திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

முரண்:

* கி.சார்லஸ் *அனைத்து வகையான பூக்களும் பூக்கின்றன... விதவையின் தோட்டத்தில். ckicharles@yahoo.com

குடித்த அப்பா… குடிகாத்த அம்மா!

நாவிஷ் செந்தில்குமார்“அடியே” என்று தொடங்கும் அப்பாவின் அழைப்பொலியிலிருந்து அம்மாவிற்கான அடுத்த யுத்தம் தொடங்கிவிடும்… சாராய நாக்கிற்கு சாதரண உப்பும் காரமும் பத்தவே பத்தாது… எப்படிச் செய்தாலும் இல்லை ருசியென்று காரணத்தோடு அடித்த அப்பா இப்போதெல்லாம்…

தன் ஆவியை ஊற்றி வைத்த மரம்

ஹெச்.ஜி.ரசூல்பகலெல்லாம் குளத்தில் நீந்தும் விண்மீன்கள் இரவில் எப்படி வானத்தில் ஒட்டிக் கொள்கின்றன் அந்த தூபா மரக்கிளையின் இலையின் மீது உட்கார்ந்தால் மிதக்கும் சிறகுகளில் சுமந்து செல்வேன் கண்கள் கூசும் பேரெழிலின் வண்ணங்கள் ஓராயிரம் கண்களோடு…

மனப்பதிவுகள்

ப.மதியழகன்மனப்பதிவுகள் என்னைக் கடந்து சென்றுவிட்ட தென்றல் இப்பொழுது யாரைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறதோ... நதியில் நேற்று பார்த்த நீரலைகள், இக்கணத்தில் பலமைல் பயணப்பட்டிருக்கும் ஆனால், இன்று கண்ட நீரலைகளிலும் என் முகம் தெரிந்தது. குலை, குலையாய்…

பெயரிலென்ன இருக்கிறது?

செல்வராஜ் ஜெகதீசன் இசையமைப்பாளராகும் தன் மகளுக்கு ராகத்தின் பெயர் வைத்த நடிகர் ஒரு தீர்க்கதரிசி என்று நடிகையொருத்தி சொல்லியிருந்த பத்திரிக்கை துணுக்கை படித்து சிரித்துக் கொண்டிருந்தேன். என்னவென்று கேட்ட மனைவியிடம் எடுத்து நீட்டினேன் பத்திரிக்கையை.…

என்னை ஆளும் விலங்குகள்

எம்.ரிஷான் ஷெரீப்எல்லாமாயும் எனக்குள்ளே ஒளிந்திருக்கின்றன பல விலங்குகள் பூசி மெழுகும் சொற்களெதுவும் அவையிடத்திலில்லை சில மீன்களைப் போல அமைதியாயும் இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும் சில நேரங்களில் மட்டும் எறும்பு, தேனி, கரையான்களைப்…

பத்மநாபபுரம்

நட்சத்ரவாசிசரித்திரம் விழுங்கிய எச்சமாய் கோரைபற்களிடையே தலைகாட்டும் ஒரு பொடிந்த எலும்புத் துண்டு மங்கலாய் கலைந்து உறுதியாய் ஆடுகிறது ஒரு சித்திரம் நாற்புறமும் கோட்டை எழுப்பி உன்னை பாதுகாக்க ஏன் செய்தான் ஒரு பொல்லா பிழை…

நீங்கள் கேட்டவை

என். விநாயக முருகன்கடற்கரைக்கு வந்திருந்த புதுமண தம்பதிகளிடம் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிடித்தமானவற்றை கேட்டுக்கொண்டிருந்தாள். கடைசியாக பார்த்த படம் கேட்டாள். கணவருக்கு பிடித்த பாடல் கேட்டாள். மனைவிக்கு பிடித்த பாடல் கேட்டாள். கணவரிடம் பிடித்த நடிகையை…

ஒரு கிண்ண‌த்தை ஏந்துகிறேன்…(1)

ருத்ராஜான் கீட்ஸ் இந்தப்பெயரை ஒலிக்கும் உதடுகளே கவிதைகள் ஆகிவிடும். இருபத்தாறு வயதுக்குள்ளேயே(1795..1825) க‌விதையின் காட்டாறுக‌ளையெல்லாம் த‌ட‌ம்புர‌ட்டிக்கொண்டு வ‌ந்து அழ‌கு காதல் உண‌ர்ச்சி எனும் தேனாறுக‌ளையெல்லாம் குடித்து தீர்த்துவிட்டு காலிக்கிண்ண‌த்தை அதாவ‌து இந்த‌ உல‌க‌த்தை வீசியெறிந்து…

தீப ஒளியில் சிராங்கூன்

யூசுப் ராவுத்தர் ரஜித் நகையணிந்த காற்று நகைக்கிறது ஹோலிக்கொண்டாட்டத்தில் முகில்கள்¢ அந்தி வானம் தொடுத்த கதம்ப மாலைகள் இது இரவா? பகலா? மயங்குகின்றன இரவுப்பூச்சிகள் வசமிழந்து நிற்கின்றனர் சுற்றுலா விரும்பிகள் வாகனமோட்டிகளே கவனம் மின்மினிப்பூச்சிகள்…