திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

விடுமுறைப் பகற்பொழுதுகள்

ரவிஉதயன்சிறுவர்கள் காட்டிவிளையாடுகிற கண்ணாடியில் சிறு மேகத்தோடு தரைக்கு வந்து விடுகிறது சூரியன் அவர்கள் ஏந்திக் களிக்கும் திசை எங்கும் துண்டு வெயிலாய்த் துள்ளித் திரிகிறது இருளடர்ந்த வீட்டுச் சந்துகளில் மின்மினியாகி மினுங்கி மறைகிறது எதிர்…

குறும்பாக்கள் ஐந்து

பட்டி சு.செங்குட்டுவன் ---============ 1.ஒற்றைப் பனைமரம் ஒதுங்க நிழலில்லை மட்டையில் கூடுகள். 2.மொட்டைத் தலையில் முடிவளர ரத்தம் பனி குடித்த முயல். 3.மந்திரி ஆகிட பயிற்சி எடுக்கிறது வேலியில் ஓணான். 4.நாளைக்கு வரும் நாளைக்கு…

நெருப்பு மலர்

குமரி எஸ். நீலகண்டன்எரியும் காகிதத்தில் அசையும் இதழ்களுடன் அழகாக ஆடியதொரு சிகப்புப் பூ.. கருப்பு வாசம். தொட இயலவில்லை தோட்டமெதுவும் இல்லை வண்டு மொய்க்கவில்லை இதழ்கள் உதிரவில்லை இறுதியில் மண்ணில் கருப்பு மகரந்தங்கள்

அடிமை நாச்சியார்

பிச்சுமணி வேஅம்மாவோடு மாமாவின் கிராமத்திற்கு செல்லும் போது எல்லாம் உடனே எதிர்வீட்டு நண்பனை தேடி ஓடுவேன் வீட்டு முடுக்கில் முன்னங்கால்கள் கட்டப்பட்ட கழுதைகளை தாண்டி செல்ல தயங்கும் போது அய்யம்மாவின் குரல் வாங்க நாய்னா…

என் அன்னை கமலாவுக்கு

செந்தில்கமலமலரின் இதழ் போன்று மென்மை வைரம் போன்ற வைராக்கியம் நேசத்தை தவிர எதையும் வழங்காதவள் தன்னம்பிக்கையும் தைரியமும் மிக்கவள் எளிமை, கண்ணியம், பெருமை அவளது மொத்த வாழ்வு! சாதிமத எல்லைகள் கடந்து தன் வாழ்வையும்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனது தீய பழக்கம் : கூதற் காலத்தில் பொறுமை இழந்து பாதகம் செய்வேன் என்னோடு இருப்போ ருக்கு ! நானில்லா…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) முத்தெடுப்போன் உடை காலியானது (கவிதை -28)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எம்மோடு அமர்ந்துள்ளாய் இப்போது. பொழுது புலர்ந்ததும் நீ நிலத்தில் நடமாடுவாய் ! நீ நீயாக இருக்கிறாய் ! நாம் விரட்டிச்…

தோற்றம் எங்கே

செண்பக ஜெகதீசன் எங்கிருந்து தோன்றியது எங்கும் நிறை ஊழலும் உடன்பிறந்த லஞ்சமும்-- உள்ளிருந்து வெளியிலா, வெளியிலிருந்து உள்ளேயா.. மேலிருந்து கீழேயா, கீழிருந்து மேலேயா.. கண்டுபிடிக்க முடியாது கடவுளாலும்.., ஆனாலும் அது கட்டாயத் தேவையாகிவிட்டதே !…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் ! (கவிதை -39 பாகம் -1)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "கழிந்து போகும் பகலுக்கும், சூழ்ந்து வரும் இரவுக்கும் இடையே உதிரும் நமது வாலிபத்துக்கு வருந்தி, தெரியாத ஒருத்திக்கு ஏங்கிப் பலமுறைக்…

வியாபாரம்

ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாசன்.காதலை விற்று காமம் வாங்குகிறாய் காமத்தை விற்று கயமை வாங்குகிறாய் விந்தை விற்று வினை வாங்குகிறாய் பிள்ளை விற்று பிணி வாங்குகிறாய் தாலியை விற்று தங்கம் வாங்குகிறாய் தங்கத்தை விற்று தரணி வாங்குகிறாய்…