கோமதி நடராஜன்.
ரத்த சம்பந்தம் ஏதுமில்லை
பல ஆண்டுகள் என்று
பழக்கமும் இல்லை
ஆனாலும் ,உன் மரணம் என்
மனதை ரணமாக்குகிறதே!
மொத்தத்தில்-
எண்ணி மூன்றே வருடங்கள்தான்,
உன்னை, எனக்குத் தெரியும்
எண்ணி மூன்று மாதங்கள் கூட
சந்தித்திருக்க மாட்டோம்
மூன்று மணி நேரம் கூட
உரையாடியிருக்க மாட்டோம்.
நாம் பேசிய வார்த்தைகளை
அடக்க அஞ்சல் அட்டை
ஒன்று போதும்
ஆனாலும் உன் பிரிவு என்னை
ஆழமாகத் தாக்குகிறதே!
உன்னைப் பெற்றோரின்
மனம், சுக்கு நூறாகியிருக்காதா ?
இறைவன்தான் தர வேண்டும்,
அவர்களுக்கு,
இரும்பு இதையத்தை.
எத்தனை கனவுகள்,
எத்தனை லட்சியங்கள்,
வைத்திருந்தாய்-
அத்தனையும் முடிக்காமல்
ஏனம்மா இந்த அவசரம் ?
அறியாத வயசு ஆறிலுமில்லாமல்
அனுபவித்த வயசு அறுபதிலுமில்லாமல்
இருபத்திமூன்றில் முடிந்து விட்டாயே!
உலக வாழ்க்கை மீது,
உனக்கு அத்தனை வெறுப்பா ?
ஐயோ!பாவம் என்று சொல்லி
அடுத்தவேலையைக் கவனிக்க
நீ ஒன்றும்-
யாரோ இல்லை எனக்கு,
என் மகளின், ஒரே தோழி-
அதுவும்,
உயிர்த்தோழியென்றால்,
எனக்கு,நீ
இன்னொரு மகள் அல்லவா ?
தோழிக்கு
எல்லாவற்றையும் கற்றுத் தந்தாய்.
சாவென்றால் என்னவென்று,
கேட்டாளா உன்னிடம் ?
சாவின் கொடூரத்தைக்
காட்டத்தான் மடிந்தாயா ?
வெள்ளை மனமே!
நல்ல இதயமே!
இன்னொரு பிறவி,நீ எடுத்தால்,
உன்னைக்கண்டு கொள்வாள்,
உன் தோழி.
உன் ஆத்மா சாந்தியடைய,
இதயமில்லா இறைவனை,
வேண்டிக் கொள்வதைத் தவிர,
வேறென்ன செய்ய முடியும்
எங்களால் ?
————————[என் மகளின் அன்புத் தோழி சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி கேட்டு எழுதிய
இவ்வரிகளை,அந்த நல்ல ஆத்மாவுக்கு,அஞ்சலியாக்குகிறேன்] சோகத்துடன் கோமதி நடராஜன்.
komal@ambalam.com
- கோழிச் சண்டையும், சந்தைக் கடையும்
- அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]
- நூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘
- உயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- தன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து
- உயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)
- இனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்
- அரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்
- யதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்
- குறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு
- சென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)
- கேள்வி -1 சண்டியர் தப்பு ! சாமி சரியா ?
- மடந்தையொடு எம்மிடை நட்பு
- காற்றாடி
- காதல் காதல் தான்
- ஆனாலும்…..
- சூழலைக் கெடுக்கும் ஊழலர்கள்
- முதல் சந்திப்பு
- என்னம்மா அவசரம் ?
- ஒற்றைவண்ணத்தில் ஒரு பூச்சி!
- சின்னச் சின்னதாய்…
- இது உன் கவிதை
- பைத்தியமானேன் வைத்தியமுண்டா
- மனம் தளராதே!
- காதலுடன் ஒரு சொற்றாடல்
- கரடி பொம்மை
- அரியும் சிவனும் ஒண்ணு
- என் கவிதைக்குக் காயமடி!
- ஒரு சொட்டு இரும்பு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு
- விடியும்! நாவல் – (6)
- கடிதங்கள்
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- பசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்
- சாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2
- அரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்
- வசிட்டர் வாக்கு.
- ஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்
- வாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)
- தேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல
- போராடாதே … பிச்சையெடு
- ஆசி
- பெண்ணே
- தவறிய செயல்கள்
- சார்புநிலைக் கோட்பாடு
- அரசியல்
- வெண் புறா
- என் ஜீவன் போகும்…