- அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?
- தொலைந்த கிராமம்
- இந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்
- ஏழைகளின் சிரிப்பில்
- வாழும் பூக்கள்
- ஜாதிக்காய் கிராமத்தின் அழிவு
- மாய ருசி
- சாகித்திய அகாதமியின் : Writers in Residence
- காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தில்
- ப.மதியழகன் கவிதைகள்
- அம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்
- அடையாளம்
- விரல் வித்தை
- மனிதர்கள் எந்திரர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கவேண்டும்
- மொழி வளர்ப்பவர்கள்
- ‘யோகம் தரும் யோகா
- மறுபடியும் பட்டு அல்லது காஞ்சீவரம்
- பலிபீடம்
- சமாட் சைட் மலாய் கவிதைகள்
- எட்டிப் பார்க்கும் கடவுளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்
- “அநங்கம்” மலேசிய இலக்கியத்தின் மாற்று அடையாளம்
- பெண் கவிதைகள் மூன்று
- இரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை
- தலைவன் இருக்கிறார்
- ஜனா கே – கவிதைகள்
- பிணங்கள் விழும் காலை
- அரிதார அரசியல் – பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி..
- “தவம் செய்த தவம்” – கவிதை நூல் பற்றிய சில எண்ணங்கள்:-
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
மலேசிய இலக்கியத்தின் தீவிர களமான அநங்கம் இதழ் தொடர்ந்து தனது 5ஆவது இதழைப் பிரசுரித்துள்ளது. உள்ளூர் படைப்பாளிகளின் படைப்பு களமாகவும் சிங்கப்பூர்/தமிழகம்/அயலக படைப்பாளர்களின் பகிர்வு களமாகவும் அநங்கம் தனது எல்லையை விரித்துக் கொண்டு தனித்த அடையாளங்களோடு கொண்டு வரப்படுகின்றன. இம்மாத அநங்கம் இதழ் புறக்கணிக்கப்பட்ட மறக்கப்பட்ட கலைகளின் சிறப்பிதழாக வந்துள்ளது. மேலும் அடுத்த இதழ் சிறுகதை சிறப்பிதழாக மலரவிருக்கின்றது.
தொடர்பிற்கு: கே.பாலமுருகன் (ஆசிரியர்)
http://bala-balamurugan.blogspot.com/
bala_barathi@hotmail.com
ananggam@hotmail.com
இம்முறை அநங்கத்தில்
சண்முகசிவா பக்கம்
மொழி பிரதானமாக ஒரு தொடர் பாடல் சாதனம் என்ற வகையில் மொழிமரபு நவீன தொடர் பாடலுக்கு இடையூறாக அமையும்போது அம்மரபு மாறவேண்டியிருக்குமே தவிர மரபைப் பேணுவதற்காக மொழி தன் தொடர்ப்பாடல் திறனை இழந்துவிடக்கூடாது. . .
விமர்சன நூல்களில், உரையாடல்களில், கருதரங்குகளில், நவீனத்துவம் என்ற சொல்லே மிகுதியாக பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது, இருந்தும் வருகிறது .. . மேலும். . .
நமது கலாச்சார ஆவணங்கள் கொண்டாடப்படவில்லை
நிச்சயமாக. பூஜாங் பள்ளத்தாக்கின் ஆவணங்கள் அங்குள்ள மக்களால் தோற்றுவிக்கப்பட்ட கலாச்சாரம் கிடையாது. அதனால்தான் வெகு சீக்கிரத்திலேயே நிராகரிக்கப்பட்டது. மக்களால் தோற்றுவிக்கப்பட்ட கலாச்சாரமாக இருந்திருந்தால், அது அழிந்து போகவோ நிராகரிக்கப்படவோ மறைக்கப்படவோ வாய்ப்பில்லை. பிற்காலத்தில் பூஜாங் பள்ளத்தாக்கில் குடிபெயர்ந்த இனத்தால் சண்டி ஆவணங்கள் நிராகரிப்பட்டுள்ளது. இதெல்லாம் கபீர் வழிபாடுகள் என அடையாளப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது.. . . . மேலும் விரிவான கலந்துரையாடல்
மலேசிய தமிழ் இலக்கிய போட்டிகளின் அரசியலும் அலட்சியமும்-கே.பாலமுருகன்
சிறிதளவும் இலக்கிய நாட்டம் இல்லாதவர்களும் இலக்கிய ஆளுமை இல்லாதவர்களும் நடத்தும் இலக்கிய போட்டிகள் கூழிக்கு மாறடிக்கும் தன்மையைப் பெற்று அரசியல் குப்பைகளால் நிரம்பி வழியும் சகதியாகவே மாறிவிடும் என்பதில் சந்தேகமிருக்க வாய்ப்பில்லை. அது அந்த இயக்கத்தின் ஒரு செயல்பாடாகவோ அல்லது அவ்வாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாகவோ நடந்து முடிந்துவிடுகிறது.இதன் விளைவு குறித்தும் நோக்கம் குறித்தும் எவ்வித பிரக்ஞையும் இல்லாமல் தான் சார்ந்திருக்கும் இயக்கம் / பல்கலைக்கழகம் செயல்திட்டத்தின் முழுமையைப் பெறுவதற்குத் தொண்றாட்டும் கடமைக்குப் பங்காற்றும் சந்தா கட்டி தனது உறுப்பியத்தைப் புதுபித்துக் கொள்வது போல இலக்கிய போட்டி நடத்தி தனது பெயரைப் புகழைச் செயல்பாடுகளின் மீதுள்ள பிடிப்பை. . . .
