நீ அறியும் பூவே
ரவி உதயன்
அத்தனை பெண்களின்
கண்களும் அதன்மீதுதான் !
சடைப் பாம்புகள்
தரை தீண்டத் துடிக்கும்
இத்தனை முடிஆகாது வீட்டிற்கு என்பாள்
தலைவாரி விடும் அம்மாதினமும்.
ரோஜா,
கனகாம்பரம்,
சிலபொழுது மனோரஞ்சிதம்,
எப்பொழுதும் சிறு மல்லிகை இணுக்கு.
இவற்றைத் தின்று வளர்கிறது
என் கருங்கூந்தல்.
– ரவி உதயன்
raviuthayan@gmail.com