் குழுவிற்கும், தனக்கும் தேவைப்படுமே. பார்சல் எதுவும் கிடைக்காவிட்டாலும், அவனுக்கு கறி குறைவாகக் கிடைக்கவில்லை. அவன் குழுவிலிருந்தவர்கள் ஏதேனும் வாங்கிச் செல்வார்கள்.

இல்லையென்றால் இந்தக் குழுவில் பிழைக்க முடியாது.

அங்கிருந்த சின்னப் கரும்பலகையைப் பார்த்து , வயதான கண்காணிப்பாளர் –

`உடம்பு சரியில்லாமல் ஒருவன் மட்டுமே இன்று விடுப்பு, டியூரின். மற்ற இருபத்து மூன்று நபர்களும் வந்திருக்கிறார்களா?`

`இருபத்து மூன்று` – தலையாட்டியபடி டியூரின் கூறினான்.

யாரின்று வரவில்லை. பாண்டலேவேவ் அங்கில்லை. ஆனால் அவனுக்கு உடம்பிற்கு ஒன்றுமில்லையே.

அதே நேரம் அந்தக் குழுவினுள் சலசலப்பு ஏற்பட்டது. பாண்டலேவேவ் , நாய்க்குப் பிறந்தவன், இன்றும் பின் தங்கிவிட்டான். இல்லவே இல்லை, அவனுக்கு உடம்பு சரியாகத் தான் உள்ளது. கண்காணிப்பு கூடத்தில் அவனை கூட்டிச் சென்றிருப்பார்கள். யாரையாவது காட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பான்.

அவனை இரண்டு, மூன்று மணிநேரம் வைத்திருப்பார்கள். யாருக்கும் கேட்காது. யாருக்கும் தெரியாது.

அவனை அடித்த பின்னர், மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் சொல்லி எல்லாவற்றையும் சரி செய்துவிடுவார்கள்.


Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – எட்டாவது அத்தியாயம்

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்



லோவட் நதிவோரமாக இருந்த மருத்துவமனைக்கு தன் தாடை உடைந்தபோதுபோனது டோவுஷ்கின்னின் பனி போன்ற வெள்ளை நிற தொப்பியை பார்த்ததும் நினைவிற்கு வந்தது. என்ன ஒரு மடத்தனம் செய்திருந்தான்! தன் மோவாய் உடைந்திருந்தும் திரும்பவும் சண்டையிடச் சென்றான். விருப்பப்பட்டால் ஐந்து நாட்கள் ஓய்வு வாங்கியிருக்கலாம்.

ஆனால் இங்கோ இரண்டு மூன்று வாரங்கள் ஓய்வு பெறலாமென கனவு கண்டுகொண்டிருக்கின்றான். அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு இல்லாவிட்டாலும், மருத்துவமனைக்குச் சென்று படுக்கையில் மூன்று வாரங்கள் ஆடாமல் அசையாமல் படுத்துக் கொள்ளலாம். அவற்களின் தண்ணீர் போன்ற சூப்பைக் கொடுத்தாலும் பரவாயில்லை.

முகானின் மருத்துவமனையில் கூட இப்போதெல்லாம் படுத்து ஓய்வெடுக்க விடுவதில்லை என்பது இப்போதுதான் நினைவிற்கு வந்தது.ஸ்டீபன் ரிகோரிச் என்ற புது மருத்துவர் வந்துள்ளார். தன் கனத்த எருமைக் குரலை உடைய அவன் தானும் நிம்மதியில்லாமலு அங்கு வரும் நோயாளிகளின் நிம்மதியையும் பறித்து வருகின்றான். தங்கள் காலால் நிற்கக்கூடிய நோயாளிகளுக்கு மருத்துவமனையின் உள்ளும் வெளியேயும் பல புது வேலைகளை உருவாக்கினான். தோட்டத்தை நடுவது, மண் பாதைகள் வகுப்பது, மலர் செடிகளுக்கு கீழே மண் நிரப்புவது என வெய்யில் காலத்திலும், பனி தடுப்பு நடுவதை குளிர் காலத்திலும் கொடுத்தான். எவ்விதமான நோய்க்கும் உழைப்பே முதன்மையான மருந்து எனக் கூறிவந்தான்.

ஒரு குதிரையைக் கூட அதிக வேலைகொடுத்து கொல்ல முடியும். அந்த மருத்துவருக்கு அது புரிய வேண்டும். ரத்தம் சிந்தி கற்களை அடுக்கினால் நிச்சியமாக சத்தம் அடங்கிப் போவான்.

டோவுஷ்கின் எழுதிக்கொண்டேயிருந்தான். தன் வேலையை தவிர வேறேதோஒரு சொந்த வேலை தான் செய்துகொண்டிருக்கிறான். ஆனால் அது சுகாவிற்கு தேவையில்லாதது. அதற்குமுன் நாள் மாலை எழுதிய கவிதையின் திருத்தமான பிரதியை எழுதிக்கொண்டிருக்கிறான். இன்றைக்கு வேலையே மருந்து என அறிவுரை செய்த மருத்துவர் ஸ்டீபன் ரிகோரிச்சிடம் காட்டுவதாக வாக்கு அளித்திருந்தான்.

முகாமில் மட்டுமே நடக்கக்கூடியது இந்த ஏமாற்றுத்தனம். டோவுஷ்கின் துணை மருத்துவரே அல்ல. இலக்கியம் படித்துக் கொண்டிருந்த மாணவனான அவனை இரண்டாம் ஆண்டு போது கைது செய்தார்கள். ஸ்டீபன் ரிகோரிச் இவனுக்கு நரம்பினுள் போடும் ஊசி முறையைக் கற்றுத் தந்து, தன்னிடமிருந்த அப்பாவி கைதிகளின் மேல் பரிசோதித்துக்கொண்டிருக்கச் சொல்லியிருந்தார். சுதந்திரமாய் எழுதமுடியாததை இங்கு சிறையில் எழுதி வந்தான்.

இரண்டு தடுப்புகளிருந்த பனி இறுகிய ஜன்னலின் வழியே வேலை செய்வதற்காக வந்த சிமிஞை கேட்கவில்லை.ஒரு பெருமூச்சுடன் சுகாவ் எழுந்து நின்றான். இன்னும் ஜுர சிலிர்ப்பு இருந்தாலும் வேலையை தட்டிக் கழிக்க முடியாது.

டோவுஷ்கின் வெட்பமானியை எடுத்துப் பார்த்தான்.

`ஹும்..இரண்டுகெட்டான் நிலை.முப்பத்து ஏழு புள்ளி இரண்டு. முப்பத்து எட்டு இருந்தால் எல்லோருக்கும் புரிந்திருக்கும். உன்னை விட முடியாது. இங்கு நிற்பது ஆபத்து. மருத்துவர் வந்து உன்னைச் சோதிப்பார். உனக்கு ஜுரமிருக்கிறது என அவர் முடிவு செய்தால் தப்பிப்பாய். இல்லையேல் விடமாட்டார். லாக் அப் அறையில் அடைத்து விடுவார். வேலைக்கு இப்போது செல்வதே உனக்கு நல்லது`

சுகாவ் ஒன்றும் சொல்லவில்லை. தலைக் கூட ஆட்டவில்லை. தன் தலைக்குமேல் தொப்பியை கவிழ்த்துக்கொண்டு வெளியேறினான்.

குளிரில் இருப்பவனை கதகதப்பில் இருப்பவன் எப்படி புரிந்து கொள்ள முடியும்?

குளிர் ஊடுருவியது. கடுமையான பனி மூட்டம் சுகாவைச் சுற்றிக்கொண்டு அவனை கடுமையாக இரும்ப வைத்தது. வெளியில் -27 டிகிரி. சுகாவோ 37 டிகிரி இருந்தான். சண்டை வலுத்தது.

