சிறகுகளை விரிக்கும்போது!
க.பிரிதீபராஜன் கணேசன்
மேற்றிசையிற் சூரியன்போய்
விழுந்து மறைந்திட்டான்
ஒளிர்விடும் சந்திரன்
எழுந்து வானை அலங்கரித்தான்
இளங்காற்றுப் பாடியது
இன்பத்தாலாட்டு!
மரங்கள் அசைந்தன
மெல்ல நடனமிட்டு!!
அமர்ந்தேன் மரத்தடியில்
கண்களை இறுக்கி
வந்ததோ மகிழ்ச்சி!
போனதோ துன்ப நிகழ்ச்சி!!
சிட்டாய் பறந்த
பட்டாம்பூச்சி
முத்தாய் விழுந்தது
உள்ளங்கையில்
பட்டாம்பூச்சியிலோ
பல பல வண்ணங்கள்!
படபடக்கும் மனதிலோ
புது புது எண்ணங்கள்!!
பட்டாம்பூச்சிக்கோ
முழுச்சுதந்திரம்!
மனிதனோ
வெறும் இயந்திரம்!!
பட்டாம்பூச்சிக்குக் கிடைப்பதோ
அளவில்லா இன்பம்!
மனிதனுக்கோ போனஸ் சம்பளம்
முடிவில்லா துன்பம்!!
நினைத்துப் பார்த்தேன்
மனித வாழ்க்கையை..
சலித்துக்கொண்டேன்
இந்த அவசர யுகத்தை!
பட்டாம்பூச்சியின் வாழ்க்கை
மனிதனுக்கு கிட்டுவது எப்போது ?
மனிதன் சிறகுகளை விரிக்கும்போது!
-க.பிரிதீபராஜன் கணேசன்
கவிதை:
சிங்கப்பூர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கிடையே (16-வயதுக்கு உட்பட்ட பிரிவு) நடைபெற்ற கவிதைப்போட்டியில் முதல்பரிசு பெற்ற கவிதை. போட்டி நடக்குமிடத்தில் கவிதையின் முதல்வரி மட்டும் வழங்கப்பட்டு உடனே எழுதப்பட்ட கவிதை.
—-
prithip@hotmail.com
- அன்புடன் இதயம் – 25 – கவியரசனே கண்ணதாசனே
- எனவேதான்,
- கிரிஸ்துவமும் பிரிட்டிஷாரும் சாதியமும்
- ஹோமோ செக்சுவாலிடடி( Homosexuality)
- ‘ஏய் ‘, ‘கில்லி ‘, ‘சுள்ளான் ‘-எதிர்காலத் தமிழகம் ?
- சங்கிலித் துண்டங்கள்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 30
- இதுவும் கடந்து போகும்
- வினை விதைத்தவர்கள்!
- வேடத்தைக் கிழிப்போம் – 4(தொடர் கவிதை)
- உருளை சலாட்(டூசல்டார்பர்) – சுவிட்சர்லாந்து
- ஞாயிற்றைக் கைம்மறைப்போர்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்-5
- மீள்பிறக்கும் ஹைடிரஜன் எருச்சுனை முடுக்கும் எதிர்கால மோட்டார் வாகனங்கள் [Renewable Hydrogen-Powered Fuelcell Future Motor Vehicl
- இயல்பாய் ஒரு தடவை…
- நாக்குகள்
- பெரியபுராணம் -2
- சிறகுகளை விரிக்கும்போது!
- என்னைச் சுட்ட பிஞ்சுகளே! தீயே உன் மேல் கோபம் !
- உன்னிடம்
- மெய்மையின் மயக்கம்-10
- கடிதம் ஜூலை 29,2004 – வஹ்ஹாபிசம், வெட்டுக்கிளி கட்டுரைப்பற்றி ..
- எனை கைது செய்து போகிறாய்.
- கடிதம் ஜூலை 29,2004 – நாக இளங்கோவனுக்கு சில கேள்விகள்
- கடிதம் – ஜூலை 29,2004
- கடிதம் ஜூலை 29,2004
- அமைச்சுப் பதவி
- டுபாக்கூர் கவியரங்கம்
- ஆட்டோகிராஃப் ‘காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா ‘
- மனவெளி கலையாற்று குழுவினரின் 11வது அரங்காடலின் தோல்விக்குக் காரணம் என்ன ?
- .. இருள் செய் நெருப்பு…
- அறியப்படாத பக்கங்கள் -கட்டுரை(சுயசரிதம்)
- ‘தைச்சீ ‘
- அநாதை
- ‘ தீக்கழுகு ‘ அல்லது ‘எமனுக்கே அதிர்ச்சியிது ‘
- நலம்…நலமறிய ஆவல்!!
- காலத் தடாகம்….
- கவிக்கட்டு 17 – உன்னத உறவு
- எது நாகரிகம்…. ?
- கவிதை
- ஒருவீடும் விவாகரத்தும்