ஐந்து குறுங்கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

தேனம்மை லஷ்மணன்


வெய்யில் தாளாமல்
வேர்வைத் துளிகளாய்
வடிந்து கொண்டிருந்தன இலைகள்..

************************************************

இரவுக் கம்மாய்க்குள்
குளித்துக் கொண்டிருந்தது
நிலவு.

********************************************************

அலகுகளும் கால்நகங்களும் நீண்ட
வல்லூறாய் நின்று கொண்டிருந்தது
மொட்டை மரம்.

************************************************************

அளவுகள் மாறிய
பேரிளம் பெண்ணாய்
விளைந்து கிடந்தது பலா

*****************************************************************

இருளையும் வெய்யிலையும்
உதறத் தெரியாமல்
விழித்துக் கொண்டிருக்கிறது பூமி.

Series Navigation

தேனம்மை லஷ்மணன்

தேனம்மை லஷ்மணன்