மெதுவாக ஓடிக்கொண்டே தன் குடிசையை அடைந்தான். பயிற்சி தளமும், முகாமும் காலியாக இருந்தது. இந்த நேரத்தில் தான் எல்லோரும் ஒரு போலியான நிம்மதியில் இருப்பார்கள். முகாமின் அணிவகுப்பு அன்று இருக்காது என்ற நிம்மதியே அது. காவலாளிகளோ தங்களின் வெப்பமான அறைக்குள் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களின் தூங்கும் தலை துப்பாக்கியின் மேல் சாய்ந்திருக்கும். அந்த குளிரான கண்காணிப்பு உயரமேடைகளில் அவர்களுக்கு ஒன்றும் பாலும் தேனும் போல் இனிப்பாக இருக்காது. வாசல் கதவின் முன்னேயிருக்கும் காவலாளியோ நெருப்பில் கரியை அள்ளிப் போடுகிறான். முகாமைத் தேடுவதற்குமுன், அதன் காவலாளிகள் கடைசி சிகரெட்டைப் பிடித்தார்கள்.கைதிகளோ தங்களின் வலைகளில், இடுப்பில் கயிறும், தாடைமுதல் கண்வரை மூடிய துணியுமாய் காலணி அணிந்துகொண்டு தங்கள் படுக்கையில் காத்திருப்பார்கள். அவர்கள் காத்திருப்பதோ குழுத் தலைவனிடமிருந்து – ‘வெளியே போங்கள்’ என்ற கத்தலுக்காக.

104ஆம் குழு ஏழாம் குடிசையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. பாவ்லோ என்ற துணை குழுத்தலைவர் பென்சிலை தன் உதட்டில் பொருத்தியபடியும், சுகாவின் சுத்தமான நண்பனுமான அய்லோஷா ஒரு நோட்டு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபடி முழித்துக்கொண்டிருந்தனர். அந்த நோட்டில் பைபிள் புதிய ஏற்பாட்டை தானே பிரதி எடுத்திருந்தான்.

பாவ்லோவின் படுக்கையை நோக்கி நேராகச் சத்தமேதும் போடாமல் சுகாவ் சென்றான்.

பாவ்லோ தலையைத் தூக்கிப் பார்த்தான்.

‘ஆ! இவான் டெனிசோவிச் , உன்னை லாக் அப் அறையுள் போடவில்லையா? நலமா நண்பா?’ – உக்ரேனிய வட்டார வழக்கில் கேட்டான். அப்படிக் கேட்டது மேற்கு உக்கிரேனியற்கள் சிறையில் கூட இப்படி பேசுவது ஆச்சர்யமாக இருந்தது.

சுகாவின் ரொட்டி அளவை எடுத்து அவனிடம் நீட்டினான். அந்த குவியலின் மேல் ஒரு கரண்டி சக்கரை இருந்தது. நேரமில்லாததால் சுகாவ் ஒழுங்காக பேசினான் (துணைக் குழுத்தலைவர் கூட் இந்த முகாமில் முக்கியமான அதிகாரி தான்). அவசரத்திலிருந்தாலும் சக்கரையை ரொட்டியின் மேலிருந்து நக்கியபடி, தன் படுக்கையில் ஏறி படுத்தான். ஐம்பத்து ஐந்து கிராம் இருக்கிறதாயென பார்த்தவாறு தன் ரொட்டியைச் சாப்பிடத்தொடங்கினான். பல ஆயிரம் முறை இதைப்போல பல சிறைகளிலும், முகாமிலும் எடையை தராசில்லாமல் பார்த்திருந்தாலும், இந்த ரொட்டிகளில் உண்மையான எடை வராதென அவனுக்குத் தெரியும். ஒவ்வொரு ரொட்டியிலும் குறைவாகவே இருக்கும். எவ்வளவு குறைவு என்பதுதான் முக்கியம். உங்கள் ஆதமாவை தேற்றுவாற்கள் என தினமும் நினைப்பீர்கள் – இன்றைக்கு எதுவும் செய்திருக்க மாட்டார்கள்.

ரொட்டியை இரண்டாய் உடைத்தபோதுதான் இருபது கிராம் குறைவாக இருப்பது தெரிந்தது. ஒரு பாதியை தன் காலணியின் மறைவானதொரு இடத்தில் ஒழித்து வைத்தான். சிற்றுண்டியுடன் சாப்பிடாமல் வைத்த மற்றொரு பாதியை அப்போதே சாப்பிட முடிவு செய்தான். வேகவேகமாக முழுங்கும் சாப்பாடு உணவே அல்ல. அது நிறைவைத் தராது. தன் காலணி பைக்குள் அதைத் திணிக்கலாமென நினைத்தான். அந்த நினைப்பை எதிர்த்து சாப்பிடத் தொடங்கினான். இரண்டு காவலாளிகளை உணவைத் திருடியதற்காக உதைத்தார்கள் என நினைவிற்கு வந்தது.

அந்த குடிசை பொது பூங்காவைப் போல பெரியது.


http://beyondwords.typepad.com

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஏழாவது அத்தியாயம்

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்.


டார்டர் வேகமாக கண்காணிப்பாளர் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.சுகாவ் தந்திரமாக ஒழிந்துகொண்டான். இவனிடம் மாட்டினால் அவ்வளவுதான். அவ்வளவு சாதாரணமாக விடமுடியாது. தனித்து எந்த வேளையிலும் கண்காணிப்பாளர்கள் கண்களில் மாட்டக்கூடாது. குழுவுடன் இருந்தால் பரவாயில்லை. எந்த வேலையை செய்யக் கூப்பிட நோட்டம் விடுகிறார்களோ அல்லது தங்கள் எரிச்சலைக் காட்ட யார் மேல் விழுந்து பிடுங்குவார்களோ தெரியாது? இந்த குழாமை சுற்றி வந்து அவர்கள் படித்த புது விதிமுறைகளை மறக்க முடியுமா? கண்காணிப்பாளரைப் ஐந்து அடிகள் தள்ளிப் பார்க்கும்போதே தொப்பியை கழட்டி விடவேண்டும். அவரைத் இரண்டு அடிகள் தாண்டியப் பிறகே அணிந்துகொள்ளவேண்டும். சில காவலாளிகள் எங்கோ பராக்கு பார்த்த படி செல்வார்கள். ஆனால் சில புதிய காவலாளிகளுக்கு இந்த விதி கடவுளாக அவர்களுக்கு அனுப்பிய வரம். இந்த தொப்பி விவகாரத்தினால் எவ்வளவு கைதி்ளை சிறையில் அடைத்து சித்திரவதை செய்திருப்பார்கள்? வேண்டவே வேண்டாம், சற்று ஒதுங்கியே நிற்கலாம்.

டார்டர் கடைசியாக கடந்தவுடன், சுகாவ் மருத்துவர் குடிசைக்குள் நுழைய முடிவுசெய்தான்.அப்போதுதான் ஞாபகம் வந்தது. உயரமான லெட் குடிசை ஏழிற்கு வரச்சொல்லியிருந்தான். வீட்டிலே தயாரித்த புகையிலைச் சாறு சில குவளைகள் குடிக்கக் கூப்பிட்டிருந்தான். இதுவரை நடந்த கூத்தில் இதை மறந்துப் போயிருந்தான்.நேற்று மாலைதான் லெட்டிற்கு வீட்டிலிருந்து ஒரு பை நிறைய புகையிலை வந்திருந்தது. அடுத்த நாள் வரை எவ்வள்வு மீதமிருக்குமோ, அதற்காக ஒரு மாதம் வரை காத்திருக்கவேண்டியதுதான்.சாம்பல்-பழுப்பு நிறத்தில் லெட்டின் புகையிலை பலமான, அதே சமயம் வாசனையானதாகும்.

சுகாவ் தன் காலணியை அலுப்பில் உதைத்துக் கொண்டான்.அவன் வந்த வழியே திரும்பி லெட்டிடன் செல்ல வேண்டுமா? ஆனால் மருத்தவர் அறைக்கு மிகக் குறையான தூரமே இருந்தது. அதனால் மெல்லமாக ஓடத்தொடங்கினான். பனி சத்தத்துடன் அவன் காலணிக்குள் ,அவன் அறைக்குள் நுழைந்தபோது, மெதுவாக அதுவும் நுழைந்தது.

அந்த அறையின் தாழ்வாரம் மிகச் சுத்தமாக இருந்ததால் ஒவ்வொரு அடியை வைக்கும் போதும் பயமாக இருந்தது.சுவற்றில் வெள்ளை சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தது. மேலும் எல்லா தளபாடங்களும் வெள்ளையாகவே இருந்தது.

மருத்துவரின் அறை மூடியிருந்தது. மருத்துவர்கள் இன்னும் உறக்கத்தில் இருக்கக் கூடும். கோல்யா டோவுஷின் என்ற இளைஞன் தான் துணை மருத்துவர். அவன் சுத்தமான சிறிய மேஜையில் அமர்ந்திருந்தான். சின்ன வெள்ளைத் தொப்பி அணிந்து, அதே நிறத்தில் மேலங்கியுடன் ஏதோ எழுதிக்கொண்டிருந்தான்.

