வருவதுதான் வாழ்க்கை
Published January 10, 2008 • By
புகாரி
புகாரி

காலைக்கும்
கனிவுக்கும் இடையில்
எச்சில் புரை ஏறியது
உயிரையே வெளியேற்றி
அதன் வள்ளுவ நாயகி
நீயாய் இருக்கமாட்டாயா
என்ற பேராசையில்
செருமிச் செருமிச்
செருமிக்கொண்டே
இருக்கிறேன்
புல்நுனி நீர்ப்பொட்டே…
எத்தனைமுறை
நினைத்திருப்பாய்
நீ என்னை
மறந்தாவது ஒருமுறை
என்னிடம் சொல்லக்கூடாதா
உன் ஆசை மின்னலைகள்
அலையும் வெளிப்பரப்பை
அறியாதவனா நான்
ஏனிப்படி
நாடக இமைகளுக்குள்
சுடர்மணி ஒளித்து
உன்னையே வதைக்கிறாய்
வா…
வருவதுதான் வாழ்க்கை
வேறெதற்கும் வாழ்க்கை
என்ற பொருளில்லை
anbudanbuhari@gmail.com