சாரங்கா தயாநந்தன்
என்னை ஒரு
வண்ணத்துப் பூச்சியாய்ப் பறக்கவிடு.
உன் ஆணிகள்
கவனத்துடன் அறையப்படுகின்றன,
என் உயிர்வசிக்கும் பிரதேசம் தவிர்த்து.
இறகினதும் என்னுயிரினதும்
துடிதுடிப்பை
நீ உணர்வதாயில்லை.
என்னிடமும் இருக்கின்றன பூக்கனவுகள்!
சுகந்த மலர்களை முகர்ந்தபடியான
அகன்ற வெளிப் பறத்தல்கள் பற்றி….
கால்களும் இறகுகளும்
சிதைவுறாதபடியான
என் தப்பித்தல் எத்தனங்களை
உன் ஆணிகள் நகைக்கின்றன.
அந்த நகைப்பு
என்னுணர்வுகளை மோதுகிறது
அவை முறிந்திருப்பினும் கூட
முயன்றிருக்கலாமெனும் வெறியூட்டி….
மெளனம் அறையப்பட்ட
சிலுவை தான் நான்.
எனினும் மனதுள் பாடியபடி
பறக்கவே பிறந்தேன்.
மரணம் தழுவமுன்பாக
விடு என்னை
ஆசைதீரப் பறக்க.
nanthasaranga@gmail.com
- பெரிய புராணம் – 45 ( திருக்குறிப்புத் தொண்டர் புராணம் நிறைவு )
- தலைப்பு
- ஆதி அதிகாரம்
- மூன்று சந்தோஷங்கள்
- ‘அந்நியன் ‘- சங்கருக்கு என்ன தண்டணை தருவான்… ?
- ‘ சுருதி பேதம் ‘ – சென்னையில் அரங்கேற்றம்
- முன்பட்டமும் பின்பட்டமும்
- மிஸ்டர் ஐயர்
- “பாரிஸ் கதைகள்” அப்பால் தமிழ் வெளியீடு…. விமர்சனம்
- நூல் மதிப்புரை- ‘ரமணசரிதம் ‘- கவி மதுரபாரதி
- சிறு வயது சிந்தனைகள் – என் பாட்டனார்
- உலகத் தமிழ் அடையாளமும் மலேசிய, சிங்கப்பூர் இலக்கியமும்-ஓர் எதிர்வினை
- கானல்காட்டில் இலக்கிய மான்கள்
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) கனடாவின் முதல் விமானப் பயணம் (பாகம்-4)
- துடிப்பு
- கீதாஞ்சலி (28) எங்கே உன் பாதை ? மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- மாயமான்
- விடு என்னை
- மனசில் தேரோடுமா ? (உரைவீச்சு)
- இன்றும் என்
- பெருநரைக் கிழங்கள்
- வேண்டிய உலகம்
- விடையற்ற வியப்புக் குறிகள்!!!
- ஒரு வழியா இந்த மெட்டிஒலி.. தலை வலி …
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 3
- புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சனைகள்
- கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெட்கக்கேடான வெற்றி
- வாடகைத்தாய்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-4)
- சனிட்டறி
- சிறகு
- திருவண்டம் – 5 (End)