அந்த இடத்தில் வேறுயாரும் இல்லை.

கண்காளிப்பாளர் முன்னால் இருப்பதைப் போல தொப்பியை கழட்டினான். மெதுவாக குழாமில் செய்வதை போல கண்களை மெல்லத் தாழ்த்தினான். கோய்லா நிதானமாக,வார்த்தைகளுக்கு நடுவே சமமான இடைவெளிவிட்டு காகிதத்தின் ஒரு மூலையிலிருந்து , ஒவ்வொரு வரியும் அந்த மூலையிலிருந்து சிறிது தள்ளி, கொட்டிலாக்கத்தில் எழுதிக்கொண்டிருந்தான்.அப்போதுதான் கோய்லா அலுவலக வேலை எதுவும் செய்யவில்லை என சுகாவுக்கு புரிந்தது. ஆனால் இவனுக்கு அது தேவையில்லாதது.

‘அதாவது வந்து..எனக்கு உடம்பு சரியில்லாதது போல இருக்கு..’ அவமானகரமாக சொன்னான். ஏதோ தனக்குச் சேராத ஒன்றைப் பற்றி குறிப்பிடுவதுபோல்.

கோய்லா தன் பெரிய கரு விழிகளை காகிதத்திலிருந்து உயர்த்தினான். அவன் எண் மேல்சட்டையில் மறைந்திருந்தது.

’ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாய்? நேற்றிரவே ஏன் சொல்லவில்லை? காலையில் மருத்துவ நேரம் கிடையாது எனத் தெரியுமில்லையா? திட்டக் குழுவிடம் ஏற்கனவே உடம்பு சரியில்லாதவர்கள் பட்டியல் சென்றுவிட்டது.

சுகாவுக்கு இது நன்றாகவே தெரியும். ஆனால் அதே சமயம் மாலையில் அந்தப் பட்டியலில் இடம்பெறுவது கடினம் எனவும் தெரியும்.

‘ஆனால், பாருங்க கோய்லா, நேற்று வரும்படியாக … எனக்கு எதுவும் வலியில்லை’

‘இப்போ எந்த மாதிரி வலிக்கிறது?’.

‘இல்ல, அப்படி கேட்டீங்கனா எங்கேன்னு சொல்ல முடியவில்லை..உடம்பு முழுவதும்..’

சுகாவ் ஒன்றும் மருத்துமனையில் எப்போதும் தங்குபவன் கிடையாது. கோய்லாவுக்கு இது நன்றாக தெரியும். ஆனால் காலையில் இருவரை மட்டுமே வேலை செய்வதிலிருந்து விலக்கு கொடுக்க முடியும்; அதன்படி கொடுத்தும் விட்டான். அவர்கள் பெயரை தன் மேஜையின் கீழே பச்சையாக இருந்த பலகையில் எழுதி வைத்திருக்கிறான். அதற்கு கீழே கோடும் போட்டு விட்டிருந்தான்
’இதைப் பற்றி முன்பே யோசித்திருக்க வேண்டும். கடைசி நேரத்த்தில், வேலை கொடுக்கும்போது சொன்னால் எப்படி? இந்தா இதை வாங்கிக் கொள்’

ஒரு உடம்பு வெப்பமானியை நன்றாக காய துடைத்துவிட்டு சுகாவிடம் கொடுத்தான். அதை வாங்கி சுகாவ் தன் அக்குளில் வைத்துக்கொண்டான்.

ஒரு மேஜையின் நுனியில் உட்கார்ந்ததினால் சுகாவ் அதை கவிழ்க்கப் பார்த்தான். மிக அசெளகரியமாக உட்கார்ந்து கொண்டு, தான் புதிதாக இந்த இடத்திற்கு வந்தது போலவும், ஏதோ சின்ன விஷயமாக வந்திருப்பதைப் போன்ற தோற்றத்தை உண்டு பண்ணினான்.

டொவோஷ்கின் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தான்.

இந்த நோயாளிகள் அறை ஒரு முகாமின் சத்தமே கேட்காதபடி ஓர் மூலையில் இருந்தது. அங்கே எந்தவிதமான கடிகாரங்களும் இல்லை. சிறைக் கைதிகளும் கடிகாரம் எடுத்துச் செல்ல முடியாது. காவலாளி தான் மணி பார்த்து சொல்ல முடியும். எலிகூட கீறும் சத்தம் கேட்காது. அதை இதற்காகவே வளர்க்கப்பட்ட மருத்துவமனையின் பூனை பார்த்து கொண்டது.

இதைப்போன்ற ஊசி நுனி சத்தம் கூட இல்லாத, வெளிச்சமான அறையில் ஐந்து நிமிடம் உட்காருவது கூட சுகாவிற்கு மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது.அறையின் சுவறில் பார்வையை செலுத்திய போது அவை வெறுமையாக இருப்பதைக் கண்டான். அவன் மேலங்கியின் எண் கிட்டத்தட்ட அழிந்து விட்டுருந்தது. அதை கவனிப்பார்கள். அதை கொஞ்சம் சரிசெய்ய வேண்டும். தன் தாடையைத் தடவியபோது கொஞ்சம் முரட்டுத் தனமாக இருந்தது. அவன் பத்து நாளைக்குமுன்னால் குளித்ததற்குப் பிறகு தாடி மிக வேகமாக வளர்ந்து விட்டது.

இன்னும் அடுத்த மூன்று நாட்களில் மறுபடி குளிக்க வேண்டும். அப்போது தாடியை மழித்துக் கொள்ளலாம். எதற்காக நாவிதனிடம் மழித்துக்கொள்ள வரிசையில் நிற்க வேண்டும்?

அப்படி யாருக்காக அழகு செய்ய வேண்டும்?


http://beyondwords.typepad.com

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஆறாவது அத்தியாயம்

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்.



சாப்பாடு என்றுமே அதேதான்.அந்த மாதத்தில் விளையும் காய்கறிதான் கிடைக்கும். போன வரும் முழுவதும் காரட் மட்டுமே கிடைத்தது. அதனால் கடந்த செப்டம்பரிலிருந்து இந்த ஜூன் மாதம் வரை காரட் மட்டுமே கிடைக்கும்.இந்த வருடம் முட்டைக்கோசும் கிடைக்கக்கூடும். மிகவும் நன்றாக விளைச்சல் மாதம் கடந்த ஜூன் தான். அதற்க்குப் பிறகு எல்லா காய்கறிகளும் தீர்ந்துப் போய், வெறும் இலை தழைகளே கிடைத்து வருகிறது. மிகவும் மோசமான மாதம் ஜூலை தான். அப்போது சில தழைகளை மட்டுமே அடுப்பில் போட்டார்கள்.

அந்த சிறு மீனோ சதையைவிட முள்ளாகவே இருந்தது. எலும்பைச் சுற்றிய சதையோ கரைந்துப் போய், தலை மற்றும் வால் பகுதியில் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது. ஒரு துண்டு சதையைக் கூட விட்டுவைக்காமல், சுகாவ் அந்த முட்களை கடித்து முழுவதும் உறிஞ்சிக் கொண்டும், மீந்தவற்றை மேஜையின் மேல் துப்பிக்கொண்டும் இருந்தான். முட்களில் ஒட்டிக்கொண்டிருந்த வால், கண் அனைத்தையும் மென்றுகொண்டிருந்தாலும், சூப்பில் மிதந்துகொண்டிருந்த கண்களை சாப்பிடவில்லை. என்ன ஒரு கண்கள். மீன் கண்கள். இதைப் பார்த்த அவன் குழுவினரோ தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

அன்று சுகாவ் மிகக் குறைவாகவே சாப்பிட்டான். தன் குடிசைக்குத் திரும்பாததால், அவன் சிற்றுண்டியை ரொட்டியில்லாமலேயே தின்று முடித்தான். ரொட்டியை பிறகு சாப்பிடுவான். அதுவே சரியாக இருக்கக்கூடும்.

