This entry is in the series 20040902_Issue

ஈழநாதன்


விடிவெள்ளிக்கு
வழிவிட்டு,
விலகும்
நட்சத்திரங்கள்.

பஞ்சுக்குழம்பாய்,
அலையலையாய்
செவ்வரியோடும்
நீல வானம்.

சாயம் போன
புதுத்துணிபோல்
காரிருள் குறைந்து
சாம்பல் பூக்கும்
சுற்றுப்புறம்.

சோம்பல் முறிப்பதுபோல்
மெல்ல மெல்ல
சலசலக்கும்
மரங்கள்,
பற்றைகள்.

காகக் கூடுகளையும்
தாண்டி,
வெளியே கேட்கும்
விவாதம்.

மலர முன்னர்
வெண்பனி சிலிர்த்து
வெது வெதுப்பு தேடும்
மொட்டுகள்.

எரிந்து கொண்டிருந்த
தெருவிளக்கணைந்து
எங்கணும்
ஒரு
நிசப்தம்.

இனி..!

விடியும்!

—-

eelanathan@hotmail.com

Series Navigation