மகத்தானவர்கள் நாம்

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்)


இந்தப் பூ
வண்ணங்களாய்…
எண்ணங்களாய்…

ஓர்
அழகிய ஒழுங்கில்
சிரிக்கிறது

ஒழுங்காய் இருந்து
அழகைச்சொல்கிறது

ஒழுங்காய் இருந்து
அழகாய்ச்சொல்கிறது

இயற்கையாய்ச்
சிரிக்கிறது

என்னைப்போல் ‘சிரி’
என்கிறது

“நான்தான் புன்னகை”
முன்மொழிகிறது

இன்னும்
சொல்லாமல் சொல்பவை:

எதையும் மறைக்காமல்
சிரிக்கிறேன் நான்

காயும் நான்
கனியும் நான்

உங்களைப்போல் நான்
பிணமாவதில்லை
கனியாகிறேன்

நான் மரத்தில்
செடியில் கொடியில்
கனியாகிறேன்

சொல்வதையெல்லாம்
கனியாய்ச்சொன்னால்
கனிவாய்ச்சொன்னால்
நீங்கள்
கனிகளின் மரமாகலாம்

என் மணம்போல்
உங்கள்
மனத்திற்கும்வேண்டும் மணம்

என்னிடம்
மணத்துடன்கூடிய மனமும்
உங்களிடம்
மனத்துடன்கூடிய மணமும்
இருந்தால்
நாம்தாம் மகத்தானவர்கள்.

எல்லாம்
என் விழித்தலில் இருக்கிறது
தேவதையின் தரிசனம்

என் தேடலெல்லாம்
தேவதையின் தரிசனமல்ல
தேவதைதரும் தரிசனம்

அங்கிருந்துதான்
என் திசைகள் தொடர்கின்றன

அந்த விழுதைப்பற்றித்தான்
தொங்கினேன்;ஆடினேன்

அந்தக்கணத்தில்தான்
தேவதையின்
சிறகுகளைப்பொருத்திக்கொள்கிறேன்

இருளில் ஓர் ஒளி
நெளியிது பாம்பாய்

பகலில் ஓர் இருட்டு
தெரிகிறது வெளிச்சமாய்

கனிகள் என் கைகளில்

எல்லாம்
அந்த ….


03.12.2006

pichinikkaduelango52@gmail.com

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