திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நான் முடிவு செய்கிறேன் உன்னை

கே.பாலமுருகன்நீ எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி கவலைப்படாதே. உன்னைச் சிறுக சிறுக என்னுடையதாக என் விருப்பத்திற்குரியவையாக என் சுயம் சார்ந்த கருவியாக உன்னைப் பாவித்துக் கொள்கிறேன். உனக்காக எதையும் நீ வைத்துக் கொள்ளாதே.…

இருட்டுக்குள் தீப்பிளம்பு…

தினேசுவரி, மலேசியாநிசப்தத்தோடு உரசிய என் உள் மன நெருடல்களில் உன்னை நோக்கிய பயணங்கள் தொடங்கின இருட்டுக்கு அப்பால்..... இருட்டு விழுங்கப்பட்டு மீண்டும் உயிர் பெற்று கொண்டது நடக்க நடக்க மேலெழுந்த தீப்பிளம்பில் ....... நிரம்பியும்…

அவரவர் திராட்சை..

கார்த்தி. என்1) நரிக்கதை சொன்னவன் வானம் பார்த்து நகர்கிறான்.. கேட்டிருந்த குழந்தை எம்பிப் பறிக்கிறது மரத்திலிருந்து சில மழைத்துளிகளை.. 2) கொஞ்சமேனும் மழை வைத்திருக்கிறான் நிழற்படக்காரன்.. நனையவியலாமல் நிறையத் தொலைத்தும். 3) தூரத்துத் துளியொன்று…

உயிர்த்தெழுதல்…

செல்வராஜ் ஜெகதீசன்போய்ச்சேருமிடத்தில் புதிதாய் ஒன்று இருக்குமென்று ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா. புறப்படும்போது வாகனமொன்றில் அடிபட்டு இறந்த வீட்டுப் பூனைக்காக விட்டுவிட்டு அழுதுகொண்டிருந்தான் குட்டிப்பையன். பயணம் முழுதும் அநேகர் மனதில் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழந்து மரித்துக்…

கரியமில இரகசியம்

ஒளியவன்அளவாய்ப் பால் கொடுத்தாய் அருந்தினோம் அதுவும் போதவில்லையென உன் முலைக்காம்புகளைத் தின்று செரித்தோம் உன் உடலினைத் துளையிட்டு துளையிட்டு இன்பம் கொண்டோம் உன் ரோம மரங்களை வெட்டிச் சாய்த்து மொட்டையடித்தோம் கட்டிகளைக் காட்டி வளர்ச்சிகளென்றோம்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -42 << உன்னை நேசிப்பது எப்படி ? >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவிலை மிக்க அணிகலக் கற்களாய் நீ இருப்பாய் என்றோ ரோஜாக் கணை அம்புகளைக் கனல் மூலம் அனுப்புவாய் என்றோ நானுன்னை நேசிக்க வில்லை ! ஏதோ கறுப்பி ஒருத்தியாய்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதல் கீதம் >> கவிதை -12 பாகம் -1

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings “Man’s Superior Standing” "சொர்க்கத்தின் ஆட்சிமுறை உபதேசிக்கப் படலாம் என்பதற்கும், மனிதன் அந்த அழகுணர்வை, நன்னெறியை, மெய்ப்பாட்டைத் தன் உள்ளத்திலே…

ஒரு கனவும் ….கனவு கொடுத்த ஆசைகளும்…….

தினேசுவரி, மலேசியாநாம் நாமாக....... இருத்தலில் நாம் நாமாக இல்லை........... உணர்வுகளில் உடைந்து பாத்திரங்களின் வடிவமாய் நாம் மாறிக் கொண்டிருக்கிறோம்........ ஒவ்வொரு நொடியும் எல்லாமுமாய் ஒழுக முடிகிறது நம்மால்..... நாமாக மட்டுமே முடியாமல்.......... - ஒரு…

விளம்பரம்

ரஜித் ராஜராஜ சோழனுக்கு பெரியகோயில் விளம்பரம் சாஜஹானுக்கு தாஜ்மஹால் விளம்பரம் பல்லவர்களுக்கு சிற்பங்கள் விளம்பரம் மோனலிசாவுக்கு புன்னகை விளம்பரம் ஆம்ஸ்ட்ராங்குக்கு சந்திரன் விளம்பரம் விஞ்ஞானிகளுக்கு விஞ்ஞானம் விளம்பரம் வித்தகனுக்கு கின்னஸ் விளம்பரம் அறிவாளிக்கு அறிவு…

கண்ணீர்ப் பிரவாகம்

எம்.ரிஷான் ஷெரீப் ஒரு சமுத்திர உடலின் மேல் பனிமுகில் போர்வை விழுந்தது எதன் ஈரத்தை எது வாங்கிக் கொண்டதென்ற கணக்குகளேதுமற்ற வெளியின் காற்று எல்லாத் திசைகளிலும் துளிகளாய்ப் படிந்தது அம் மலையினுச்சியில் சிறகடிக்கிறது ஒரு…