தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

தி.கோபாலகிருஷ்ணன்


1.

கடிதம் வராமல்
சோர்ந்த வேளையில்
அழைப்பிதழ் வந்தது.

2.

எந்த முகவரிக்கு
அஞ்சல் பெட்டியில்
எச்சமிட்டது காகம் ?

3.

பசுவையும் கன்றையும் பிரித்துக் கட்டி
பால்காரி அமர்ந்தாள்
மார்பில் குழந்தையுடன்

4.

பாக்கெட்டில் பணம் இருக்கும்
கவலையின்றி
பிக்பாக்கெட்

5.

இளைய தாரத்தை
சிரித்து வரவேற்கும்
காலண்டர் குழந்தைகள்

gk_aazhi@rediffmail.com

Series Navigation

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி


1.

இருட்டறைக்குள் தள்ளி அடைத்தேன்.
இருட்டையே விரட்டி விட்டது
தீபம்.

2.
பனி முத்துக்களை
இந்தக் கிண்ணத்தில் த ‘ன் சேர்த்து வைத்தேன்
எங்கே ?

3.
திருட்டுப் பூனை
குடித்துவிட்டது
கன்றிடமிருந்து திருடிய ப ‘லை

4.
சிலந்தி வலையில்
சிக்கியது
பனித்துளி

5.
ஓட்டையை அடைக்குது
ஊசி
குத்திக் குத்தி

***
gk_aazhi@rediffmail.com
thigopalakrishnan@ambalam.com

தி.கோபாலகிருஷ்ணன்

Series Navigation

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி