தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
எதனையும் வெல்பவனே !
தயக்க மற்றுப் புதிய
இயற்சக்தி பெற்றவனே !
உதிர்ந்த பூக்கள் சிதறி
ஏராளமாய்
விழுந்த கிளைகளில் எல்லாம்
இளங் காய் கனிகள்
முளைத் தெழுவது போல்
பழைய விதைகளைத்
தூவிக் கொண்டு
பிரமிப்பான நூதன வடிவோடுன்
பேருருவம் தெரிகிறது
பூரணத் தோற்றத்தில்
உனக்குரிய
உள்ளடங்கு வலு வோடு !
சிரம் தாழ்த்து கிறேன்
நானுனக்கு !
++++++++
பயமூட்டுவாய் நீ ! இனிய
அமுதூட்டுவாய் நீ !
களைப்படை யாதவனே !
கரைந்து தேய்வடை யாதவனே !
புதிதாய் உதித்த
போராட்ட வாதியே !
என்ன ஊழ்விதியை வைத்துள்ளாய்
உன் கைவசம்
என்பதை நீயறி யாயோ ?
முகிற்பிடியில் சிக்கிக் கொள்ளாது
பகலவனின் கதிர்க்கனலில்
பட்டொளி வீசிப்
பறக்குதுன் கொடி அங்கே !
உள்ளங் கைகளை மூடிக் கொண்டு
வானோக்கிப் பார்க்கிறேன் !
உன் கரம்
என்ன எழுதி வைத்துள்ளது
என்று நான்
படிக்க முடியாது !
சிரம் தாழ்த்து கிறேன்
நானுனக்கு !
*********************
Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 2,, 2008)]
- கடவுள் பேசுகிறார்
- காலம் தோறும் பெண்கள்
- கல்வி: காமராஜின் கனவுகள் நினைவாகும் காலம் இது!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 10 (சுருக்கப் பட்டது)
- பாவாணரின் ‘திரவிடத்தாய் ‘
- கனவுகளில் தொலைந்த..
- தாகூரின் கீதங்கள் – 34 சிரம் தாழ்த்துகிறேன் நானுனக்கு !
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- சிறுகதைத் தொகுப்பு “கலவை” வெளியீடு
- கருமையம் நான்காவது நிகழ்வின் விமர்சனக் கூட்டம்
- தேவாலய மரங்களின் கஞ்சத்தனம்
- காலத்தின் சார்பு நிலை!
- காற்றினிலே வரும் கீதங்கள் – 22 பிறப்பும் இறப்பும் ஒழிப்பாய் !
- அரிதிற் கடத்திகள்
- போராளி கவிஞர் சுகுதகுமாரி : ” நான் சாதிச்சதே கல்யாணத்துக்குப் பிறகுதான்!”
- நம்பிக்கை தரும் நாம்-2
- நதியலை தீரத்தில் யாசித்த பறவை
- எழுத்துகலைபற்றி இவர்கள் – 22 – எம்.டி.வாசுதேவன் நாயர்
- யானை வந்துச்சு..!
- அன்புடன்…
- தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் தொடக்கவிழா
- கடிதம்
- ஆதி காக்கா முதற்றே உலகு
- ஹிட்லிஸ்ட் – ல் பெயர் வருவதற்கு
- NFSC and SHIKSHANTAR Jointly present film screening -” Great Indian School Show ” by Avinash Deshpande (India)
- சுப்ரபாரதிமணியனின்” ஓடும் நதி ” – ஒரு குறியீட்டு நாவல்
- வானம் ஏன் மேலே போனது? – இலங்கை பெண்எழுத்தாளர் விஜயலட்சுமி சேகா¢ன் படைப்புலகம்
- காதலில் தொடங்கிய என் பயணம்
- பக்தி இலக்கியங்களில் மனிதவள மேம்பாடுகள்
- செவ்வாய்த் தளத்தின் முதல் சோதனைச் செம்மண்ணில் பனித்திரட்டைக் கண்ட ·பீனிக்ஸ் தளவுளவி (ஜூன் 5, 2008)
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 14
- சாபத்தின் நிழல்
- நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-1 (காளியப்பன்)
- வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்!
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 8
- 1988-ம் வருட விபத்து
- நினைவுகளின் தடங்கள் -(11)
- ஜெகத்ஜால ஜப்பான் 13. அசோபிமசு
- சொல்ல முடியாத பாடல்