கடவுள் பற்றி 3 கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

சித்தார்த் வெங்கடேசன்


தேவை

துன்பம் வந்து இறுக்கும் போது
இன்ப வெள்ளம் பெருகும் போது
தனிமையின் வெறுமையை உணரும் போது
சாய்ந்து அழ
சிரித்து மகிழ
கூட பேச
நமக்கு
ஓர் கடவுள் தேவைப்படுகிறது.

—–

அவதாரங்கள்

எனக்கு சுதந்திரம்
நன்பன் ஒருவனுக்கு பணம்
அம்மாவுக்கு அப்பா
தாத்தாவுக்கு ஒழுக்கம்
வியப்பு !
கடவுளுக்குத்தான் எத்தனை அவதாரங்கள்.

—–

வாசல்கள்

அந்த வீட்டிற்குள் செல்ல எல்லோருக்கும் ஆசை தான்.
எந்த வாசல் வழியாக என்பதில் தான் பிரச்சனை.

வாசல்கள் திறக்கமுடியாத படி இறுகிப்போயின.
இன்னும் சண்டை ஓய்ந்தபாடில்லை.

——

siddhu_venkat@yahoo.com

Series Navigation

சித்தார்த் வெங்கடேசன்

சித்தார்த் வெங்கடேசன்