This entry is in the series 20101017_Issue

ஹேமா(சுவிஸ்)


*************************************
ஓதிக் கட்டப்பட கயிற்றோடு
யானையின் முடியும்
சாத்தானின் சாபமும்
விஷத் தேளின் ஊர்ந்த எச்சமுமாய்
தோல் உரசிய காந்தலுடன்
முகம் தவறிய ஓர் நாளில்
பறந்துகொண்டிருந்தது
அந்தச் சர்ப்பம்.

சற்றுக் கண்மூடி மௌனித்த
அல்லது சைனித்த பொழுதில்
புணரியாய் திரண்ட கலம்
குறிச்சுவட்டில்
பாதை பிரித்து வகுத்த கோட்டுக்குள்
புத்தனாய் புத்திமானாய்
ஒரு சாடை.

நூதனமான ஒரு போதனையும்
அதன் ஏற்பாடுகளும் நிரம்பியிருந்தாலும்
தெளியவோ ஆராயவோ
திராணியற்ற ஒரு பொழுதில்
விடிகின்ற
காலையாய் அது!!!

Series Navigation