எதுவும் நடக்கலாம் என்றாகிப்போன…

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

றஞ்சினி



பயத்துடனான முகங்கள்
நிறைந்த தேசத்தில்
விலங்குகளின்
நடமாட்டமும்
குறைந்தே இருந்தது

நேற்றுவரை இருத்தலுக்காக
குரலை உயர்த்தியவள்/ன்
இன்று வீதியில்
இறந்து கிடக்கிறாள்/ன்

பாடசாலை மாணவியிலிருந்து
வீட்டிலிருக்கும் தாய்வரை
எப்பவும் நடக்கிறது, நடக்கலாம்,

ஒரு ஆயுதம் வாங்குவது
பட்டினியால் இறக்கும்
உயிர்களை விட
அவசியமாகிறது இவர்களுக்கு

அதிகாரங்களில் மனிதர்கள்
இன்மையால்
மனித உரிமைகள்
பறிபோன தேசத்தில்
ஆயுதங்களும் பொய்களும்
சுதந்திரமாகவே உலாவித்திரிகின்றன


shanranjini@yahoo.com

Series Navigation

றஞ்சினி

றஞ்சினி