மெளனமான கொடூரம்

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

வே பிச்சுமணி


புதைக்கப்பட்ட பிணங்கள்
உடற்கூறு ஆய்வுக்காக
மீண்டும் தோண்டி
எடுக்கப்பட்டு கிடக்கின்றன

குடலை பிடுங்கும்
நாற்றம் வீசுகிறது
உறவுகள் பொறுத்து நிற்கின்றன
எதிரிகளும் கூட அப்படியே

சிங்கம் வேட்டையாடி
உண்டு மிஞ்சி விட்டு சென்ற
காட்டெருமை உடலை
கழுதைபுலிகள் குதறி தின்கினறன

மருமகளால் உன் அம்மா
வருத்தமடைகிறாளென
உனக்கு ஏற்படும் ஆதங்கத்தில்
பங்கேற்றொரு நடிப்பு

அடிமனதில் கொடூர சந்தோஷம்
பூப்பதை கண்களினோரம்
மறைக்க திரும்புகையில்
இதழ்களில் வடியும் குருதியை
துடைக்காமல் நிற்கும்
எதிர்வினை செய்யாத
என் பலநாள் மெளனம்

v.pitchumani@gmail.com

Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி