This entry is in the series 20040318_Issue

அருண்பிரசாத்


நெடிதே பிளந்து நிற்கும்
கரும்பாறை பாதைகளில்
ஓடிக் களைப்புறும்
நினைவின் கால்கள்.

செறிந்த அலுப்பைத்
தாண்டி வரும்
ஒரு புதிய வெற்றிடத்தில்
அவை தஞ்சம் புகுகின்றன.

வெற்றிடம் நிரப்ப வரும்
பிறிதொரு சூல்மேகம்
புழுதி நிரம்பிய
தேய்ந்த பாதங்களை
கழுவிக் குளிர்விக்கிறது.

அருண்பிரசாத்
everminnal@yahoo.com

Series Navigation