கவிமனம்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

நம்பிராஜன்


தாமிரபரணிப் பக்கத்தில்
இருந்தால் சரி
தாய் அண்டையிலிருந்தால்
போதும்
துணைவி
கூட இருந்தால் நல்லது
பிளைகளோடு
வாழ்ந்தால் சந்தோஷம்
கோயிலுக்குக் கிட்டத்தில்
மொழிக்கு நெருக்கத்தில் இருப்பின் விசேஷம்
கவிதைக்குள்
இருக்கமுடிந்தால் எதேஷ்டம்
நெல்லையப்பருக்கு இல்லையென்றாலும்
காந்திமதிதாய்க்குப் புரியாத கவிமனசு
புட்டார்த்தியம்மன் வெறுமே பேசிக்கொண்டிருக்கமாட்டாள்
பெரிதாகச் செய்துதருவாள் நிச்சயம்

**********************************************

Series Navigation

நம்பிராஜன்.

நம்பிராஜன்.