தேவைகளே பக்கத்தில்
Published February 19, 2004 • By
காளிதாஸ்
காளிதாஸ்

துயர வெள்ளத்தில்
தொலைந்துபோன இதயம்
கதறி அழைத்தது
ஆறுதலாய்த் தோள்தொடும்
எந்தக் கரத்துக்கும்
அடிமையாவேன் நான்
தெய்வம்
கல்லாகும்
கல்
தெய்வமாகும்
கால வெள்ளத்தில்
மறந்தது
துளிர்க்கும்
துளிர்த்தது
மறக்கும்
கால வெள்ளத்தில்
தர்மம்
அதர்மமாகும்
அதர்மம்
தர்மமாகும்
கால வெள்ளத்தில்
மரணப் பொறியில்
உயிரெலி வாசம்
நிரந்தரம் என்றால்
நியாய தர்மங்கள்
குப்பை மேடுகள்
சட்டதிட்டங்கள்
சாம்பல்
பொட்டலங்கள்
யார்
வைத்திருக்கிறார்கள்
இதயம் வருடும்
தோகைக் விரல்களை ?
மாற்று
நினைவு பொருத்த
எந்த விஞ்ஞானத்துக்கு
வக்கு இருக்கிறது ?
மன உயிர் பிரிந்தபின்
உடல் உயிர்
ஒட்டிக் கிடப்பதே
உண்மை நரகம்
உறவுகள் தூரத்தில்
என்றும்
தேவைகளே பக்கத்தில்
—-
kaalidas@hotmail.com