அந்த வீடு

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

புஷ்பா கிறிஸ்ரி


மனம் வியாகுலமாய்

அழுது கொண்டது

காலாரக் கொஞ்சம் நடந்து போக

அந்தப் பெரிய வீடு வந்தது

நாயும் தெரியவில்லை

வாசலில் பலகை இல்லை

நாய்கள் ஜாக்கிரதை என்று

காவல் காரனும் இல்லை

மஞ்சள், சிவப்பு என்று

பலவர்ண கலவையில்

குரோட்டன் செடிகள்

வீட்டைச் சுற்றி

அழகு காட்டினாலும்

சுவர்கள் மட்டும்

அழுக்காகிக் கிடந்தன

உள் வீட்டு மனிதர்

மனத்தைப் போல்

இரவு மட்டுமே பல்துலக்கி

காலை தேனீர் குடித்து

வாரம் ஓருமுறை குளித்து

மறு நாட்களில்

வாசனைத் தைலம் பூசி

அழகாய் உடுத்திக் கொண்டு

குளிருக்குப் பயந்து

குளிக்க மறந்த

வெள்ளைக் காரனாய்

உயர்ந்து நின்றது

அந்த வீடு

புஷ்பா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி