This entry is in the series 20091023_Issue

செல்வராஜ் ஜெகதீசன்



இரவின் அமைதியில்
மகனிடமிருந்து
வந்து விழுந்தன
வரிசையாக கேள்விகள்.
‘பெரியவன் ஆயிட்டதால
சீனியர் கேஜி போய்ட்டனா’ என்றான்.
ஆமாமென்றேன்.
‘ஜூனியர் கேஜிக்கு பின்னே
சீனியர் கேஜியா’ என்றான்.
ஆமாமென்றேன்.
‘பெரியவனானப் பின்
சின்னவனாக முடியாதில்லை?’ என்றான்
அப்படியொன்றும்
சொல்வதற்கில்லை என்றேன்.

o
jagee70@gmail.com

Series Navigation