பயிர்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

பவளமணி பிரகாசம்


ஆனந்த விளையாட்டொன்றை ஆடிடவே
அவள் வந்தாள் ஆர்வம் தளும்பிடவே
சீதனமாய் ரத்தினங்கள் கைநிறையவாம்
அவன் வேகம் சற்றும் சளைக்காதவனாம்
கண் மயங்கி கலந்தனர் மணிகளை
கை நிறைய அள்ளினர் கோர்த்தனர்
ஈடில்லா ஆரமொன்றை கண்டனர்
ஈரைந்து திங்கள் சென்ற பின்னே
நிறமும் உயரமும் என்னவாயிருக்கும்
நோயும் பலமும் எப்படியிருக்குமோ
காது மடலின் வளைவிலே
கண்ணின் நீண்ட இமையிலே
செதுக்கிய மூக்கின் நுனியிலே
எழும்பும் அழுகை குரலிலே
எட்டிப் பார்ப்பதாரோ ஆரோ
எவ்வழி பாட்டியோ தாத்தாவோ
எத்தனை தலைமுறைக்கு முன்னுதித்த
ஏதோவொரு மாமனோ மச்சானோ
என்னவொரு விந்தையிதுவோ
அற்புதமான விளைவிதுவோ
ஆலின் ஆழ விழுதுகளோ
பாசவயலின் பயிர்தானோ
பசுமையானதே பரம்பரையே

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்