சூப்பிற்குப் பிறகு கம்பங்கூழ் முடிக்க வேண்டும். அதுவும் ஆறிப் போய் இறுகியிருந்தது. சுகாவ் அதை சின்னச் சின்னதாய் உடைத்தான். சூடாக இருக்கும்போதும் சுவை இல்லாமல் இருக்கும் அது, வயிற்றை கொஞ்சம் கூட நிரப்பாது. மஞ்ச நிற புல் போல இருந்தது. சீனர்களிடமிருந்து கற்றுக் கொண்டது இது. சூடு செய்யும் போது கொஞ்சம் கனமாக இருந்தாலும், கூழ் அனைத்தும் வற்றிவிடும்.

ஸ்பூனை நக்கிவிட்டு தன் காலணிக்குள் நுழைத்தபடியே சுகாவ் தொப்பி அணிந்தபடி தன் மருத்துவ அறையை நோக்கி நடக்கலானான்.

வானம் இருண்டிருந்தது. முகாமின் விளக்குகள் நட்சத்திரங்களைத் துரத்தியிருந்தது. இரண்டு பெரிய தேடுவிளக்குகள் இன்னும் முகாம் முழுவதும் பெருக்கிக் கொண்டிருந்தது. சண்டைக்குப் பிறகு மீதமிருந்த பல வண்ண எரிதழல்களை இந்த விசேசமான முகாமில் மின் தடை ஏற்படும்போது யுத்தகளம் போல பற்ற வைப்பார்கள். பின்னர் அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டனர். பணத்தை மிச்சம் செய்வதற்க்காக இருக்கலாம்.

கும்மிருட்டென இருந்தாலும், இன்னும் சிறிது நேரத்தில் வேலை செய்ய கட்டளை அறிவிக்கப்படுமென அனுபவசாலிகளுக்குத் தெரியும்.குரமோயின் வேலையாள் ஆறாம் எண் குடிசைக்கு சிற்றுண்டியுடன் சென்றுவிட்டான். இந்த முகாமை விட்டு விலகாத காவலாளி் அவன். வயதான தாடிவைத்த ஓவியன். C.E.D என்ற கழகத்தில் கைதிகளின் உடையில் எண்களை வரைபவன். அங்கே மறுபடியும் டார்டார் வந்துவிட்டான். பொதுவாகவே கம்மியான ஆட்களே இருந்தனர். எல்லோரும் ஏதாவதொரு மூலைக்கு சென்றிருக்கவேண்டும் அல்லது குளிருக்கு கதகதப்பாக எங்காவது ஒதுங்கிருக்கவேண்டும்.

பொதிமூட்டை பின்னால் தந்திரமாக ஒழிந்துகொண்ட சுகாவ் டார்டாரிடம் தப்பித்துக்கொண்டான்.

என்னதான் மெதுவாக சொன்னாலும்,எங்கள் குழுவிலிருந்த அனைவருக்கும் கேட்டது. யாருக்கு அன்றிரவு ரொட்டி குறையப்போவது எனத் தெரியாமல் பயத்துடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.

மிக்க களைப்பாக இருந்ததால், சுகாவ் மரத்துகள்களான மெத்தையில் படுத்துக்கொண்டிருந்தான். ஒரு முடிவோடிருந்தான்; ஒன்று உண்மையான ஜுரம் வர வேண்டும் இல்லையேல் மூட்டுவலி நீங்க வேண்டும்.

இதற்கிடையே அய்லோஷா தன் இரவு பிரார்த்தனையை தொடங்கியிருந்தான். கழிப்பிடத்திலிருந்து வந்த புய்நோஸ்கி குறிப்பிட்டு யாரிடமும் சொல்லாமல் குசும்பு விசமத்தனத்தோடு – ‘மாலுமிகளே! பற்களை நன்றாக இருக்கிக்கொள்ளுங்கள். வெளியே கண்டிப்பாக முப்பதுக்கும் கம்மியாக இருக்கிறது.’

சுகாவ் ஜுரம் வந்ததென புகல முடிவுசெய்தான்.

அந்நேரத்தில் அவன் போர்வையும்,மேல் சட்டையும் அவனிடமிருந்து பிடிவாதத்துடன் பிடுங்கப்பட்டது. அவன் மேல் அங்கியை தன் முகத்திலிருந்து அகற்றி எழுந்து உட்கார்ந்தான்.அவன் மேல்படுக்கை உயரமிருந்த டார்டார் அவனைப் பார்த்தான்.

தன் முறையில்லாவிட்டாலும் வந்துவிட்டான்.

‘S 854’ சுகாவின் மேல் சட்டையிலிருந்த வெள்ளை கிழிசலில் இருந்ததைப் படித்தான். ‘உனக்கு மூன்று நாட்கள் வேலையுடன் கூடிய தண்டனை’.

அவன் குரலைக் கேட்ட அடுத்த நிமிடம் , அந்த குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த 200 பேர்களும் நிஜ உலகத்திற்கு வந்து வேகவேகமாக உடையணிந்தனர்.

‘எதற்காக பெரிய தலைவரே (1)’ என இளித்துக்கொண்டே சுகாவ் கேட்டான்.

வேலையோடு – அது கூடத் பரவாயில்லை. சூடான சாப்பாடு கொடுத்தவுடன், யோசிக்க நேரமிருக்காது. வேலை முடிந்தாலும் வெளியே செல்லமுடியாததே உண்மையான லாக்-அப்.

‘மணியடித்த பின்னும் எழுந்துகொள்ளாததால். என்னுடன் முகாம் தலைவர் அலுவலகத்திற்கு வா’ என சோம்பேரித்தனத்துடன் டார்டார் கூறினான்.

முடியில்லாமல் சுருங்கிப்போன அவன் முகம் சாந்தமாக அசைக்கமுடியாததுபோல இருந்தது. வேறெவனாவது கிடைப்பானா என திரும்பிப் பார்த்தான். மற்றவர்களோ இருட்டான மூலைகளில் தங்கள் கால்களை கால்சட்டையுள் திணித்துக்கொண்டோ, மேல் சட்டையை உடுத்தியபடி கதவை நோக்கி ஓடிக்கொண்டோ இருந்தனர்.

மெதுவாக டார்டார் அந்த குடிசைக்கு வெளியே சென்றான்


http://beyondwords.typepad.com

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – நான்காவது அத்தியாயம்

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்.



மரத்துப் போன கைகளால் சூடான தண்ணீர் வாளியை தன் காவலாளியின் அறைக்குள் எடுத்துச் சென்றான்.தன் கைகளை வாளிக்குள்விட்டுப் பார்த்தான் – இளம் சூடு அவன் கைகளில் பரவியது.

டார்டார் அங்கு இல்லை. நான்கு காவலாளிகள் ஓர் குழுவாக நின்று கொண்டிருந்தனர். அடுத்த வருடம் ஜனவரி மாதம் கிடைக்கப்போகும் கம்பு, தானியங்கள் மூட்டைகளைக் குறித்து தங்கள் விளையாட்டுகளை ஒதுக்கி வைத்து மிக தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

தங்களின் சதுரங்கம் காய்கள் கலைவதைக் கண்டு – ‘ஏய் மூளைகெட்டவனே, கதவை மூடு. சதுரங்கம் இருக்கிறது’ – என ஒரு காவலாளி கத்தினான்.

அதிகாலையில் காலணிகளை நனைத்துக்கொள்வதைவிட முட்டாள்தனமான வேலை முடியாது.தன் குடிசைக்கு அவசரமாக ஓடியிருந்தாலும் சுகாவால் மற்றொரு காலணிகளை தேடி கண்டுபிடித்திருக்க முடியாது. தன் எட்டு வருட சிறை வாசத்தில் பலவிதமான காலணிகளை பிரித்துக்கொடுக்கும் முறையை கண்டுருக்கிறான்; லெதர் காலணிகளும், தடிப்பான காலணிகளும் இல்லாமல் பல குளிர் காலங்களை கடத்தியிருக்கிறான்.டிராக்டர் சக்கரத்திலிருந்து காலணிகளை தயாரித்துள்ளான் – பெயர் ‘செட்டீஸ்’.இப்போது காலணிகள் பிரச்சனை பரவாயில்லை.கடந்த அக்டோபரில் சுகாவிற்கு ஒரு லெதர் காலணி கிடைத்தது( நன்றி பாவ்லோ; சுகாவ் அவனுடன் வேலை செய்துள்ளான்). அந்த தடிமனான காலணி இரண்டு அங்குலத்தில் லெதர் மேற்சட்டைகள் அணிவது போல் இருந்தது. தனக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசாக , கிட்டத்தட்ட வாரம் முழுவதும், அவன் புது காலணிகளை உடுத்து உதைத்துமகிழ்ந்தான். அந்த செப்டம்பர் வந்த புது வாலென்கி காலணி வாழ்வின் வசந்தத்தையே மீட்டது இல்லையா?

