மிச்சம் !

This entry is part [part not set] of 43 in the series 20110529_Issue

கவிதா ரவீந்தரன்


சந்தர்பங்களின் சாத்தியத்திற்கு
உதவக்கூடுமென
சேருமிடத்தை மாற்றியவாறு
கணத்துக்கொண்டே போனது
ஓர் பயணம் …
எங்கும் இறங்க மனமின்றி
இருப்பின் தடயங்கள் ,
இழந்த இரவுகளை
எண்ணிக்கொண்டு
கிளம்பும் போதெல்லாம்
நினைவுகளை சுமந்து போகிற
ஏதேனுமொரு திசையில்
குறுக்கிடும் காகத்திற்கு
தெரியாது
எதிர்பார்புகளின் குவியலோடு
அலையும் வாழ்வு பற்றி

-கவிதா ரவீந்தரன் (kavitharaveendar@yahoo.co.in)

Series Navigationகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம் >>

கவிதா ரவீந்தரன்

கவிதா ரவீந்தரன்