யாருக்கும் பொதுவான
Published July 9, 2009 • By
சக்தி
சக்தி
செந்நிற மலரிதழில்
வெண்ணிற கோடிட்டு
பொன்னிற மாலைதனில்
மின்னிட வைத்தவன் யாரோ
பட்டெனும் சிறகினிலே
பட்டிடும் இடமெல்லாம்
விட்டிடும் வர்ணங்களை
இட்டவன் அவன் யாரோ
பச்சிளம் குருத்துக்களில்
மெச்சிடும் வகைதனிலே
சிற்சிறு ரேகைகளை
முத்திரை பதித்தவன் யாரோ
வித்தகன் அவன் தான்
வியந்திடும் வகைதனில்
வனப்புகள் பல வைத்து
வாழ்க்கையைப் படைத்தானோ ?
கற்பனையோ ? கல்லோ ?
சொற்பமெனும் மனதினில்
நிற்குமொரு அமைதி வருமெனில்
சற்றுமொரு குழப்பமுமின்றி
இத்தரை மீதினில் வாழ்ந்திடும்
அத்தனை மாந்தர்க்கும் பொதுவாய்
சித்தம் நிறைந்தொரு சக்தியை
நித்தமும் நெஞ்சினில் வைத்திடுவோம்
அன்புடன்