ஏ.தேவராஜன் தலையங்கம்
திருவிழாவின் இரத ஊர்வலத்திற்குப் பின் நடந்தேறும் கச்சேரிகளில் நாடகமும் இடம்பெற்றிருந்தது. ஓரளவு தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த அன்றைய தமிழாசிரியர்களிடம் நூல்களைப் பெற்று அவற்றிலுள்ளவற்றை நாடக வசனமாகத் தீட்டி அவற்றிற்கு உயிரூட்ட உள்ளூர் இளைஞர்களைப் பயிற்றுவித்துள்ளனர் அன்றைய கலைஞர்கள்.
பூர்வ குடி தோழர் சொன்னது- அ.விக்னேஷ்வரன்
காட்டில் இருந்த பூர்வக் குடி மக்களால் ஏன் அவர்களை எதிர்க முடியவில்லை? அவர்கள் இனத்தால் சிறுத்திருந்தார்களா? பலத்தால் வலுவிழந்து இருந்தார்களா? கொள்ளையர்களின் ஆயுதங்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லையா? யார் இந்த கொள்ளையர் கூட்டம்?. . . மேலும்
கடைசி மணியின் அவலச் சத்தம்-கோ.புண்ணியவான்
எனக்கு முன்பே என் மனைவி சில அடிப்படை தமிழ்ப் பயிற்சிப் புத்தகங்களை அவளிடம்கொடுத்து பயிற்சி செய்வித்து வந்திருக்கிறாள். இந்தக்கதைப் புத்தகங்களைப் பார்த்தவள் சிவ பூஜைக்குள் கரடி நுழைந்துவிட்டதாய் திடுக்கிட்டு இதனை அபகரித்து “பரீட்சையில அவள் நல்ல மார்க்கு வாங்கணும், மொத இதெல்லாம் செய்து முடிக்கட்டும் பின்னால கதையப்படிக்கலாம்,” . . . .
பாட்டியின் இரகசிய சமையல் குறிப்புகள்-யோகி
“என் அம்முச்சி பட்டமிளகாயைக் காயவைத்து அம்மியில் அரைத்துக் கறிவைப்பார். அந்த மாதிரி குழம்புவகைகளை சாப்பிட என் பிள்ளைகளுக்கு கொடுத்து வைக்கல” என்பார் என் பாட்டி. குலதெய்வத்திற்குப் படையல் சமைக்கும் போது மூக்கையும் வாயையும் துணியால் கட்டி வாசனையை. . .
பாதுகாக்காத படைப்பு – சேர்த்து வைக்காத சொத்து-சிதனா
அப்பாவுக்கும் இரயில்வேயில் வேலை. குடியிருந்த ஜாலான் டிறவர்ஸில் வீட்டிற்கருகிலேயே இரயில்வே டிஸ்பன்சரி. பின்பக்க கதவைத் திறந்து கொண்டு, காலில் சிலிப்பரை மாட்டினால், மிஞ்சி போனால் மூன்று, அதிகமாக போனால் ஐந்து நிமிடத்தில் டிஸ்பன்சரி வாசலில் நிற்கலாம்.
“வாடா மல வத்துமல
வாடா போவோம் பத்துமல
பத்துமல மாதா பெரிய சக்தி- . . . .
சிறுகதை: புறா- க.ராஜம் ரஞ்சனி
புறாக்கள் தங்கள் விஜயத்தின் போது எச்சத்தைத் தவறி விட்டுச் செல்வது அவர்களைக் கோபத்திற்கு உள்ளாக்கியது. வீட்டின் முற்றம் புறாக்களால் அசுத்தமாவதை அவர்கள் கொஞ்சமும் விரும்பவில்லை. அந்தத் தருணங்களில் புறாக்கள் மீது நிறைய கோப வெடிகள் வெடித்து சிதறும்.
சிறுகதை : யார் அந்த சண்முகம்?- முனிஸ்வரன்
“செண்பகம், யார் இந்த சண்முகம்? கண்டவனோட சாமானெல்லாம் உன் பையில வச்சிருக்கயே? உனக்கும் இந்த சண்முகம்ன்றவனுக்கும் என்ன சம்மந்தம்?” என்று இறுக்கமான முகத்தைக் காட்டிக் கேட்டேன். . . .
-கே.பாலமுருகன்
மலேசியா
+60164806241