வெளியேறுதலுக்குப் பின்

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

இளங்கோ



அப்படியொன்று
சொல்லப்பட்டதாகவே
வடியவில்லை
இந்த இரவு..

உன்
வசவுகளின் கிரணங்கள்
என்
அறையின்
எல்லாப் பொருட்களின் மீதும்
பூசப்பட்டிருகிறது..

உன் வெளியேறுதலுக்குப் பிறகு
இன்னும்
திறக்கப்படாத கதவுகள்
எதைக்
கையேந்தி நிற்கிறது
என்பதை அறியும் விருப்பமற்று

கட்டிலோரம் தரையில் நீண்டுக் கிடக்கும்
சொற்ப நிழலுக்குள்
ஒடுங்கிக் கிடக்கிறேன்

சுவற்றில் மோதிய சிதறல் உதரிகளாக
கிடக்கும் செல்போன் ..

நம் உரையாடல்களை அணைத்து வைத்திருக்கிறது..

*******
இளங்கோ

Series Navigation

இளங்கோ

இளங்கோ