வ.ந.கிரிதரன்
அண்மையில் நூலகம்.நெற் (Noolaham.net) இணையத் தளத்தில் ‘திசை புதிது ‘ இதழ்-1 (2003)இல் வெளிவந்திருந்த ‘மூத்த எழுத்தாளர் வரதர் ‘ என்னும் கட்டுரையொன்றினைப் பிரசுரித்திருந்தார்கள். அந்தக் கட்டுரையில் ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றை வாசித்தபொழுது பெரிதும் ஆச்சரியமாகவிருந்தது. அதில் ஓரிடத்திலாவது அறிஞர் அ.ந.கந்தசாமியைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லை. மறுமலர்ச்சிக் காலகட்டம் என்று நாம் குறிப்பிடும்போது ‘மறுமலர்ச்சிச் சங்க ‘த்தின் காலகட்டத்தையும், அச்சங்கத்தால் வெளியிடப்பட்ட ‘மறுமலர்ச்சி ‘ சஞ்சிகையின் (கையெழுத்துச் சஞ்சிகை / அச்சில் வெளிவந்த சஞ்சிகை) காலகட்டத்தையும் உள்ளடக்கிய காலகட்டத்தையே குறிப்பிடுகின்றோம். சஞ்சிகை அச்சில் வெளிவந்தபோது வெளியிட ஐவர் கொண்ட குழு பண உதவி செய்ததாக வரதர் தன் நேர்காணல்களில் குறிப்பிடுவார். ஆனால் மறுமலர்ச்சிச் சங்கத்தினை 1943இல் அமைத்து 1945வரை ‘மறுமலர்ச்சி ‘ கையெழுத்துச் சஞ்சிகையினை வெளியிட்டவர்களையே அக்காலகட்டத்தின் மூலவேர்களாகக் குறிப்பிடவேண்டும். இச்சங்கத்தை உருவாக்கியவர்கள் அவ்வப்போது கூடி இலக்கியத்த்தின் பல்வேறு வகையான போக்குகள் பற்றி, அவற்றின் தன்மைகள் பற்றியெல்லாம் விவாதித்து வந்துள்ளதோடு அச்சங்கத்தின் குறிப்பிட்ட காலத்தின் வெற்றிக்கும் காரணமாக விளங்கியிருக்கின்றார்கள். இதனை நாம் மறந்து விடக் கூடாது.
[மதுரைத்திட்டம், நூலகம்.நெற் போன்ற இணையத்தளங்களில் காணப்படும் படைப்புகளையும், அவை தேர்வு செய்யப்பட்ட முறைகளையும் பார்க்கும்போது அவை முறையாக ஈழத்தினதோ அல்லது தமிழகத்தினதோ இலக்கிய உலகைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லையென்பதை யாருமே கண்டு கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட படைப்பாளிகளின் படைப்புகளும், ஒரு குறிப்பிட்ட இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த படைப்பாளிகளின் படைப்புகளுமே மிக அதிக அளவில் காணப்படுவதால் இத்தகைய தளங்களின் சமநிலை நிலைகுலைந்து போய் விடுகின்றன. ஈழத்து இலக்கிய உலகின் அல்லது தமிழக இலக்கிய உலகின் சரியான வளர்ச்சியினை, வரலாற்றினை இத்தகைய முறையற்ற தேர்வுகள் வெளிகாட்டாமல் மூடி மறைத்து விடுகின்றன. நாங்கள் இப்பொழுதுதானே ஆரம்பித்துள்ளோம். காலப்போக்கில் சரி செய்து விடுவோம் என இத்தளங்களின் ஸ்தாபகர்கள் கூறக்கூடும். அவ்விதமாயின் எதற்காக ஒரு குறிப்பிட்ட சில படைப்பாளிகளின் படைப்புகளுக்கு அல்லது குறிப்பிட்ட வட்டம் சார்ந்த படைப்பாளிகளின் படைப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்துப் படைப்புகளைப் பிரசுரித்து வருகின்றீர்கள் எனக் கேட்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு இவர்களெவ்விதம் நியாயமான பதில்களை வழங்கப் போகின்றார்கள் ? உதாரணமாக அ.முத்துலிங்கத்தின் ‘வம்சவிருத்தி ‘, ‘திகடசக்கரம் ‘, ‘வடக்குவீதி ‘ ஆகிய நூல்களைப் பிரசுரித்துள்ள அதே சமயம் இவை அனைத்தையும் உள்ளடக்கிய ‘அ.