- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2
- தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2
- “காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”
- முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
- இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
- கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்
- உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>
- என். விநாயக முருகன் கவிதைகள்
- வேத வனம் –விருட்சம் 47
- ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்
- ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..
- முதல் முதலாய்த் தோற்ற நாள்
- மழை
- அதிர்ஷ்டம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது
- நினைவுகளின் தடத்தில் – (34)
- Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- நெஞ்சு பொறுக்குதில்லையே…
- மனப் பொழிவு
- குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..
- நட்சத்திரவாசி
- ஊழிக் காலம்
- போதிமரங்கள்
- கார்காலம்
- www.மனிதம்.com
- குப்பைப் பூக்கள்..!
சத்தியநாராயணன் ராமசாமி
சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும், மற்ற எந்த அறிதல் செயல் போல.
சம்ஸ்க்ருதம் தவறு, அழியவேண்டும் ஏளனப் படுத்தப்பட வேண்டும் என்ற முன் முடிவோடு பேசினால் பதில் பேச ஒன்றும் இல்லை. எதோ அந்த அளவிற்கு சம்ச்க்ருததால் அந்த சாராருக்கு பயன் என விட்டுவிட வேண்டியது தான்.
ஆனால் ஏராளமான கலை, அறவியல்,அறிவியல்,இலக்கிய,ஆன்மீக நூல்கள் இருக்கும் ஒரு மொழி என்ற ளவில் சம்ச்க்ருதத்தின் பயன்பாடு இருந்துகொண்டே தான் இருக்கிறது.
சமஸ்க்ருதத்தை எதிர்ப்போர் வாதிப்பது போல அது ஒன்றும் ப்ரோகிதம மட்டுமே பேசும் மொழி அல்ல.அதனை பிராமணர்கள் மட்டுமே பயன்படுத்தவில்லை.( சம்ஸ்க்ருதத்தில் மாபெரும் படைப்பாளிகளான வால்மீகி,வியாசர்,காளிதாசன் யாரும் பிராமணர் இல்லை.)
ஒரு காலகட்டத்தில் எழுத்து வடிவம் உன்னதம் பெற்ற போது அது அறிவாளிகளால் செம்மை படுத்தப்பட்டு தனி மொழி போல புழங்கியிருக்கலாம்.படைப்பாளிகளின் எழுத்து மொழியாக விளங்கியிருக்கலாம்.பொதுவான படைப்பு மொழியாகி வெவ்வேறு தாய் மொழியினரும் தத்தமது கருத்துக்ககளை பகிர்ந்துகொள்ள வசதியான ஏற்பாடகவுமிருக்கலாம்.
நெபோலியன் காலத்தே பிரெஞ்சு மொழி பொது மொழியாக பெரும் பலம பெற்றதைப்போல.( அமெரிக்க சுதந்திர பிரகடனம் கூட பிரெஞ்சில் தான் உள்ளது)
இப்போது பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் எழுதும் தமிழ் வடிவம் எங்காவது மக்களால் பேசப்படுகிறதா? (அப்போ அது கூட செத்த மொழி தானா?)
எழுத்து தமிழ் என்பது எங்கும் மக்களால் பேசப்படாத முகமற்ற மொழி என ( நாம் மிகவும் மதிக்கும் ) கி.ரா அவர்கள் கூறியிருக்கிறார். அப்போ முகமற்ற எழுத்து தமிழ் ( முண்டம் என்பதன் நாகரீக சொல்) அப்படித்தானா?
மதமும், மொழியும்,நாகரீகமும்,கலாச்சரமும் ஒன்றில் ஒன்று உள்வாங்கி,காலமாற்றமடைந்து, அரசியல், சமூக தேவைக்கேற்ப உருமாற்றப்பட்டு விடுகிறது. போதுமான வாசிப்பில்லாமல் போனால் பிரச்சாரத்தினால் சூட்டப்பட்ட புதிய முகத்தை சுய முகம் என நம்பி விடுகிறோம்.
ஏசுபிரான் பேசி வந்த அரமைக் மொழி கூட இன்று ஏறத்தாழ இல்லை. ஆனால் அதன் நஷ்டம் அவருக்கு இல்லை.
ஒரு விஷயம் தெரியுமா வெண்தாடி வேந்தரே? நாத்திகமும் கூட சார்வாகம் என்ற பிரிவில் சமஸ்ருதத்தில் பேசப்பட்டிருக்கிறது.அது ஒரு மொழி தானே தவிர நீங்கள் இப்படி பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? உள்ளே சென்று பார்த்து உங்களுக்கும் தேவை என்றால் எடுத்துக் கொள்ளலாம் தானே?
—
SATHIANARAYANAN.R,
sathiawin@gmail.com