ஆனால் புத்தக அறையிலுள்ள ஏதோஒரு பிசாசு தங்களிடமுள்ள காலணிகளை திருப்பி கொடுத்தாலெழிய வாலென்கி கொடுக்கக் கூடாதென, கமாண்டரின் காதுகளில் ஓதிவிட்டான்.ஒரே சமயத்தில் இரு காலணிகளை வைத்திருப்பது கைதி விதிகளுக்கு புறம்பானதாகும்.சுகாவ் முடிவெடுக்கும் தருணம் வந்தது.தன்னுடைய மட்டமான லெதர் காலணியை குளிர் காலம் முழுவதும் அணிந்து கொள்ளலாம் அல்லது அதைத் திருப்பி கொடுத்துவிட்டு வாலென்கி அணிந்து கொள்ளலாம். தன் காலணியை – அதற்கு எண்ணை தடவி லகுவாக்கி – அழகாகப் பராமரித்து வந்திருந்தான் . தன் காலணியை விடுவது மட்டுமே அவன் எட்டு ஆண்டுகளில் எடுத்த கடுமையான முடிவாகும்! அதை ஒரு பொதுவான கூட்டத்தில் எரிந்துவிட்டனர். இளவேனிற் காலத்தில் ஒரு நல்ல செருப்பு கிடைப்பது ரொம்ப கடினம்.

தான் என்ன செய்ய வேண்டுமென சுகாவிற்கு நன்றாகத் தெரிந்தது.திறமையாக வாலென்கியிலிருந்து தன் காலை விடுவித்துக் கொண்டு, அதை ஒரு மூலையில் வைத்தான்; தன் காலில் கால்சட்டையின் முடிப்பை அணிந்துகொண்டு, தண்ணீரை காவலாளியின் வாலென்கி அடியில் கொட்டினான்.

‘ஏய் இவனே, மெதுவாய் செய்’ – தன் கால்களை நாற்காலி மீது வைத்தபடி ஒரு காவலாளி கத்தினான்.

‘அரிசியா?’ என மேற்கொண்டு கூறிச் சென்ற மற்றொருவன் – ‘அரிசி வேறு வகை. அதை கம்புடன் ஒப்பீடு செய்ய முடியாது’.

‘அறிவுகெட்டவனே, எவ்வளவு தண்ணீர் உபயோகிக்கப் போகிறாய்? உலகத்தில் எந்த மடையனாவது இப்படி கழுவுவானா?’

‘என்னால் எப்போதுமே வேறுமாதிரி கழுவ முடியாதய்யா, தலைவரே. மிக கட்டியான அழுக்கு இருக்கிறது.’

‘பன்னி, பெண்கள் தரை கழுவி எப்போதாவது பார்த்திருக்கிறாயா?’

சுகாவ் எழுந்து கொண்டான்.

பக்கத்து குழிவிலிருந்த துணை குழுத் தலைவர் மெதுவாக உறுமத்தொடங்கினார்:

‘வாசிலி யோடொர்விச்,அந்த கிடங்கில் இருக்கும் எலிப்பயல்கள் நம்மை மறுபடியும் ஏமாற்றிவிட்டார்கள். 900 கிராமிற்கு நான்கு ரொட்டிகளுக்கு பதிலாக மூன்றுதான் தந்திருக்கிறார்கள். யாருக்கு குறைப்பது?’

என்னதான் மெதுவாக சொன்னாலும்,எங்கள் குழுவிலிருந்த அனைவருக்கும் கேட்டது. யாருக்கு அன்றிரவு ரொட்டி குறையப்போவது எனத் தெரியாமல் பயத்துடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.

மிக்க களைப்பாக இருந்ததால், சுகாவ் மரத்துகள்களான மெத்தையில் படுத்துக்கொண்டிருந்தான். ஒரு முடிவோடிருந்தான்; ஒன்று உண்மையான ஜுரம் வர வேண்டும் இல்லையேல் மூட்டுவலி நீங்க வேண்டும்.

இதற்கிடையே அய்லோஷா தன் இரவு பிரார்த்தனையை தொடங்கியிருந்தான். கழிப்பிடத்திலிருந்து வந்த புய்நோஸ்கி குறிப்பிட்டு யாரிடமும் சொல்லாமல் குசும்பு விசமத்தனத்தோடு – ‘மாலுமிகளே! பற்களை நன்றாக இருக்கிக்கொள்ளுங்கள். வெளியே கண்டிப்பாக முப்பதுக்கும் கம்மியாக இருக்கிறது.’

சுகாவ் ஜுரம் வந்ததென புகல முடிவுசெய்தான்.

அந்நேரத்தில் அவன் போர்வையும்,மேல் சட்டையும் அவனிடமிருந்து பிடிவாதத்துடன் பிடுங்கப்பட்டது. அவன் மேல் அங்கியை தன் முகத்திலிருந்து அகற்றி எழுந்து உட்கார்ந்தான்.அவன் மேல்படுக்கை உயரமிருந்த டார்டார் அவனைப் பார்த்தான்.

தன் முறையில்லாவிட்டாலும் வந்துவிட்டான்.

‘S 854’ சுகாவின் மேல் சட்டையிலிருந்த வெள்ளை கிழிசலில் இருந்ததைப் படித்தான். ‘உனக்கு மூன்று நாட்கள் வேலையுடன் கூடிய தண்டனை’.

அவன் குரலைக் கேட்ட அடுத்த நிமிடம் , அந்த குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த 200 பேர்களும் நிஜ உலகத்திற்கு வந்து வேகவேகமாக உடையணிந்தனர்.

‘எதற்காக பெரிய தலைவரே (1)’ என இளித்துக்கொண்டே சுகாவ் கேட்டான்.

வேலையோடு – அது கூடத் பரவாயில்லை. சூடான சாப்பாடு கொடுத்தவுடன், யோசிக்க நேரமிருக்காது. வேலை முடிந்தாலும் வெளியே செல்லமுடியாததே உண்மையான லாக்-அப்.

‘மணியடித்த பின்னும் எழுந்துகொள்ளாததால். என்னுடன் முகாம் தலைவர் அலுவலகத்திற்கு வா’ என சோம்பேரித்தனத்துடன் டார்டார் கூறினான்.

முடியில்லாமல் சுருங்கிப்போன அவன் முகம் சாந்தமாக அசைக்கமுடியாததுபோல இருந்தது. வேறெவனாவது கிடைப்பானா என திரும்பிப் பார்த்தான். மற்றவர்களோ இருட்டான மூலைகளில் தங்கள் கால்களை கால்சட்டையுள் திணித்துக்கொண்டோ, மேல் சட்டையை உடுத்தியபடி கதவை நோக்கி ஓடிக்கொண்டோ இருந்தனர்.

மெதுவாக டார்டார் அந்த குடிசைக்கு வெளியே சென்றான்.


girigopalan@gmail.com

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மூன்றாவது அத்தியாயம்

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்



சுகாவ் தான் செய்த தவறுக்கு தகுந்ததுபோல தண்டனை கிடைத்திருந்தால் இவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டான்.எப்போதும் முதலில் முழிப்பவன் அவனே. அதனாலேயே இந்த தண்டனை தனக்கு தகுந்ததல்ல என்பதில் மிகுந்த வருத்தமடைந்தான்.டாடரிடம் கெஞ்ச முடியாதெனத் தெரியும்.வெளிப்படையாக எதிர்க்க தைரியமில்லாமல் – தன் கால்சட்டையை உதறி அணிந்து (அழுக்கான ஒரு துணி கால்சட்டையிலிருந்தது; அந்தத் துணியில்தான் அவன் எண் பதிந்திருந்தது), தன் மேல் சட்டைக்குள் நுழைந்து ( இதே சட்டையின் இரு பக்கங்களிலும் அதே எண் இருந்தது), தரையிலிருந்து காலணியைப் பொறுக்கிக்கொண்டு, தன் தொப்பியை அணிந்துகொண்டான் (இதன் மேலுள்ள துணியிலும் அதே எண்).தன் முகாம் குடிசையிலிருந்து டார்டரைத் தொடர்ந்து வெளியேறினான்.

