திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

எதிரும் நானும்…

சு.மு.அகமது வலி விழுங்கும் தருணங்கள் மென்மையாய் நழுவுகிற இளமை குளிர் போர்த்தின சூட்டுடல் ஆடை இறக்கின அம்மணத்தில் அதிர்ச்சியின் அதிர்வலைகள் உதிரும் இலைகளின் ஊடாய் மெல்லப் பறக்கும் பறவையின் சிறகாய் நேர்த்தியின் சூத்திரம் மனதில்…

மீளல்

வருணன் தூரத்து தொழற்சாலையின் சங்கொலி நேர மாற்றத்தை ஊதுகின்றது. வெளிவரும் ஊழியனின் களைப்பும் உள்வருபவனின் மலைப்பும் ஒரு கவிதை புத்தகத்தின் முதல்,கடைசி பக்கங்களாய் அருகிருந்தும் மிக தூரமாய். பாராட்டப் படாத அவனது உழைப்பிற்கான ஊதியம்…

கூழாங்கல்…

ஹேமா சுவிஸ்*********************** ஆற்று நீரின் ஓட்டத்திற்கேற்ப உருண்டுகொண்டேயிருக்கிறேன். குதித்தும் தாவியும் நொருங்கியும் கரைந்துமாய் சிக்கிக்கொண்டாலும் தடையறுத்த ஆறுதல் எவருக்குமில்லை. உருண்டுகொண்டேயிருப்பதால் அறுபட்ட சில நிகழ்வுகள் மாறி மாறி... இருள் ஒளி கடக்கும் முகடுகளில் பட்டாம்பூச்சிச்…

பிடித்த தருணங்கள்

சின்னப்பயல் பிடித்த நபர்களுடன் விலாவரியாகப்பேசிவிட்டு ஆசுவாசமாக அமர்ந்திருக்கும் தருணங்கள் கண்களாலேயே கவிதை பாடிவிட்டு பிறகு அதை நினைத்து அசை போடும் தருணங்கள் நீண்ட பயணத்தில் முன்பின் அறிமுகமாகதவர்களிடம் பொதுவான விடயங்களைப்பற்றி மட்டும் பேசிக்கொள்ள இயலும்…

தன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி

ஹெச்.ஜி.ரசூல் என்னிடம் தொலைவிலிருந்து பேசிய குரல் ஆணா பெண்ணாவென தெரியவில்லை. என் கைவசமுள்ள ஓலைச்சுவடி ஒன்றை முன்னூறு வருடங்களாக தேடித் திரிந்ததாகவும் தற்போது அதன்விவரம் தெரியவந்ததாகவும் மிகவும் தணிந்தகுரலில் சொல்லி அதை கொடுத்துதவ வேண்டியது.…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லஷ்மணன்1.சார்பு நிலை.. ********************** சிரசு பலவானாலும் அங்குசமற்ற மூளைகளோடு.. வெட்ட வெட்ட மகிஷாய் கிளைக்கும் தலைகளோடு.. நாலாவதைக் கிள்ளி எறிந்தாலும் எள்ளலோடு.. வடக்கில் தலைவைத்து வெட்டி ஒட்டிய முகத்தோடு கண்ணாடியைக் காணும்வரை பூனையின்…

கனவில் வந்த கடவுள்

துவாரகன் - ஒருநாள் என் கனவில் கடவுள் வந்தார் தான் யார் என்று கேட்டார் கடவுள் என்றேன் எல்லாம் அறிந்தவர் எங்கும் நிறைந்தவர் எல்லோரையும் காப்பவர் அவரே கடவுள் என்றேன் ஆனாலும் கடவுள் மிகக்…

தனித்துப் போன மழை நாள்

ஷம்மி முத்துவேல் நீயே இருந்து இருக்கிறாய் வலியின், ஒவ்வொரு துளி விழிநீரின் தாக்கத்திற்கான பிண்ணனியில் சத்தியமாகத் தெரியவில்லை இதுவரை எனக்கு நீயே வியாபித்திருந்தது என் அனைத்திலுமாக இருட்டடித்திருந்தன பழைய நினைவுகள் இருந்தும் காந்த விசை…

என்ன உரு நீ கொள்வாய்?

காளி நேசன் -- உலகில் எதுவும் நிலையிலி ஒரு கலைஞனின் படைப்பில் உலவும் கதா மாந்தர்களன்றி! காலத்தை வெல்லும் கலைகள் காட்டும் உன்னத இலட்சியங்களை! காலத்தை கடந்து நீ உலவ என்ன உரு கொள்வாய்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ எது பொய் ? எது மெய் ? ************************************ "உன் ஆத்மாவிலிருந்து நீ வினைகள் புரியும் போது ஓர்…