நகர் வெண்பா இரண்டு

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

மத்தளராயன்


நகர் நீங்கு படலம்
——————–

(நகருக்கு வெளியே போனால் தான் டிரான்ஸ்பார்மர்களின் சங்கீதத்தையும், முழு நிலவையும் அனுபவிக்க முடிகிறது)

பாடிடும் மின்கடத்தி மோதிப் பனந்தலையில்
ஆடிடும் காற்றில் அகல்வழி – ஓடியே
நகர்ந்து பிடியென்று ஒளிந்தேதான் சீண்டும்
நகரில் வராத நிலா.

துக்க தினம்
————

இறந்த தலைவன் நினைவில் கொடிகள்
பறக்கப் பகுதி தழைத்து – இறக்கிக்
கயிலி இறுக்கிக் கரத்தில் எடுத்து
வெயிலில் புகையும் சுருட்டு.

மத்தளராயன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்