- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 8
- ஓரின காதல் – வரவேற்கத்தக்க ஒரு சட்டதிருத்தம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -43 நீ ஒரு தென்றல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் கீதம் கவிதை -12 பாகம் -2
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி காலாக்ஸி எப்படி இயங்குகிறது ? (கட்டுரை: 60 பாகம் –
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -2
- வார்த்தை ஜூலை 2009 இதழில்…
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தாவது அத்தியாயம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு
- முத்துக்கமலம் இணைய இதழ்
- அவள் ஒரு தொடர்கதை
- “இரவலனாய் மாறிய மன்னன்”
- வேத வனம் -விருட்சம் 40
- மைக்கல் ஜாக்சன்
- பதின்மம்
- வானம் பாருங்கள்
- Satsang led by Sri Nithya Bhaktananda Swami a direct disciple of Enlightened Master Paramahamsa Nithyananda
- அறிவியல் புனைகதை: ‘பிறர்’ என்ற எதிர்காலம்
- நண்பர் வஹாபிக்கு நன்றி
- நான் முடிவு செய்கிறேன் உன்னை
- KhudaKayLive (in the name of god) திரைவிமர்சனம்
- இருட்டுக்குள் தீப்பிளம்பு…
- சித்திர சிற்பி, புதிர் குரு= தமிழில் இரண்டு மென்பொருட்கள்
- அவரவர் திராட்சை..
- ஜன்னத்தில் மதுக்குடங்கள் தாங்கிய 72 சுவன கன்னிகைகளை எதிர்நோக்கி
- எதிரும் புதிரும்
- உயிர்த்தெழுதல்…
- கரியமில இரகசியம்
எஸ்ஸார்சி
இந்திரன் குதிரையொடு
சூரியன் தந்தான்
வலிமைபெறப் பால் பொழியும்
ஆநிரை தந்தான்
பொன் தந்தான்
போரில் தச்யுக்களை கொன்றான்
ஆரியர்க்குக் கிட்டியதோ
புது வாழ்வு ( ரிக் 3/34)
அஹியைக்கொன்றபோதும்
சம்பரனை வென்றபோதும்
ஆநிரைகள் மீட்டபோதும்
துணை நின்ற
மருத்துக்களோடு
கூடித்தோன்றிய இந்திரன் நீ
உடன் சோமம் பருகுக. ( ரிக் 3/47)
இந்திரனே நின் தந்தை
கசியபன்
தாய் அதிதி
தாய்முலைப்பாலைப்
பருகுமுன்
சோமம் சுவைத்தவன் நீ ( ரிக் 3/48)
விண்ணிலும் மண்ணிலும்
பரவி வளம்
தருவான் இந்திரன்
அவன் சுந்தரன்
வழிபடுவோர்க்கு
தந்தையாகி நிற்பான்
எப்போதும் அழைக்கத்தகுந்த அவனோ
அன்னம் பாலிப்பவன் (ரிக் 3/49)
இந்திரனே ஏ சூரனே
உத்தமன் நீ
காப்பாய் எங்களை
எங்களை பகைப்பவன்
தாழட்டும் வீழட்டும்
அழியட்டும்
கோடரிகொண்டு
மரம் கழிபடுவது போல்
பகைவன் சிதைவுறட்டும்
கொதியுறும் உலைப்பாத்திரம்
கக்கும் ஆவிபோல்
பகைவன் வாயிலிருந்து
நுரை ஒங்கி எழட்டும்
விசுவாமித்திரன் ஒர் சிறு பசுவா
அவனைச்சுற்றி
இப்படிப்பகைத்து நிற்கிறீர்கள்
ஏதும் தெரியாதவனை
தெரிந்தவன் ஏளனம் செய்யான்
குதிரைவரிசைக்கு முன்னே
கழுதையொன்றையா
இட்டுச்செல்வது
வசிஷ்டர்களை எதிர்க்க
பரதப்புதல்வர்களின்
குதிரைகள் தயார்தான்
ஆயினும் அழிப்பதுவே குறிக்கோள் அன்று ( ரிக் 3/53)
——————————————————-