திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மரணம்

This entry is in the series 20040205_Issue

காளிதாஸ்


மரணத்துக்கு
என்னிடம் பசியில்லை
மரணம் மீதோ
அடங்காப் பசியெனக்கு
ருசியில்லாப்
பண்டம் என்னை
மரணம் மறுதளிக்கிறது
தெருத்
தெருவாய் அலைந்தாலும்
தரிப்பிடமில்லா வாகனம்
நான்
உயர உயரப் பறந்தாலும்
உறையும்
கூடில்லாப் பறவை
மென்று மென்று
தின்று பார்த்துப்
பாதியில் மீதியைத்
துப்பிவிட்டுப்
பறந்துபோயிற்று மரணம்
மிச்ச எலும்புகளைப்
பொறுக்கிப்
புதைத்துப் பார்த்தேன்

கிழிந்த
தசைத் தொங்கல்களை
நெருப்புக் கூட்டி
எரித்துப் பார்த்தேன்
விடைதரா
விருந்தாளியாய்
வேதனை மட்டுமே
புண்ணிய உடல்தேடி
எங்கோ பாவம்
அலைந்துகொண்டிருக்கும்
மரணம்

– kaalidas2003@yahoo.com

Series Navigation

About காளிதாஸ்

காளிதாஸ்

View all 5 articles →

மரணம்

This entry is in the series 20020127_Issue

ஜெயந்தி சேது


தினம் தினம் உயிருடன் மரித்தது போய்
திடாரென நிரந்தரமாய் இன்று..

ஆயிரம் மைல்கள் தாண்டி வந்து
அழுது முடித்து காத்திருக்கும் மகன்..

கால் தொட்டு கும்பிட்டு கண்ணீர் வரவழைத்து
கதவோரம் கவலையாய் மறுமகள்..

கட்டிப் பிடித்து கதறியழுது கண்சிவந்து
காயா கண்ணீர் கோட்டுடன் மகள்..

இணைபிரியா நட்பு சொல்லிக்காமல் போனதாய்
இதயமும் கண்ணீர் கசியும் நண்பர்கள்..

இருசொட்டு கண்ணீர் சிந்தி
‘இன்னைக்கே எடுத்துடுவாங்களா ? என உறவுகள்..

பெரியவர்கள் கண்ணீர் பார்த்து
பெருங்குரலெடுத்து பேரன்கள்..

காணும் கண்களில் எல்லாம் காவிரி இருக்க
வறண்டு போன வைகையாய் நான் மட்டும்!

அழுதிடு எனும் அறிவுரைகள்…
அழவேயில்லை எனும் ஆதங்கங்கள்..
அழலையா எனும் ஆச்சர்யங்கள்..

அவர்களுக்கு தெரியாது

திரவ உணவுக் குழாய்களும்
திறவத் திராணியற்ற கண்களூம்
செயற்கை மூச்சுக்காற்றும்
செல்லரித்துப்போன அணுக்களும்
படுக்கையிலே குளியலும்
படுத்தே புண்ணாய்ப் போன உடம்பும்..

உயிரோடு தினம் மரித்தவர் கண்டு
அழுதழுதே அமைதியாகி போனேன் நான்..

‘அதை ரொம்ப நேரம் வச்சிருக்க மாட்டாங்க.. ‘
யாரோ சொல்வது கேட்க
விரக்திப்புன்னகை வெளியே தெரியால் விட்டம் வெறிக்கிறேன்..

அவர் அதுவாகிப்போனது அவர்களுக்கு!
அது அவராகிப்போனார் எனக்கு….!

Series Navigation

About ஜெயந்தி சேது

ஜெயந்தி சேது

View all 4 articles →

மரணம்

This entry is in the series 20010618_Issue

ஸ்ரீனி.


பிறப்பின் உடன்பிறப்பு
பந்தயத்தில்
இறுதியில் துவங்கி
இறுதியில் முதலிடம் பிடிக்கும்
அணுமுதலான அனைத்திற்கும்
அந்தியானதோர் அரிய சக்தி.

சரித்திரத்தின் தந்தை
வயோதிகத்தின் நண்பன்
சில நேரங்களில்
இளசுகளின்
எதிர்பாரா எதிரி

விரட்டி விரட்டி
வேருரூ கொள்ள செய்யும்
பரிணாமத்தின் மூலகர்த்தா

உலகில்
சமத்துவத்தை உணர்த்த
என்றும் உள்ள
சிறந்ததோர் வழிகாட்டி

எனவே
கண்டு பயம் வேண்டாம்
செல்கள் செயல் இழக்கும் நேரம்
சோர்வுரும் நேரம் அல்ல
இதுவே
நாம் தேடுகின்ற
முக்தி.

அச்சம் தவிர்.

Series Navigation

About ஸ்ரீனி

ஸ்ரீனி

View all 49 articles →

மரணம்

This entry is in the series 20010226_Issue

கோகுல கிருஷ்ணன்.


‘இதுக்கு
மூத்திரம் கழுவியே
மூச்சு நின்னுடும் எனக்கு ‘
முனகிக் கெ ‘ள்ளும் அம்மா;
‘ஆசுபத்திாிச் செலவுலயே
ஆஸ்தி கரைஞ்சிடுச்சி ‘
அலுத்துக் கொள்ளும் அப்பா;
‘இந்தத் தடவையும்
ஏமாத்திடிச்சோ ‘
புலம்பிக்கொண்டே
புறப்பட்டுப் போகும் அத்தை;
எதிர் வீட்டில் இருந்தும்
எட்டியே பார்க்காத
பொியப்பா;
எல்லோரும்
அலறி அழுதார்கள்
தாத்தா செத்துப் போனபோது.
எனக்கு மட்டும்
அழத் தோன்றவில்லை.

Series Navigation

About கோகுல கிருஷ்ணன்.

கோகுல கிருஷ்ணன்.

View all 14 articles →