பா.சத்தியமோகன்
உங்களுக்கும் இது நேர்ந்திருக்குமோ அறியேன்
ஆனால் எனக்குள் இருவர்
ஓயாமல் தொல்லை செய்கின்றனர்
ஒருவர் பெயர்: காரணம்
இன்னொருவர்: காரியம்
என்னை அவர்கள்
பிறப்பிலிருந்தே தொடர்கிறார்கள்
சுவர் தாண்டுவதுபோல இவர்களைத் தாண்ட
எப்போதும் முயல்கிறேன் –
சுதந்திரமாக இருக்க முயலும் ஆசையால்.
ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை
ஒருகணமும் விடாமல் என்னுடன்
கூடவே பயணிக்கிறார்கள்
அவர்களுக்குத் தெரியாமல்
குளியலறை கூட போகமுடியாது
“இப்போது ஏன் இதைச் செய்கிறாய் தெரியுமா?”
“உன் அழுக்கு நீங்குவதற்கு!” என்பதைக்கூட
ஓயாமல் அவர்களே பேசித் தீர்க்கின்றனர்
என்னால் அவர்கள் பாரத்தைச் சகிக்க முடியவில்லை
சுதந்திரம் விரும்புகின்றேன்
தினமும் கெஞ்சிவந்தேன் .
அவர்களோ தீர்மானமாக
தாம்புக்கயிறோடு என் செயலுக்கு முன் நின்றார்கள்
ஒரு நாள் –
மலரையும் விஞ்சும் குழந்தை ஒன்று
தெரு மண்ணில் விரல் நுழைத்து
அரைஞாண்கயிறுடன்
அவ்வளவு சந்தோஷமாக விளையாடியது
“போங்கள்!
நீங்கள் அந்தக் குழந்தையிடம் ஒன்றுமே
செய்யமுடியாது” என்றேன் –
அவர்களிருவரும் தலைகவிழ!
***
- செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி
- முள் – முத்துமீனாள்- முதல் பதிப்பு வெளியீட்டு விழா
- தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…
- சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
- கலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு
- கலை இலக்கிய விழாவில் ‘வல்லினம்’ இதழ் அகப்பக்கமாக புதிய அவதாரம்
- புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்!
- கருத்தியல் தர்மம் காக்க!
- சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே
- புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்
- கோடை
- என்றாலும் கவிதையே
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 51 << மாறாத உன் தோற்றம் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)
- வேத வனம் –விருட்சம் 49
- அழகு
- தாயெனும்…
- புன்னகை
- முடிவாகவில்லை
- வெறிச்சோடிக் கிடக்கும் வீடு!
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10
- யார் அந்த சண்முகம்?
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று
- தேவை கருணை பார்வை
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- பாதையையும் பயணமும்
- மிச்சாமி துக்தம் : (துக்டம்)
- சற்றுமுன் வந்த மின்னஞ்சல்
- தடை
- ’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”
- காட்டுவா சாகிப்
- தவிர்க்க விரும்பும் தருணங்கள்
- பண்டிகைகள்
- தலைகவிழல்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் (கட்டுரை: 63)