104வது குடிசையே அவர்களைப் பார்த்தது. ஆனாலும் யாரும் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை: பேசி என்ன ஆகப்போகிறது; அவர்களால் சொல்லக்கூடியதுதான் என்ன? குழுத் தலைவன் ஏதாவது சொல்லியிருக்கக் கூடும். ஆனால் அவனும் அங்கில்லை.சுகாவும் யாரிடமும் ஒன்றும் சொல்லவில்லை.அவன் டார்டரை எரிச்சல் செய்ய விரும்பவில்லை. சிற்றுண்டியை கண்டிப்பாக அவன் நண்பர்கள் தனக்காக வைத்திருப்பார்கள் என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை.

அவர்கள் இருவரும் குடிசையை விட்டுச் சென்றார்கள்.திடீர் குளிர் சுகாவிற்கு மூச்சுமுட்டியது.

கண்காணிப்பு கோபுரத்திலிருந்து இரண்டு சக்திவாய்ந்த விளக்க ஒளி அந்த முகாம் முழுவதையும் அளந்தது.எல்லை விளக்கு முதற்கொண்டு உள்விளக்குகள் கூட அந்த முகாமில் எறிந்துகொண்டிருந்தது.நட்சத்திரங்களுக்கே சவால் விடக்கூடிய அளவிற்கு அங்கு விளக்குகள் எறிந்துகொண்டிருந்தது.

காலுக்கடியில் பனி சரசரக்க கைதிகள் தங்கள் வேலையில் மும்முரமாக விரைந்துக் கொண்டிருந்தார்கள்.சிலர் தபால் அறைக்கும், வேறுசிலர் சிற்றுண்டியை கையில் எடுத்துக்கொண்டு சூடுசெய்ய விரைந்துகொண்டிருந்தனர்.எல்லோரும் தங்கள் தலையை மேல்சட்டைக்குள் குனிந்து புதைத்திருந்தனர். அப்போதைய குளிரை விட, நாள் முழுதும் அந்த குளிரில் இருக்கவேண்டியதை நினைத்ததால் ,அக்குளிர் எலும்பை உறைய வைப்பதுபோல் இருந்தது.தன் பழைய ராணுவ உடையணிந்த டார்டர் குளிரை பொருட்படுத்தாதது போல,மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.

அந்த முகாமிலிருந்த ஒரே செங்கள் கட்டிடமான உயரமான லாக் அப்பை சுற்றி நடந்தனர்.அம்முகாமின் சமையலறையை சுற்றியிருந்த கம்பிகளைத் தாண்டி சென்றுகொண்டிருந்தனர்.கண்காணிப்பு விடுதியைத் தாண்டி,அங்கு கம்பத்தின் மேல் தொங்கிக் கொண்டிருந்த வெப்பநிலைமானியைச் சுற்றி (இந்த வெப்பநிலைமானி குளிர் குறிப்பிட்ட அளவிற்கும் கீழே செல்வதை கண்காணிக்க) சென்றார்கள்.

சுகாவ் நம்பிக்கையுடன் அந்த பால் வெள்ளை குழாயைப் பார்த்தான். -41 வெப்ப அளவு இருந்தால் அவர்கள் வேலைக்கு போக வேண்டியதில்லை. ஆனால் இன்றோ -41 என்ற அளவிற்கு கொஞ்சம் கூட அருகில் இல்லை.

பணியாளர் அறைக்குள் சென்றார்கள். டார்டார் நேராக காவலாளி அறைக்கு சுகாவை கூட்டிச் சென்றான். அப்போதுதான் சுகாவ் ஒன்றை உணர்ந்தான். அவனை லாக் அப் அறைக்கு கூட்டிச் செல்லவில்லை.அந்த காவலாளியில் அறையின் தரையை சுத்தம் செய்யவே அவனை கூப்பிட்டிருந்தார்கள்.அந்த தரையை அழுத்தித் தேய்க்கச் சொல்லிவிட்டு டார்டார் அவனை அங்கே விட்டுவிடப்போகிறான்.

அந்தத் தரையைத் தேய்ப்பது ஒரு முக்கியமான கைதியின் கடமையாகும். அந்த கைதி முகாமில் வெளிவேலைக்கு செல்லாமல், அந்த பணியாளர் அறையில் வேலை செய்பவன். பணியாளர் அறையை எப்போதோ தன் வீட்டைப் போல பாவிக்கத்தொடங்கிவிட்டிருந்தான்.ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு தலைவரான தளபதியின் அலவலகத்திற்குள் அவனுக்கு அனுமதி இருந்தது. காவலாளிக்குத் தெரியாததுகூட வேலை செய்யும்போது அவனுக்கு கேட்கும். சில காலத்திற்குள் அவனுக்கு தலை கனம் ஏறிப்போனது. கீழ் மட்டத்தில் இருக்கும் மற்ற காவல் அறைகளின் தரையை சுத்தம் செய்வோரை தன்னைவிடத் தாழ்ந்தவராக கருதத் தொடங்கினான்.

வேலைக்கு அவனை பல சமயங்கள் கூப்பிட்டு அலுத்துப்போன காவலாளிகளுக்கு நடப்பவை புரிந்தது. அதற்குப் பிறகு மற்ற கைதிகளை தரை தேய்க்க கூப்பிட ஆரம்பித்தனர்.

காவலாளி அறையிலிருந்த அடுப்பு அனலை கக்கிக் கொண்டிருந்தது.கிழிந்த உடை அணிந்த இரு காவலாளிகள் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தனர். தன் மேல் சட்டை, காலணியை அணிந்து கொண்டிருந்த மூன்றாவது காவலாளி குறுகலான கட்டையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்.அந்த அறையின் மூலையில் காலியான வாளி அதனுள் கந்தல் துணியும் கிடந்தது.

சுகாவிற்கு மிக சந்தோசமாக இருந்தது. தன்னை விடுவித்ததற்காக டார்டரிடம் நன்றி சொன்னபோது – ‘இன்றிலிருந்து தாமதமாக எழ மாட்டேன்’ என்றும் சொன்னான்.

இந்த அறையின் விதி மிக சுலபம்; முடித்தவுடன் சென்றுவிடலாம். வேலை கொடுத்தவுடன் சுகாவிற்கு தன் மூட்டு வலி போனதுபோல இருந்தது.தன் கையுறையைக் கூட தன் தலையணைக்கு அடியிலிருந்து எடுக்க மறந்ததால், வாளியைத் வெறும்கைகளில் தூக்கிக்கொண்டு கிணறை நோக்கி ஓடினான்.

பல குழுத்தலைவர்கள் PPD அறைக்குச் செல்லுமுன் வெப்பநிலைமானி அருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்களில் சிறுவனான , சோவியத் யூனியனின் பழைய நட்சத்திரம் பிரகாசத்துடன் அந்தக் கருவியைத் துடைத்துக்கொண்டிருந்தான்.

சிலர் கீழிருந்து அலோசனையைக் கத்திக்கொண்டிருந்தனர்.

‘அதன் மேல் மூச்சைவிடாதே! வெப்பத்தை அதிகப்படுத்திவிடும்’

‘இன்னும் அதிகமாக்குமா? ஒருக்காலும் நடக்காது.என் மூச்சுக் காற்றினால் எதுவும் செய்ய இயலாது.’

104ஆம் குழுவைச் சேர்ந்த டையூரின் – சுகாவின் குழுத் தலைவன் அங்கில்லை.வாளியை கீழே வைத்து, கைகளை சட்டைக்குள் விட்டுக்கொண்டு சுகாவ் ஆர்வத்தோடு வேடிக்கை பார்க்கத்தொடங்கினான்.

அந்தக் கம்பத்தின் மேலே இருந்தவன் தன் கரகரப்பான குரலில்:

‘இருபத்து ஏழரை. அதைவிட ஒன்றுகூட அதிகமில்லை.’

மேலும் ஒருமுறை சரியாகப் பார்த்துவிட்டு கீழிறங்கினான்.

‘ஹா, இது ஒரு ஏமாற்றுவேலை.எப்போதும் இது பொய்தான் சொல்லும்.’ . கூட்டத்தில் யாரோ சத்தமாக: ‘உண்மையான வெப்பத்தைச் சொல்லும் கருவியை அங்கே யாராவது தொங்கவிடுவார்கள் என நினைத்தீர்களா?’

குழுத்தலைவர்கள் பிரிந்து சென்றனர். சுகாவ் கிணறை நோக்கி ஓட ஆரம்பித்தான். உறை பனி அவன் காதுகளை நறுக்கத் தொடங்கியது. அவன் எவ்வளவு கீழிறக்கியும் முடியவில்லை.

