This entry is in the series 20031127_Issue

விக்ரமாதித்யன்


உச்சபட்ச போதையில்
கண்டதென்ன
உச்சபட்ச போகத்தில்
கொண்டதென்ன
உச்சபட்ச வாழ்வு
என்னது
உச்சபட்ச பேறு
எது என்ன
ஒருகொடியில்
சில பூக்கள் போலவா
அக்கா மகளை மாமன் மகளை கட்டுகிற
சமூகம் நம்மது
வேறொருத்தியைத் தெரிய
நியாயமில்லை
காடென்றால்
கனவில்வருவது போலில்லை
கடலென்றால்
நினைவில் இருப்பது மாதிரியா
ஜீவராசிகள்
ரத்தம்சிந்தக்கூடாது
தாமிரபரணி வற்றினால்
தீ
பிள்ளைமார் தரித்திரம்
பெருந்தீ
ஒரு ஆறுதல்
நெல்லையப்பர் போல
புதுமைப்பித்தன்

**************************************

Series Navigation