முத்துலிங்கம் கதைகளை ‘யும் பிரசுரித்துள்ளார்கள். இதற்குப் பதிலாக அ.முத்துலிங்கம் கதைகளை மட்டும் பிரசுரித்துவிட்டு, ஏனைய நூல்களுக்குப் பதிலாக இன்னும் மூன்று ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளைப் பிரசுரித்திருக்கலாமே. உதாரணமாக ஈழத்தின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான அ.செ.முருகானந்தனின் விடுதலைப் புலிகளின் கலைப் பண்பாட்டுக்கழகத்தினரால் வெளியிடப்பட்ட அரிதாகக் கிடைக்கக் கூடிய ‘மனிதமாடு ‘ போன்ற நூல்களைப் பிரசுரித்திருக்கலாமே. அ.செ.மு. உயிருடன் இருந்தபோதே மேற்படி நூலினையும் வெளியிட்டு, பண முடிப்பினையும் வழங்கிய விடுதலைப் புலிகளின் கலைப்பண்பாட்டுக் குழுவினரை இந்த விடயத்தில் நிச்சயமாகப் பாராட்டலாம். படைப்புகளின் தேர்வுகளைப் பொறுத்த வரையில் மதுரைத்திட்டம் மற்றும் நூலகம்.நெற் ஆகிய இரண்டுமே இதுவரையில் ஒரு பரந்த அளவில் தமிழ் இலக்கிய உலகை அணுகவில்லையென்பது அவற்றின் தற்போதைய முக்கியமான குறைபாடாகத் தெரிகிறது. காலப் போக்கில் இக்குறையினை இத்தளங்கள் தீர்த்து வைக்குமா அல்லது தொடர்ந்தும் இவ்விதமே ஒருவித வட்டத்தில் வளையவந்து கொண்டு முழுத்தமிழ் இலக்கிய உலகின் பிரதிபலிப்புகளாகத் தம்மைக் கருதிப் புளகாங்கிதம் அடைவதுடன் திருப்தியடைந்து விடுமாவென்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.]
சரி விடயத்திற்கு வருவோம்… அதாவது மேற்படி திசை புதிது இதழின் மேற்படி கட்டுரை அறிஞர் அ.ந.கந்தசாமியின் மறுமலர்ச்சிக் காலகட்டப் பங்களிப்பினை மறைத்து விட்டாலும் நல்லவேளையாக மறுமலர்ச்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான மூத்த எழுத்தாளர் வரதர் அவ்விதம் மறைத்து விடவில்லையென்பது ஆறுதலான விடயம். ‘வரதர் 80 ‘ நூலில் பத்மா சோமகாந்தனின் வரதருடனான நேர்காணலொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிக் கூறும் போது பின்வருமாறு கூறுவார்:
‘….இலங்கை வானொலியிலும் லண்டன் பி.பி.சி. தமிழோசையிலும் கடமையாற்றி உலகப் புகழ்பெற்ற சோ. சிவபாதசுந்தரம் ஈழகேசரி ஆசிரியராகவுமிருந்தவர். மறுமலர்ச்சி இயக்கத்தைத் தோற்றுவித்த இளைஞர்கள் பலரும் சோ. சிவபாதசுந்தரத்தின் வழிநடத்தலில் ஈழகேசரிப் பண்ணையில் தான் வளர்ந்தவர்கள். எமது ‘மறுமலர்ச்சி ‘ ஆர்வத்துக்குக் கை கொடுத்தது ஈழகேசரியே. புதிய இலக்கியத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒன்று கூடினோம். ‘புதுமைப் பித்தர்கள் சங்கம் ‘ எனப்பெயர் சூட்ட நான் விளைந்தேன். எனது விருப்பம் எடுபடவில்லை. தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் எனப் பெயரிட்ட, அதில் என்னோடு அ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி, கனக செந்திநாதன், பண்டிதர் ச.பஞ்சாட்சரசர்மா, க.இ.சரவணமுத்து (சாரதா), நாவற்குழியூர் நடராசன், து.ருத்திரமூர்த்தி (மகாகவி) முதலியோருடன் சுமார் 30 பேர் இருந்தனர். ‘(பக்கம்58).