கிணறின் மேல் பனி படர்ந்திருந்ததால் வாளியை உள்ளே விட மிகவும் கடினப்பட்டான்.கயிறோ கம்பிபோல விரைப்பாக நின்றுகொண்டிருந்தது.


girigopalan@gmail.com

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இரண்டாம் அத்தியாயம்

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்



———————————————————————————————————————————————
.

தினப்படி வேலைகளை கொடுக்கும் அதிகாரிகளிடம் அந்த நாளின் ரிப்போர்ட்டை கொடுக்க மட்டும் என நினைக்கவேண்டாம். அன்று காலை தன் விதி தொங்களில் விடப்பட்டது என சுகாவிற்கு நினைவிற்கு வந்தது ; 104வது குடிசை முகாமை கடைகளிருக்கும் கட்டிடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றுகிறார்கள் – பெயர்: ‘பொது உடமைவாதிகளின் வாழ்வுமுறை’ .அந்த புது இடம் பனிஉறைந்த வழியில் தனியாக இருக்கிறது.அந்த இடத்தில் எதுவும் செய்வதற்குமுன் பள்ளம் தோண்டி, கம்பு நட்டு, இரும்பு கம்பிகளால் சுற்றி வளைக்கவேண்டும். ஓடாமலிருக்க, தங்களை உள்ளேவைத்து வளைக்கவேண்டும். அதற்குப்பிறகே அவர்கள் கட்டிடத்தை கட்ட ஆரம்பிக்கமுடியும்.

ஒரு முழு மாதத்திற்கு கதகதப்பான மூலை இருக்கபோவதில்லை.நாய்க்கூண்டு கூட இருக்காது. நெருப்பை பற்றிய கேள்விக்கே இடமில்லை.தீயிலிட மரங்களுக்கு எங்கே போவதாம்? வேலை செய்துதான் சூடேற்ற வேண்டும்; அதுதான் ஒரே கதி !

குழுத்தலைவன் முகத்தில் இருந்த கவலை எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கவில்லை. அவருக்கு இருக்கும் பல பொறுப்புகளில் புதுவாக சிலவும் சேர்ந்துகொண்டு விட்டதே! 104இல் வேலை செய்வோரைத் தவிர இந்த வேலைக்காக புது குழுவோடு இணையவேண்டும், உருப்படாத சில தடியர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். யாருமில்லாமல் போனாலோ அவரின் அதிகாரிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சில பல தடியர்களை கூட்டிக்கொண்டு போயாகவேண்டும்; வேறு வழியில்லை.

முயற்சி திருவினையாக்கும்; அவனுக்கு உடம்பு சரியில்லையென வியாதி-அறைக்கு சென்று விண்ணப்பித்து, சில நாட்கள் விடுப்பு வாங்கக் கூடாது? உண்மையிலேயே, ஒவ்வொரு பாகமும் தன் மூட்டைவிட்டு கழன்றுவிழுமோ எனத் தோன்றியது.

அதற்காகத்தான் சுகாவ் அன்று முகாமின் காவலாளியாரென யோசிக்கத் தொடங்கினான். ‘ஒன்றரை’ இவானின் முறை என ஞாபகம் வந்தது.ஒல்லியாக, கருவிழிகள் உடைய காவலாளி. முதல் முறை சந்திக்கும் எல்லோரும் அவனை மிரட்சியுடனே பார்ப்பார்கள்; நன்றாக பழகிய பிறகே காவலாளிகளில் மிக நல்ல குணமுடையவன் எனத் தெரியும்.

உங்களை லாக் அப்பில் போட மாட்டான்; அதிகாரிகளிடம் இழுத்துச் செல்லவும் மாட்டான்.அதனால் சுகாவ் தன் குடிசையில் இன்னும் சில நேரம் படுத்துக்கொள்ளலாமென முடிவுசெய்தான்.சாப்பாட்டு அறையில் 9வது குடிசை இருக்கும் வரையிலாவது தன் படுக்கையிலே இருக்கவேண்டும்.

நான்கு தளத்தைக் கொண்ட அவன் படுக்கைச் சட்டம் ஆடி, அசையத் தொடங்கியது. இரு படுக்கையின் உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் எழுந்துகொண்டனர்.சுகாவின் மேல்தள படுக்கையிலிருந்து பாதிரியார் அய்லோஷா மற்றும் புய்நோஸ்கி – பழைய கப்பல் படைத் தலைவன் – கீழிறங்கினர்.

இந்த இரு வேலையாட்களும் மண் பீப்பாய்களை தூக்கிக்கொண்டு சூடான தண்ணீருக்காக சண்டையிட தொடங்கினார்கள். கிழவிகளைப்போல வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

‘ஏய் பட்டாசு மாதிரி வெடிக்காதீங்கப்பா’ – என 20ஆம் குழுவில் இருந்த மின்சார நிபுணர் கூறி ‘சும்மாயிருங்க’ என ஒரு காலணியை அவர்கள் மேல் வீசினார்.

காலணி ‘தட்’ என கம்பத்தின் மேல் விழுந்தது. வாக்குவாத சத்தமும் நின்றது.

பக்கத்து குழிவிலிருந்த துணை குழுத் தலைவர் மெதுவாக உறுமத்தொடங்கினார்:

‘வாசிலி யோடொர்விச்,அந்த கிடங்கில் இருக்கும் எலிப்பயல்கள் நம்மை மறுபடியும் ஏமாற்றிவிட்டார்கள். 900 கிராமிற்கு நான்கு ரொட்டிகளுக்கு பதிலாக மூன்றுதான் தந்திருக்கிறார்கள். யாருக்கு குறைப்பது?’

என்னதான் மெதுவாக சொன்னாலும்,எங்கள் குழுவிலிருந்த அனைவருக்கும் கேட்டது. யாருக்கு அன்றிரவு ரொட்டி குறையப்போவது எனத் தெரியாமல் பயத்துடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.

மிக்க களைப்பாக இருந்ததால், சுகாவ் மரத்துகள்களான மெத்தையில் படுத்துக்கொண்டிருந்தான். ஒரு முடிவோடிருந்தான்; ஒன்று உண்மையான ஜுரம் வர வேண்டும் இல்லையேல் மூட்டுவலி நீங்க வேண்டும்.

இதற்கிடையே அய்லோஷா தன் இரவு பிரார்த்தனையை தொடங்கியிருந்தான். கழிப்பிடத்திலிருந்து வந்த புய்நோஸ்கி குறிப்பிட்டு யாரிடமும் சொல்லாமல் குசும்பு விசமத்தனத்தோடு – ‘மாலுமிகளே! பற்களை நன்றாக இருக்கிக்கொள்ளுங்கள். வெளியே கண்டிப்பாக முப்பதுக்கும் கம்மியாக இருக்கிறது.’

சுகாவ் ஜுரம் வந்ததென புகல முடிவுசெய்தான்.

அந்நேரத்தில் அவன் போர்வையும்,மேல் சட்டையும் அவனிடமிருந்து பிடிவாதத்துடன் பிடுங்கப்பட்டது. அவன் மேல் அங்கியை தன் முகத்திலிருந்து அகற்றி எழுந்து உட்கார்ந்தான்.அவன் மேல்படுக்கை உயரமிருந்த டார்டார் அவனைப் பார்த்தான்.

தன் முறையில்லாவிட்டாலும் வந்துவிட்டான்.

‘S 854’ சுகாவின் மேல் சட்டையிலிருந்த வெள்ளை கிழிசலில் இருந்ததைப் படித்தான். ‘உனக்கு மூன்று நாட்கள் வேலையுடன் கூடிய தண்டனை’.

அவன் குரலைக் கேட்ட அடுத்த நிமிடம் , அந்த குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த 200 பேர்களும் நிஜ உலகத்திற்கு வந்து வேகவேகமாக உடையணிந்தனர்.

‘எதற்காக பெரிய தலைவரே (1)’ என இளித்துக்கொண்டே சுகாவ் கேட்டான்.

வேலையோடு – அது கூடத் பரவாயில்லை. சூடான சாப்பாடு கொடுத்தவுடன், யோசிக்க நேரமிருக்காது. வேலை முடிந்தாலும் வெளியே செல்லமுடியாததே உண்மையான லாக்-அப்.

