திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இயக்கம்..

This entry is in the series 20090731_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


உண்ண
உழைக்க
உடைமாற்ற
உடல் தேய்த்து
குளிக்கக் கொள்ள
சபை நடுவே
கைகட்டி
கம்பீரம் காட்ட
குழுவில்
கைதட்டி
குதூகலிக்க
முகவாயில்
முட்டுகொடுத்து
முறுவலிக்க
அரிப்பெடுத்தால்
அவ்வப்போது
சொரிந்து கொள்ள
உறங்கும்போதும்
தலையணையை
கட்டியணைக்க
என்று
என்னவும் எப்பவும்
இயங்கிக் கொண்டேயிருக்கும்
நம் கைகள்
ஓய்வெடுக்கும்
திருநாள் – நாம்
ஓய்கின்ற
ஒரு நாள் தானோ?

jagee70@gmail.com>Add sender to Contacts

Series Navigation

About செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

View all 111 articles →

இயக்கம்…

This entry is in the series 20050826_Issue

பட்டுக்கோட்டை தமிழ் மதி


உணர்வுகள் கொண்டு
ஓடுவது பயணம்
நாடி எதையும்
நடப்பதும் பயணம்

நம்புவீர்களா ?
படுத்துத்தரையில்
கிடப்பதும் பயணம்.

ஓடும்காலத்தோடு
உலக உருண்டை
உருண்டோடிக் கொண்டிருக்க
இந்த
உலகத்தோடு ஓடும் பயணம்
படுத்துத்தரையில் கிடக்கிற பயணம்.

இட்டுவைக்கும் ஓரடியும்
இந்த
உலகம் மிஞ்சிய ஒரு பயணம்.

இப்போதே
எத்தனை எத்தனை அடிகள்
எடுத்துவைக்க முடியும்.

எடுத்துவைக்கிற ஓரடியும்
உலகத்தை மிஞ்சுகிற போது
மண்ணில்தான் எது தோல்வி ?

இயக்கம் என்பது
எத்தனை எத்தனை வெற்றி!

சுறுசுறுப்பு என்பது
எத்தனை எத்தனை உயிர்ப்பு!

ஓரிடத்தில் நிற்கும் பூங்கொடி
உயரஉயரதாவுவதில்
உள்ளுக்குள் இருக்கும் மகிழ்ச்சி
பூக்களாய் சிரித்தது.

நானும்
ஒரு
உறக்கத்திலிருந்து எழுந்தேன்

பட்டுக்கோட்டை தமிழ் மதி
tamilmathi@tamilmathi.com

Series Navigation

About பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி

View all 34 articles →

இயக்கம்

This entry is in the series 20040429_Issue

பவளமணி பிரகாசம்


சொல்லாமல் கொள்ளாமல்
மின்னாமல் முழங்காமல்
கோடை மழை வந்தது
கொட்டி முடித்து சென்றது

கனம் குறைந்து போனதில்
வானம் தெளிவானது
குளித்துவிட்ட களிப்பில்
குளிர்ந்து விட்டது பூமி
இறுக்கம் தளர்ந்த காற்று
இளைப்பாறிக் கொண்டது

பிரளயம் பார்த்த பிரமிப்பில்
சிறகை உதறியது குருவி
புழு பூச்சி தேடி
புறப்பட்டுச் சென்றது

சேறாக ஆறாக
பெருகி வந்த மழை நீர்
பாதையோரம் படுத்திருந்த
பழுத்த இலையை
பச்சை இலையை
சம்மதம் கேளாமல்
சுமந்து சென்று
சேர்த்தது வேறிடம்

பத்திரமாய் பதிந்திருந்த
சின்னப் புல்லோ
மெல்ல நிமிர்ந்து
பெருமூச்சு விட்டது
பிழைத்துக் கொண்டேனென்று
தெருவோடு போகிற
ஒரு பசுமாடதன்
நுனி மேய்ந்து பசியாற
பெரிய வலியோடு
புரிந்து கொண்டது
கண்ணிகளை கோர்த்தவனின்
சாமர்த்திய கணக்கினை
—-
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

About பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

View all 124 articles →