This entry is in the series 20100115_Issue

ப.மதியழகன்


கீழே குனிந்தவுடன்
பின்வாங்கி ஓடும்
நாம் கல்லைத்தான் தேடுகிறோம்
என்று நினைத்து
நேருக்குநேர் அதன் கண்களை
சந்தியுங்கள்
புனிதப் போருக்கே தயாராகும்
அந்த நாய்கள்
எதையுமே அதன் கண்களால்
காணமுடியுமென்பதால்
அது எதையுமே கண்டு
ஆச்சர்யம் கொள்வதில்லை
வெட்கம் கொண்டு,
மனிதர்களைப் போல்
அது காமத்தைக் கூட
மூடி மறைப்பதில்லை
வானுக்கு கீழே அதன் வாழ்க்கை
திறந்த புத்தகமாய்…
சுவர்களுக்கு மத்தியில் தங்களை
மறைத்துக் கொள்ளும்
மனிதர்களைக் கண்டு
எள்ளி நகையாடுகின்றன
வீதியில் படுத்துறங்கும் நாய்கள்.

ப.மதியழகன்,

Series Navigation