- நாற்காலி
- சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்
- உடலும் பிரபஞ்சமும் -தாந்திாீக கோட்பாடு பற்றி சில குறிப்புகள்
- என்னைக் கவர்ந்த என் படைப்பு
- அமெரிக்காவும் ஐரோப்பாவும் செவ்வாய் கிரகத்துக்குப் போட்டி
- 1,60,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரது எலும்பு கண்டுபிடிப்பு.
- அமெரிக்காவின் அலபாமா பிரெளன்ஸ் ஃபெர்ரி கொதி அணுமின் உலையில் ஏற்பட்ட தீச் சிதைவுகள் [Browns Ferry Boiling Water Reactor Fire Disa
- அறிவியல் மேதைகள் – கெக்குலே வான் ஸ்ட்ரெடோனிட்ஜ் ஃபிரெடரிக் ஆகஸ்ட் (Kekule Von Stradonitz Friedrich August)
- திராவிடக்கனவுகள்
- மனமொழி
- பிடிவாதம் (கடிதங்கள்)
- சிசு வதைப் படலம்!
- பிறழ்வு
- சித்தும் சித்தமும்!
- தவம்
- சார்ஸ் பிசாசே!
- காலி இருக்கைகள்
- ஏழையின் தேசிய கீதம்
- இந்தியர்கள் – 5 கவிதைகள்
- தொலைந்து போனவன்
- தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்
- குப்பைத் தொட்டியில் ‘குவா குவா ‘
- வாரபலன் – 6 சுற்றம் சுகம்(ஜூன் 7, 2003)
- குழாயடியில் ஆண்கள்
- பக்கத்து வீட்டு ப்ளாண்டும், பத்மாவும் :
- ஒரு மெளனத்தின் குரல்
- நீ ஒரு சரியான முட்டாள்!
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பத்து
- பறவைப்பாதம் – 5 (முடிவுப்பகுதி)
- கடிதங்கள்
- அய்யா
- சில குறிப்புகள் 14 ஜூன் 2003 (சண்டியர்-இண்டெக்ஸ் ஆன் சென்சார்ஷிப்-நேர்,சமூக அறிவியல்-பல்கலைக் கழகங்கள், அறிவுசார் சொத்துரிமை )
- மனம் உயர வழி!
- பன்னீர்த் துளிகள்
- குருடு, செவிடு, சனநாயகம்!
- அலைகள்
- நகர் வெண்பா இரண்டு
- உரை வெண்பா – வீதி
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 7
- நாளை நாடக அரங்கப்பட்டறை வழங்கும்
- சபலம்
பவளமணி பிரகாசம்

மகிழ்ச்சி என்பது பூவின் சிரிப்பு,
சுற்றிலும் மணக்கும், இனிக்கும்,
மலையை புரட்ட நினைக்கும்.
கோபம் ஒரு வசதியான கவசம்,
அடங்காமல் பொங்கி எழும் நுரை,
கண்டபடி தாக்கிட ஒரு நியாயம்.
தாபம் ஒரு தீராத தாகம்,
ஊனை, உயிரை உருக்கும்,
வானமும் வசப்படும்.
சோகம் ஒரு சுகமான போர்வை,
காயங்கள் ஆறுகின்ற அவகாசம்,
அழகான உண்மைகளின் ஊற்று.
வெட்கம் பிடிபட்டதின் வெளிப்பாடு,
விவகாரம் தவிர்க்கும் ஏற்பாடு,
வார்த்தைகள் வீணாய் தோன்றுவது.
பயம் மனதின் மதிசுவர்,
அனுபவ அறிவை அடைக்கும் தாழ்,
வேண்டாத வினைகளின் காரணி.
வெறுப்பு ஆன்மாவின் வியாதி,
மொட்டை கருக்கும் அநீதி,
வெளியேற விடாத வியூகம்.
சந்தேகம் தலைக்குள் வண்டு,
அனலாய் தகிக்கும் பெருந்தீ,
இக்கறைக்கு தேவை கிருமிநாசினி.
பொறாமை ஒரு கால் விலங்கு,
வலிய வளர்த்த முட்புதர்,
வலியும், பகையும் வழித்துணை.
மனதில் மோதும் அலைகள் இவை,
பொங்கி எழும், தழுவி நழுவும்,
சேதாரம், ஆதாயம் இரண்டுமுண்டு.
***
pavalamani_pragasam@yahoo.com