This entry is in the series 20101219_Issue

செல்வராஜ் ஜெகதீசன்



#

இந்தக் கவிதை வரிகள்

உங்களுக்கானதாய் இல்லாமல் இருக்கலாம்.

அடுத்த வாரத்திலேயே

அதன் கோரப் பிடிகளுக்குள்

அகப்பட்டுக் கொண்டாலும்

அந்த ஏழு நாட்களில்

அங்கங்கு எதிர்ப்பட்ட

அத்தனை விதமான வாசனைகளையும்

அதன்பொருட்டு கொண்ட

கைவிரல்களின் ஆட்டத்தையும்

வெற்றி கொண்ட பொழுதுகள்

வெறும் வெற்றுச் சாதனை என்று

சொல்பவர் நீங்களென்றால்

இந்த கவிதையின் முதல் இரண்டு வரிகளை

இன்னுமொரு முறை படியுங்கள்.

o

Series Navigation