ஆத்ம தரிசனம்

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

அனந்த்


உலகினிலே வளையவரும் தேகம்
உறும்வினைக்குக் காரணமாம் மோகம்

…. விலகிநின்று செயல்புரியும்
…. விதமுணர்ந்தால் அதில்தெரியும்

அலகிலாத அருள்நிலையே யோகம்!

***

உடலிதுதான் ஊனமுற்ற போதும்
உள்ளமதில் ‘நான் ‘எனவெப் போதும்

…. தொடர்ந்துவரும் கனவினிலும்
…. படர்ந்துவரும் ‘நான் ‘அறிந்தால்

அடங்கிடுமே அகிலமுள்ள யாதும்!

***

உள்ளமதன் உள்ளையும்நாம் கண்டு
உணருமொரு பரவசமும் உண்டு

…. கள்ளமிலா மகிழ்ச்சிநிலை
…. கருத்துமற்ற நெகிழ்ச்சிநிலை

தெள்ளியதை யார்க்குரைப்போம் விண்டு ?

***
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்