மேற்படி மறுமலர்ச்சிச் சங்கத்தின் உருவாக்கம் பற்றி வரதர் மேலும் பின்வருமாறு அந்நேர்காணலில் கூறுவார்:
‘…. ஈழகேசரி இளைஞர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த அ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி, நாவற்குழியூர் நடராசன் போன்ற சிலருடன் கடிதத்தொடர்பு கொண்டேன். எங்களுக்குள் ஓர் இலக்கிய சங்கத்தை ஏற்படுத்தினால் என்ன என்ற எண்ணத்தை அவர்களிடம் விதைத்தேன். நல்ல வரவேற்பிருந்தது. நண்பர்களின் சந்திப்புக்காக காலமும் இடமும் குறிப்பிட்டு சில நண்பர்களுக்கு அறிவித்தேன். அவர்களும் தமக்குத் தெரிந்தவர்களுக்கு அறிவித்தார்கள். 13.06.1943 யாழ் நகரில் கன்னாதிட்டியிலிருந்த ரேவதி குப்புசாமி என்ற சிற்பக் கலைஞரின் வீட்டு விறாந்தையில் 15-20 பேர் கூடினோம். இப்படித்தான் தமிழ் மறுமலர்ச்சிச் சங்கம் தொடங்கப்பட்டது…. ‘ (பக்கம் 68)
மேலும் வரதர் மறுமலர்ச்சி சஞ்சிகை பற்றிக் குறிப்பிடும்போது பின்வருமாறு குறிப்பிடுவார்:
‘…. தமிழ் மறுமலர்ச்சிச் சங்கத்திலேயே மறுமலர்ச்சி என்ற கையெழுத்துப் பத்திரிகை தயாரிப்பதென்று தீர்மானித்தோம். அதற்கும் நான் தான் ஆசிரியராக இருந்தேன். கையினால் சில இதழ்களைக் கையெழுத்துப் பத்திரிகையாகத் தயாரித்தோம். எங்களுக்கிடையில் மாறி மாறி வாசித்து மகிழ்ந்தோம். மறுமலர்ச்சியை அச்சுப் பத்திரிகையாக வெளியிடவேண்டுமென்று கனவு என் மனதில் படரத் தொடங்கியது… ‘ (பக்கம் 69). மேற்படி நூலிலுள்ள கட்டுரையான ‘வாழ்நாளை நீட்டிடும் வல்லமை படைத்த வரதர் ‘ என்னும் கட்டுரையில் பிரபல எழுத்தாளர் சொக்கன் அவர்கள் வரதரை ‘மறுமலர்ச்சி ‘ சஞ்சிகையின் இணையாசிரியராக்கக் குறிப்பிடுவார் (பக்: 9).
மறுமலர்ச்சி இயக்கம் 1943இல் வரதர், அ.ந.கந்தசாமி, அ.செ.மு, நாவற்குழியூர் நடராசன் போன்றோரால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மேற்படி மறுமலர்ச்சிச் சங்கம் மறுமலர்ச்சி என்னும் கையெழுத்துச் சஞ்சிகையினை வெளியிட்டுள்ளது. அக்கையெழுத்துச் சஞ்சிகை மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் முக்கியமானது. அச்சஞ்சிகையில் யார் யார் எழுதினார்கள், எத்தகைய ஆக்கங்கள் வெளிவந்தன என்பது பற்றிய விபரங்கள் அறியப்பட வேண்டியவை. ஏனெனில் அக்கையெழுத்துச் சஞ்சிகையின் பரிணாம விளைவே பின்னர் அச்சில் வெளிவந்த மறுமலர்ச்சி சஞ்சிகை. எனவே மறுமலர்ச்சிக் காலகட்டம் என்னும் போது அது மறுமலர்ச்சிச் சங்கத்தின் காலகட்டத்துடன், ‘மறுமலர்ச்சி ‘ கையெழுத்துச் சஞ்சிகை மற்றும் பின்னர் அச்சில் வெளிவந்த ‘மறுமலர்ச்சி ‘ சஞ்சிகை ஆகியவற்றின் காலகட்டமுமாகுமென்பதை யாரும் மறந்து விடக் கூடாது.
மேற்படி மறுமலர்ச்சி காலகட்டத்துடன் அ.ந.கந்தசாமியை இணைத்து அந்தனி ஜீவா தனது ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் ‘ என்னும் கட்டுரைத் தொடரில் ‘….பண்டிதர்களையும் பட்டதாரிகளையும் மிஞ்சும் அளவுக்கு அ.ந.கந்தசாமி புலமை பெற்றிருந்தார். அதனால் தான் மறுமலர்ச்சிக் குழுவுக்கே தலைமை தாங்கும் அளவுக்குத் தகுதி பெற்றிருந்தார். கதைகளையும், கவிதைகளையும் ,கட்டுரைகளையும் விரும்பிப் படித்தார். பழைய இலக்கியங்களையும் ஆர்வத்துடன் ஆழ்ந்து கற்றார். இளமையிலிருந்து இலக்கியத்திலிருந்து வந்த ஆர்வந்தான் மறுமலர்ச்சிக் குழுவுக்கு முன்னோடி என்றழைக்கப்படும் அளவுக்குச் சிறந்து விளங்க அவருக்குப் பக்கத் துணையாகவிருந்தது…. ‘ என்று குறிப்பிடுவார்.
மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் தோற்றுவாய் பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டியதவசியம். தற்போது அக்காலகட்டத்துக்குரிய படைப்பாளிகளில் எஞ்சி நிற்பவர் வரதர் ஒருவரே. அச்சில் வெளிவந்த மறுமலர்ச்சி இதழ்கள் மட்டும் மறுமலர்ச்சிக் காலகட்டமாகிவிடாது. மறுமலர்ச்சிச் சங்கத்தினதும், மறுமலர்ச்சி கையெழுத்துச் சஞ்சிகையினதும், மறுமலர்ச்சிச் சங்கத்தின் ஸ்தாபகர்களின் கலந்துரையாடல்கள், விவாதங்கள் ஆகியவற்றினதும் தொடர்ச்சியான விளைவாகவே அச்சஞ்சிகையினைக் கருத வேண்டும். எனவே மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய விரிவான ஆய்வுகள் மட்டுமே மேற்படி ‘திசை புதிது ‘ இதழின் கட்டுரை போன்ற ஒருபக்கச் சார்பான, ஆழமற்ற கட்டுரைகள் எதிர்காலத்தில் வெளிவருவதைத் தடுக்க உதவுமென்பது அடியேனின் கருத்தாகும்.
ngiri2704@rogers.com
- கடிதம் – ஆங்கிலம்
- படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம்
- சேந்தனாரின் கடவுளர் இருவர், காதலியர் இருவர்
- நம்மாழ்வார்
- புதுமைப் பித்தனும், நடப்பியலும்
- உண்மையின் ஊர்வலம் .. (4)
- நான் கண்ட சிஷெல்ஸ் – 14. சிஷெல்ஸில் தமிழர்கள்
- வானகமே. வையகமே சுற்றுப் புற சூழல் இதழ் பற்றி
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -1
- கருவண்டாகி பறந்துபோகும் சித்தன் – நவீனம் தாண்டிய கவிதை பற்றி
- சுனாமி வைத்தியம்!
- ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டமும், அ.ந.க.வும்: சில குறிப்புகள்!
- வடக்கு வாசல் இசைவிழா-2006 – 31-03-2006
- கடிதம்
- குளமும் ஊருணியும்
- உண்மை தெய்வமான க(வி)தை
- கடிதம்
- திண்ணை என்ன செய்யும் என்று யாரிடமும் தெரிவிக்க வில்லை
- சூழலியல் கவிஞர், மற்றும் பெண் சாதனையாளர் விருது பெற்ற வைகை செல்வி
- சுந்தரமூர்த்திகளுக்கு….
- சுயபுராணமே வரலாறாக…,தொட்டாச்சிணுங்கிகள் எழுத்தாளர்களாக…
- செம்பை உள்ளே எடுத்து வைக்கும் முன், சில விசயங்கள்:
- நடேசனின் ‘வாழும் சுவடுகள் ‘ மின்நூல் வடிவில்
- கடிதம் – ஆங்கிலம்
- பரபரப்பு விற்பனையில் ஒரு புத்தகம்!
- உயிர்மெய் முதலாவது இதழ் வெளிவந்துவிட்டது
- சூட்டுக் கோட்டு சூடு கோடு
- செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் (2)
- கண்ணாடியில் தெரியும் பிம்பத்துடன் ஒரு விவாதம்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஆறு: வெளிக்கள ஆய்வுத் தகவல்கள்!
- அப்பாவின் மனைவி
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 12
- யதார்த்தம்
- ராகு கேது ரங்கசாமி (தொ ட ர் க தை -1)
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-12) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- சொல் இனிது சொல்வது இனிது
- சேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்
- ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள்
- புலம் பெயர் வாழ்வு (4)
- ‘வெடி மருந்து வீச்சமில்லாத தெருக்களில் நடக்கக் கனவு கண்டவன்’
- சொல்லிப் பிாிதல் உனக்குச் சுகமே! நினைவு நீங்கா எங்கள் தோழனுக்கு எங்கள் அஞ்சலி!
- ராணுவம், காவல் துறைகளில் முகமதியர்: நிஜங்களை நோக்கி ஒரு பயணம்
- அவுரங்கசீப் : மதச்சார்பின்மையின் முன்னோடி
- சனிக்கோளின் துணைக்கோளில் நீர் ஊற்றுகள் எழுச்சி! செவ்வாய்க் கோளை வலம்வரும் விண்சுற்றி! [Water on Saturn ‘s Moon & Mars Orbiter Or
- ஒருநாள் கிறிக்கற் (புதிய) விதியை ஏற்றிடலாமா ?
- காற்றோடு திரிகின்ற யமன்
- கோபால்சாமியா ? கோயாபல்ஸ்சாமியா ?
- குட்டிப் பூனையாக அலைகிறது பொம்மை
- பெரியபுராணம் – 80 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- யாழன் ஆதி கவிதைகள்
- மகத்தானதும் அற்பமானதும் – ( மூலம் :க்ஷுவாங்ட்சு )
- உலகம் என்பது வண்ணம்
- வன்மழை
- மனிதனாய் தவிர்த்து
- எல்லம் வாத்துக்களே
- டான் கபூர் கவிதைகள்
- கீதாஞ்சலி (64) வீணாகும் தீபங்கள்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )