அக்கரை பச்சை

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

மு.புகழேந்தி


————————

கண்துஞ்ச
கற்று ஏறி
கருவிழி பாவையில்
காலம் பார்த்து
துருப்புச்சீட்டுக்கு ஏங்கி
நாடு கடந்து
சொல் மறந்து
சோகம் தாங்கி
சொந்தம் மரத்து
புலன் செத்து
நிறவேறுபாடுகள் பழகி
குண்டு குழியில்
குதிரை ஏறி
பெரும் பள்ளம்
சிறுமேடு தாண்டி
நாடு திரும்பியவனிடம்
இக்கரையில் இருந்தவன்
அக்கரை பச்சை என்றான்
இவன்
பார்த்தீனியமும் (களையும்)
பச்சையாகத்தான் இருக்கும்.!
_______________
pugazhendi@hotmail.com

Series Navigation

மு.புகழேந்தி

மு.புகழேந்தி