‘மணியடித்த பின்னும் எழுந்துகொள்ளாததால். என்னுடன் முகாம் தலைவர் அலுவலகத்திற்கு வா’ என சோம்பேரித்தனத்துடன் டார்டார் கூறினான்.

முடியில்லாமல் சுருங்கிப்போன அவன் முகம் சாந்தமாக அசைக்கமுடியாததுபோல இருந்தது. வேறெவனாவது கிடைப்பானா என திரும்பிப் பார்த்தான். மற்றவர்களோ இருட்டான மூலைகளில் தங்கள் கால்களை கால்சட்டையுள் திணித்துக்கொண்டோ, மேல் சட்டையை உடுத்தியபடி கதவை நோக்கி ஓடிக்கொண்டோ இருந்தனர்.

மெதுவாக டார்டார் அந்த குடிசைக்கு வெளியே சென்றான்.

1 – காம்ரேட் என்ற வார்த்தையை கைதிகள் உபயோகப்படுத்தமுடியாது.

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – முதல் அத்தியாயம்

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்



எப்போதும் போல காலை ஐந்து மணிக்கு பணியாளர் விடுதியருகே தொங்கிக்கொண்டிருந்த நீளமான இரும்பு மணியில் சுத்தியால் தட்டி சத்தம் போடப்பட்டது.இரண்டு விரல் அடர்த்தியுள்ள காலைப்பனி நேரத்தில்,அந்த சத்தம் ஆரம்பிப்பதற்குள்ளாகவே மெல்லியதாக விட்டுவிட்டு முடிந்துக் கொண்டிருந்தது.வெளியே குளிராகயிருந்ததால்,அந்த முகாமின் காவலாளிக்கு அந்த மணியை தொடந்து அடிப்பதில் விருப்பமில்லை.

இரும்பு இடியோசை நிறுத்தப்பட்டாலும், காலைக் கடனை முடிக்க வாளியை தேடி வந்த இவான் டெனிசோவிச் சுகோவ்விற்கு வெளியே தென்பட்ட காட்சி நடு இரவைப்போலவே இருந்தது. முகாமிற்கு வெளியேயிருந்து இரண்டு, உள்ளிருந்து ஒன்று- ஆக மூன்று மஞ்சள் விளக்குகளால் ஜன்னலில் வெளிச்சம் பட்டாலும் மற்றபடி எல்லாமே கும்மிருட்டு.

மேலும் முகாம் குடிசைகளை திறக்க எவரும் வரவில்லை;முகாமின் காப்பாளர்கள் எவரும் மண்ணில் கிடந்த பீப்பாய்களை கம்புகளால் தூக்கிக் வெளியே சென்றுகொண்டிருக்கும் சத்தமும் கேட்கவில்லை.

சுகோவ் எப்போதுமே இந்த மணியோசை மீறி தூங்கியது கிடையாது.மணி அடித்தவுடன் எழுந்து,அடுத்த தொன்னூறு நிமிடங்களும் அவனுக்கே சொந்தமானது.அதிகாரிகளுக்கு அதில் பங்கு கிடையாது.அவர்களனைவரும் வேலைக்காக கூடும் வரை அவன் பல வேலைகள் செய்வான்.பழைய சட்டைக்கையிற்கு தடிமனான உறை தைத்துக்கொண்டிருப்பான்.அல்லது கிழிந்துபோன முட்டியளவு காலணியை அவன் குழுவிற்காக தன் கட்டில்வரை இழுத்துவருவான்.இதனால் பல காலணிகளுக்கு நடுவே தன் காலணியைத் தேட வெறுங்காலோடு நடக்க வேண்டாம். குளிர் அப்படி.

இல்லையென்றால் மற்ற குடிசைகளுக்குச் சென்று தன் சேவைகளை செய்வான் – தரையைப் பெருக்குவது, ஏதாவது கொண்டுவருவது,சாப்பாட்டு அறை மேஜையிலிருந்து கிண்ணத்தை எடுத்து கழுவும் இடத்திற்கு கொண்டுசெல்வது. இந்த அறைகளில் கண்டிப்பாக ஏதாவது சாப்பாடு கிடைக்கும்; இந்த விளையாட்டுகளுக்காக பலபேர் இல்லை, அதற்கு மேலும் ஆட்கள் காத்துக் கிடப்பார்கள். கிண்ணத்தில் ஏதாவது மீதியிருந்தால் அதை நக்காமல் இருக்க வயிறு விடாது. ஆனாலும் சுகோவிற்கு தன் முதல் குழுத் தலைவன், 1943க்குளாகவே பனிரெண்டு வருடம் சிறையில் கழித்த பழுத்த சிறைவாசி குசியோமின் – புதுவரவுகள் நெருப்பின் முன் சூடு காய்ந்துகொடிருந்தபோது- கூறிய வார்த்தைகளை என்றுமே மறக்க முடியாது.

‘இளைஞர்களே நாம் டைகாவின் சட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இங்கும் மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.முகாமிலேயே வாழ்க்கையை முடித்துகொள்பவர்கள் யார் தெரியுமா? மற்றவர்களின் மீதத்தை நக்குபவர்கள், மருத்துவரிடம் தஞ்சம் கொள்பவர்கள் மற்றும் அடுத்தவன் தூங்கும் பாயில் மலஜலம் கழிப்பவன்’.

அவன் சொன்னது தவறு.அப்படி செயல்படுபவர்களே முகாமில் நல்லபடியாகக் கழிக்க முடியும்.

மற்றவர்களின் ரத்தத்தில் தங்கள் உயிரை காப்பாற்றும் கனவான்கள்.

மணியோசை கேட்டவுடன் சுகோவ் எப்பாதும் எழுந்துவிடுவான்.ஆனால் இன்று எழவில்லை.உடம்பு முழுவதும் வலியுடன் அதற்கு முதல் நாள் தான் ஜுரத்தை உணர்ந்தான்.இரவு முழுவதும் கொஞ்சமும் கதகதப்பு இல்லாமல் இருந்தது.அந்த இரவு முழுவதும் சில நேரம் உடம்பு சரியாவது போலவும்,பல நேரங்களில் ஜுரம் அடிப்பது போலவும் உணர்ந்தான்.விடியால் வரக்கூடாது என ஏங்கித் தவித்தே தூங்கிப்போனான்.

ஆனாலும் வழக்கம்போல விடிந்துவிட்டது.

ஜன்னலில் இருந்த பனிக் கட்டிகளை பார்த்ததும்,தனக்கு இரவு முழுவதும் குளிர்ந்ததற்கான காரணம் புரிந்தது.அந்தக் குடிசை சுவர் முழுவதும் வெள்ளை நிறவலைப் போல உறைபனி படர்ந்திருந்தது!

அவன் படுத்துக் கொண்டேயிருந்தான். அவன் தலையை போர்வை மற்றும் உடுப்பால் போர்த்திக்கொண்டு,இரண்டு கால்களையும் ஒரே காலுறைக்குள் திணித்து கட்டிலின் மேல்தளத்தில் படுத்துக் கொண்டிருந்தான். அந்த முகாம் குடிசைக்குள் நடக்கும் எதையும் பார்க்க முடியாவிட்டாலும்,அவன் காதுகள் தன் குழு இருக்கும் மூலைப் பக்கம் திரும்பியிருந்தது.வெளியே இருக்கும் பாதைவழியே காப்பாளர்கள் கனமான பீப்பாய்களில் மண்ணை அள்ளிப் கொண்டுபோகும் சத்தம் கேட்கிறது.மிக இலகுவாப காரியம், புதியவர் சுலபமாக செய்யக் கூடியது என நினைக்கவேண்டாம்;அதை சிந்தாமல் தூக்கிச் சென்று பாருங்கள் தெரியும். துணிகளை காயப்போடும் அறையிலிருந்து காலணிகளை காய வைக்கும் ஓசை கேட்டது. இப்போது அவன் குழுவும் அதையே செய்தனர் (காலணிகளை காயவைக்க அவன் குழுவின் முறையும் கூட).குழுத் தலைவன் டயூரின் மற்றும் துணைத் தலைவர் பாவ்லோ தங்கள் நீண்ட காலணிகளை உடுத்திக் கொண்டனர்.

இருவரும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

இப்போது பாவ்லோ ரொட்டி கடைக்கும் , டியூரின் பணியாளர் விடுதியிலிருக்கும் PPD(Production Planning Department)க்கும் சென்றுவிடுவார்கள்.

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்