சாரங்கா தயாநந்தன்
திருநிலமே தாயே
நீ நலமா ?
இருவருடங்களாயிற்று
உன்மடி முட்டி.
எனினும் பிரிவில்லை.
உயிர் கலந்தாய் அம்மா
ஆதலினால்
தினமுன் முகமுலவும்
மனம்.
புல்,பூண்டு ,பூச்செடிகள்
புதுத் தாளம் இயற்றுகின்ற
வயற்குருவி
நெல், நெடுபனை , நீலஏரி
நிதமுமங்கு பாடுகின்ற
நீர் நாரை
கல் கடல் கனிமரங்கள்
கண்மலர்ந்த பூமியிலே
வாழும் மக்கள்
எல்லாம் நின்றுலவும்
நெஞ்சம்.
இன்று வாடிக் கிடக்குதம்மா.
மூடிக் கிடந்த போரூற்றின்
வாயிலிலே
மீள்திறப்பின் ஆரவாரங்கள்.
ஆழ் மனசு துடிக்கிறது.
உன்னிடத்தில் வாழ்கையிலே
ஆடி களித்திருந்த
அற்புத நாள்களினும்
உயிர் காவி
ஓடித் திரிந்த நாள்கள்
அதிகம் தாயே.
மீளவும் ஓர் போர்ப்பாட்டா ?
நினைவே மிகக் கொடுமை.
அமைதியுறுவாய் தாயே.
உன்குடிகள் மகிழ்ந்திருக்க
முன்னேற்றம் பல நிகழ
நிதம் மலர்வாய் அம்மா
நித்ய பூஞ்சிரிப்போடு.
—-
nanthasaranga@gmail.com
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- அமைதியுறுவாய்
- அடுத்தவன் மனைவியை கவர்வதெப்படி ?
- வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூள்கள் ஆய்வு -2 (Stardust Program: Comet ‘s Coma Sample Analysis)
- சி. கனகசபாபதி நினைவரங்கு
- நான் கண்ட சிஷெல்ஸ் -8. நீதித் துறையும் மற்றவையும்
- குறளும் பரிமேலழகர் உரையும்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு : ஒரு பார்வையாளனின் பார்வை
- உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் – நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல் ‘
- நடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி ‘யும்
- சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)
- தவமாய் தவமிருந்து
- கடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்
- பிளவுண்ட இந்து சமூகம்… எதிர்வினை
- கடிதம்
- ஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு இயல் விருது
- நனையத்துணியும் பூனைகள்
- அந்த நாள்
- கீதாஞ்சலி (59) மனமில்லாத யாசகன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- காசாம்பு
- எ ரு து ( மூலம் : யே ஷெங்டவோ(சீனா))
- ப்ளூஸ்(1) பாடல்களுக்கான நேரம்.* (மூலம் : தொனினோ பெனக்கிஸ்ட்டா (Tonino BENACQUISTA))
- காதல்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 6
- மதமாற்றம் எனும் செயல் குறித்து
- அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ?
- அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ? – 2
- விவாதம்:தெளகீது பிராமணியத்தின் நுனிப்புல் மேய்ந்த வார்த்தைகள்
- யூத மெஸையாக்கள் (Messiahs)
- மார்க்கோ போலோ பயணக் குறிப்புகளிலிருந்து.
- ஆப்பிள் பெண்ணுள் எாியும் நிலவுகள்–(1) (பாப்லோ நெருடாவின் கவிதை தமிழாக்கம்)
- மின்சாரப்பூக்கள்…
- ஸி. செளாிராஜன் கவிதைகள்
- சாதனை
- ஒரு திருத்தம்